1593 விறல்மாரன்..செந்தூர் திருப்புகழ் & தேவசேனா வள்ளி கல்யாண உத்ஸவத்தில் ஸம்ப்ரதாய உஞ்சவ்ருத்தி
Автор: SGTS Thirupugazh
Загружено: 2026-02-25
Просмотров: 80
Описание:
வழங்குபவர்கள் சேலம் ஸ்வாமி குஹாநந்தா திருப்புகழ் சபையினர்
விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த
மிக வானில் இந்து வெயில் காய
மிதவாடை வந்து தழல் போல ஒன்ற
வினைமாதர் தம் தம் வசை கூற
குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர
குளிர் மாலையின் கண் அணி மாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ
மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலை, மாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த அதிதீரா
அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: