1586 மாசி அமாவாசை தினத்தில் பாராயணம் செய்ய வேண்டிய வேல் வகுப்பு ராகமாலிகையாக
Автор: SGTS Thirupugazh
Загружено: 2026-02-16
Просмотров: 317
Описание:
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்கு நிகராகும்
பனைக்க முக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்திடு நிகளத்து முளை
தெறிக்க அரமாகும்
பழுத்த முது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக் குகையை
இடித்து வழி காணும்
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்து அவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புஜிக்க அருள் நேரும்
சுரர்க்கு முநிவரர்க்கும் மகபதிக்கும் விதி
தனக்கும் ஹரி தனக்கும் நரர் தமக்கும் உறும்
இடுக்கண் வினை சாடும்
சுடர் பரிதி ஒளிப்ப நில ஒழுக்கு மதி
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர்
ஒளிப் பிரபை வீசும்
துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்
எனக்கோர் துணையாகும்
சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்த பகை அறுத்தெறிய உருக்கியெழும்
அறத்தை நிலை காணும்
தருக்கி நமன் முருக்கவரின் எருக்கு, மதி
தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை
கழற்கு நிகராகும்
தலத்திலுள கணத்தொகுதி களிப்பில் உண
அழைப்பதென மலர்க் கமல கரத்தின் முனை
விதிர்க்க வளைவாகும்
தனித்துவழி நடக்கும் எனதிடத்தும் ஒரு
வலத்தும் இருபுறத்தும் அருகடுத்து இரவு
பகல் துணையதாகும்
சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர்
பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில்
விருப்பமொடு சூடும்
திரைக் கடலை உடைத்து நிறை புனல் கடிது
குடித்து உடையும் உடைப்படைய அடைத்து உதிரம்
நிறைத்து விளையாடும்
திசைக் கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்க அற
விசைத்ததிர ஓடும்
சினத்து அவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு
குறைத்தலைகள் சிரித்து எயிறு கடித்து விழி
விழித்தலற மோதும் .
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: