1590இணங்கித் தட்பொடு... சிதம்பரம் திருப்புகழ் இராகம் பெஹாக் தாளம் ஆதி
Автор: SGTS Thirupugazh
Загружено: 2026-02-22
Просмотров: 65
Описание:
தில்லை அம்பலவாணர் சந்நிதியில் பாடியவர்கள் சேலம் ஸ்வாமி குஹாநந்தா திருப்புகழ் சபையினர்
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன தனதான
இணங்கித் தட்பொடு பால் மொழி பேசிகள்
மணந்திட்டுச் சுகமாய் விளையாடிகள்
இளம் சொற் செப்பிகள் சாதனை வீணிகள் கடிதாகும்
இடும்பைப் பற்றிய தாம் என மேயினர்
பெருஞ்சொற் பித்தளை தானும் வையாதவர்
இரும்பிற் பற்றிய கூர் விழி மாதர்கள் எவரேனும்
பணஞ் சுற்றிக் கொள் உபாய உதாரிகள்
மணம் கட்டுக் குழல் வாசனை வீசிகள்
பலம் செப்பித் தர மீள் அழையாதவர் அவரோடே
பதம் துய்த்துக்கொடு தீமைய மா
நரகடைந்திட்டுச் சவமாகி விடாது உன
பதம் பற்றிப் புகழானது கூறிட அருள்வாயே
வணங்கச் சித்தம் இலாத இராவணன்
சிரம் பத்துக் கெட வாளி கடாவியெ
மலங்கப் பொக்கரை ஈடழி மாதவன் மருகோனே
மதம் பட்டுப் பொரு சூரபன்மாதியர்
குலம் கொட்டத்திகல் கூறிய மோடரை
வளைந்திட்டுக் களமீதினிலே கொல விடும்வேலா
பிணம் பற்றிக் கழுகோடு பல் கூளிகள்
பிடுங்கிக் கொத்திடவே அமராடியெ
பிளந்திட்டுப் பல மா மயிலேறிய முருகோனே
பிரிந்திட்டுப் பரிவாகிய ஞானிகள்
சிலம்பத்தக் கழல் சேரவெ நாடிடு
பெரும்பற்றப் புலியூர்தனில் மேவிய பெருமாளே.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: