Karthar Nallavar | கர்த்தரிடத்தில் பிறருக்காக ஜெபிக்கிறவர்களாகவும் சாட்சியை பெற்றவர்களாயும் வாழ்வோம்
Автор: Karthar Nallavar
Загружено: 2026-02-27
Просмотров: 111
Описание:
கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார். கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.
ஆதியாகமம் 24:35
ஆபிரகாம் தன் ஊழியக்காரனை நோக்கி நீ என் தேசத்துக்கும் என் இனத்தார் இடத்திற்கும் போய்,
என் குமானாகிய ஈசாக்குக்கு பெண் கொண்டு வா என்றான். அந்த ஊழியக்காரன் தன் எஜமான் ஆபிரகாமுடைய சொல்லுக்கு கீழ்ப்படிந்து, புறப்பட்டு போய் நாகோருடைய ஊருக்கு புறம்பே, ஒரு தண்ணீர் துரவண்டையிலே அமர்ந்து, என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி,
என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவுசெய்தருளும் என்று ஜெபிக்கிறான். அங்கு வந்த ரெபேக்காளை சந்திக்கிறான்.
ரெபேக்காளின் சகோதரன் லாபானிடம், கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார். கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார். அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார். என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய் என்று சொன்னார் என்றான். அடுத்ததாக இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து: ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.
நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு, நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான். இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். கர்த்தருக்கு பிரியமானவர்களே, கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசிர்வதித்து இருக்கிறார், என்று ஊழியக்காரனின் சாட்சியைப் பெற்ற எஜமானன் தான் ஆபிரகாம். தன் எஜமானுக்காக ஜெபித்து உண்மையும் உத்தமமாய் வேலை செய்கிற ஊழியக்காரன். அடுத்ததாக வேலைக்காரனுக்காக இயேசுவிடம் வந்த நூற்றுக்குஅதிபதி தன்னுடைய உண்மையை அன்பை சாட்சியை மட்டுமல்ல தன் வேலைக்காரனின் உண்மை அன்பு சாட்சிக்காக அவன் நலனில் அக்கறை கொண்டு விசுவாசத்துடன் பிராயானப்பட்டு இயேசுவுக்கு முன்பாக நிற்கிறார். எஜமான் நூற்றுக்கு அதிபதி மற்றும் ஊழியக்காரன் என்ற இந்த இரண்டு பேரைக் கொண்டு கர்த்தர் நமக்கு சொல்வது என்னவென்றால்; நாம் எஜமானர்களாக இருக்கலாம், அதிகாரிகளாக இருக்கலாம்
அல்லது ஊழியக்காரர்களாக பணியாட்களாக வேலை செய்யலாம். நமக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் சாட்சியைப் பெற்ற அதிகாரிகளாக எஜமானர்களாக நாம் இருக்கிறோமா? அதேபோல் எஜமானுக்குக்காக அதிகாரிகளுக்காக விசுவாசத்தோடு தேவ சமூகத்தில் நின்று வேண்டுகிற விண்ணப்பிக்கிற ஜெபிக்கிற உண்மையான ஊழியக்கார்களாக நாம் இருக்கிறோமா? சாட்சியைப் பெற்ற எஜமானராகவும், அதிகாரியாகவும் வேலைக்கார்களாகவும் ஜெபிக்கிற உண்மையான எஜமானாகவும், அதிகாரியாகவும் ஊழியராகவும் நாம் இருந்தால், கர்த்தர் நம்மை கொண்டு அவருடைய சித்தத்தையும், திட்டத்தையும் செயல்படுத்தி, நம்மையும் ஆசீர்வதிப்பார். எனவே கர்த்தருடைய சித்தமும் திட்டமும் நிறைவேறும் படியாக நாம் ஒரு சாட்சியைப் பெற்ற எஜமானராகவும் அதிகாரியாக ஜெபிக்கிற உண்மையான ஊழியராகவும், கர்த்தருக்கு பிரியமாய் ஆசீர்வாதத்துடன் வாழ்வோம். ஆமென்.
சர்வ வல்லமை உள்ள சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் இருக்கிற இடத்தில், வேலை செய்கிற இடத்தில், உம்முடைய சித்தத்தையும், திட்டத்தையும் நிறைவேற்றும் படியாக, சாட்சியைப் பெற்ற எஜமானர்களாகவும், அதிகாரிகளாகவும், ஜெபிக்கிற உண்மையான ஊழியர்களாகவும் வாழக்கூடிய கிருபையின் வரங்களை கர்த்தர் எங்களுக்கு கொடுத்து இந்த நாளிலும் உம்முடைய கரத்தின் கிரியைகளுக்காக உம்முடைய அதிசயத்திற்காகவும் அற்புதத்திற்காகவும் விண்ணப்பத்தோடு வேண்டுதலோடு கண்ணீரோடு ஜெபிக்கிற எங்கள் ஜெபத்திற்கும் பதில் கொடுக்க வேண்டும் என இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்லபிதாவே. ஆமென். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை இன்று முழுவதும் நம்மோடு கூட இருப்பதாக ஆமென். #Kartharnallavar #God is Good #KARTHARNALLAVAR #கர்த்தர்நல்லவர் #Morningdevotion #TamilMessage #Shortmessage #GoodMorning #PraisetheLord #Gospel #Gospelmessage #Hope #Word #Godsword #TodayMessage #TodayWord #Bibleword #Hopeword #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood. #Kartharnallavar #TamilMessage #Morningdevotion #Praise# the Lord #Gospel #Gospelmessage #Hope #Word #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood
#Prophetic word, #Prophetic voice
#இறைவார்த்தை #இன்றைய வார்த்தை #இன்றையமன்னா #கர்த்தர்நல்லவர் #Goodword #kartharnallavar #gospel #hope #tamilmessage #word #godisgood #morningdevotion #prophetic #successway
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: