சமய கொடி மரம் வேறு வள்ளலார் கொடி வேறு
Автор: apjarul
Загружено: 2026-01-01
Просмотров: 509
Описание:
சிவாலயக் கொடி மரம் வேறு, சுத்த சன்மார்க்கக் கொடி அமைப்பு வேறு -- APJ அருள் 🙏
சிவாலயங்களில் ஏற்றப்படும் கொடி மரம் சிவாகமங்கள் படி ஏற்றப்படுகிறது. இதற்கென தத்துவங்கள் உள்ளன.
இது பலிபீடத்திற்கு அருகில், மூலவரை நோக்கிய திசையில் அமைக்கப்படும்,
மேலும் அதன் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், உச்சியில் சிவபெருமானும் உறைந்திருப்பதாக நம்பப்படுகிறது
பெரிய விழாக்கள் கொடியேற்றத்துடன் தான் செய்ய வேண்டும் என ஆகமத்தில் உள்ளது. கொடி மரத்தை எப்படி வணங்க வேண்டும் எனவும் விதிகளில் சொல்லப் பட்டுள்ளது.
சமய கொடி மரம், நம் முதுகுத் தண்டின் ஆறு ஆதாரங்களையும், மூன்று நாடிகளையும் வியம்பும் என்பர். மனம் ஒரு நிலைப்படுத்தும் என்பர். கொடி கம்பத்தை முதுகு தண்டு முப்பத்து இரண்டு கணுக்கள் போலவும் அமைப்பர்.
கொடிமர உச்சியில் ஆகம விதிகளின்படி,
👇
மூன்று பட்டைகள் கொண்ட திருஷ்டிப் பலகை அமைத்து, அதில் மணிகள் தொங்கவிட்டு, கோவில் வகைக்கு ஏற்ற தேவதைகளை (நந்தி, கருடன், மயில் போன்றவை) அமைப்பர்.
நிற்க!
மேற்படி சைவ ஆகம விதிகள் போன்று எந்தொரு தத்துவமோ அல்லது கட்டுப்பாட்டு ஆசாரங்களோ சுத்த சன்மார்க்கத்தில் ஏற்றப்படும் கொடிக்கு கிடையாது. இங்கு கொடி மரம் என்றுக் கூட சொல்லாமல், கொடி அல்லது திரு கொடி கட்டுதல் என்று மட்டுமே அழைக்கப்படுகிறது.
1873 ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் கொடி கட்டி மகாபேருபதேம் ஆற்றுகிறார்கள்.
அதன்பின்பு தான் வடலூர் சத்திய ஞான சபை அருகில், தரும சாலையில் கொடி ஏற்றி வந்துள்ளனர் நம்மவர்கள். சத்திய ஞான சபையில் எந்தொரு ஆசார சடங்குகள் கிடையாது. கூடாது.
கொடிக்கான விளக்கம் :
👇👇
இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.
இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது.
அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது;
இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.
முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது.
எப்படி இறைவனே வீற்றிருக்கும் திரு விளக்குகள் சாதாரண தகர கண்ணாடியோ அது போல் தான், நல்ல வலுவான உரிய மர வகை சார்ந்த கம்பம் நட்டு, சுத்த சன்மார்க்கக் கொடியை ஏற்றி வருகிறார்கள். இது நாள் வரை.
கொடிப்பாடலில்;
வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாத வகை
மறிக்கும் ஒரு பே ரறிவு அளித்த வள்ளற் கொடியே
மனக் கொடியைச் செறிக்கும், பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே
அனுபவத்தில் தோன்றும் கொடி என அறிக! இது சைவ ஆகம விதிகள் படி நிறுவப்படும் கொடி கம்பம் இல்லை. இது சத்தியமே.
வள்ளலாரை மீண்டும் சமயத்தில் காட்டும் முயற்சிகளும்,
வடலூர் நிலையத்தில் மீண்டும் வேத ஆசார சடங்குகளும்,
பல வழியில் தெரிந்தோ தெரியாமலோ சமய மத அன்பர்கள் மற்றும்
வள்ளலாரை விரும்பி,அவரையே சாமியாக வணங்கும் அன்பர்கள் முயற்சி எடுத்துக் கொண்டே வருகிறார்கள்.
ஆனால் பலன் அளிக்காது.. காரணம் சுமார் இருபதுக்கு மேல் வழக்குகள் தொடுக்கப்பட்டு, பெறப்பட்ட தீர்ப்புகளில் வள்ளலாரின் சத்திய ஞான சபை சைவ சமய கோவில் அல்ல, வள்ளலார் வழிபாட்டில் எந்தொரு ஆசாரங்களும் கிடையாது இதன் வழிபாட்டுமுறை ஆகமங்களை சார்ந்திருக்கவில்லை என வள்ளலாரின் தனி நெறியை ஆணையர் ஆணைகள், உயர் நீதி மன்றங்கள் தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்டு விட்டது.
ஆம், வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் எல்லோருக்குமான பொது இடம். வள்ளலாரின் கட்டளைப்படியும் நீதிமன்றத்தீர்ப்புகள் படியும் சாதி சமய ஆசாரங்கள் எதுவும் கிடையாது.
👉 ஆசாரமில்லா கருணையும்
👉 உண்மை ஆண்டவர் குறித்த அறிவு விசாரம் மட்டுமே.
இங்கு வழிபாடாக உள்ளது.
👉 எல்லோரும் வாரீர் வாரீர் உண்மையை தெரிந்துக்கொள்ள
👉வள்ளலார் அழைக்கிறார். 👉 உண்மை ஆண்டவராலேயே விளக்கபடுகிறது.🙏 நன்றி: ஏபிஜே அருள்.🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: