ஒரே வருஷத்தில் 4,500 கோவில்களைக் கட்டினார்கள்! எப்படி தெரியுமா? | பிரவீன் மோகன்
Автор: Praveen Mohan Tamil
Загружено: 2021-05-18
Просмотров: 158040
Описание:
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00-முன்னுரை
00:41-வாரங்கல் கோட்டை
01:38-கோவில் இருந்ததா? இல்லையா ?
02:23-கல்லின் மர்மம்
03:53-பாறை இருக்கும் இடம் !
4:41-பாறையின் பலவடிவமும், உற்பத்தியும்
8:22-பாறையின் வடிவம்
10:35-மெஷின் டெக்னாலஜி
12:37-பாறை கட்டிடம்
14:38-பல வகையான தூண்கள்
16:15-முடிவுரை
Hey guys, இன்னைக்கு நாம இந்தியால இருகற இந்த famousஆன வாரங்கல் கோட்டைய பத்தி தான் பாக்க போறோம். இது ஒரு பழங்காலத்து எடம். கொஞ்சம் வித்யாசமான எடம்ன்னு கூட சொல்லலாம். இதுல ஆயிரக்கணக்கான பாறைங்கள வேற வேற shapeல வெட்டிவச்சிருக்காங்க .இத பாக்கும்போதே தெரியுதில்ல?
இந்த எடம் fullஆ அந்த பாறைங்க தான் பரவி இருக்கு. நான் சொல்ல வற்ரது என்னன்னா, இந்த எடத்துல நீங்க எந்த geometric shapeஅ நெனச்சாலும், அத உங்களால easyயா பாக்க முடியும். இந்த stone work எல்லாம் பாக்கறதுக்கு ரொம்ப extraordinaryயா தெரியுதில்ல?
வாரங்கல் கோட்டை அப்படின்ற பேர கேக்கும் போதே , ஒரு பெரிய கோட்டை, சொறசொறப்பா இருக்கற சுவரு இதையெல்லாம் பாக்கலான்னு தேன நினச்சிருப்பீங்க? ஆனா இங்க, நீங்க நினச்சே பாத்திருக்க மாட்டீங்க , ரொம்ப அழகான செலயெல்லாம் இருக்கு. இத நிச்சயமா ஒரு கோட்டையா கட்டல. ஒரு கோட்டைக்கு இவ்ளோ அழகா , இவ்ளோ artisticஆ செலைங்க தேவயில்ல. இவ்ளோ complexஆ இருக்கற geometric pattern எல்லாங் கூட தேவயில்ல.
இந்த எடம் ஒரு கோட்டை இல்லங்கிறத historiansம் ஒத்துகிறாங்க. ஆனாலும் இத கோட்டைன்னு தான் சொல்றாங்க.
இந்த எடத்த சுத்தி நெறய mile தூரத்துக்கு கோட்ட சுவர கட்டி வச்சிருக்காங்க. அதனால அப்பிடி சொல்ராங்கன்னு நினைக்கறேன். Historians யாருக்கும் இந்த எடத்துக்கான உண்மையான use என்னன்றத பத்தி ஒரு ஐடியா கூட இல்ல.
இங்க மொதல்ல ஏன் இவ்ளோ கல்லுங்கள போட்டு வச்சிருக்காங்க?
அதோட இந்த கல்லுங்களுக்கு நடுவுல, தூசு படிஞ்சி போன சில சாமி சிலைங்கல்லாம் கூட இருக்கு.
இந்த சிலைங்களுக்கெல்லாம் வெலயே சொல்ல முடியாது நெஜமா சொல்லணும்னா, பல லட்சம் டாலர் வில இருக்கும். இந்தியால, அதயெல்லாம் சாதாரணமா மண்லயும் தூசுலயும் போட்டு வச்சிட்டாங்க. இது மாதிரி இங்க நெறைய சிலைங்க இருக்காரதால இங்க ஒரு கோவில் இருந்திருக்கும் , அதுக்கப்றமா அது பாழடைஞ்சி போயிருக்கும் அப்படின்னு சொல்லறாங்க.
இந்த எடம் பழய காலத்துல கோயிலா இருந்துச்சா ? இது தானா naturalஆ அழிஞ்சி போச்சா இல்ல மனுஷங்க அழிச்சாங்களா?
இந்த இடத்த நீங்க கொஞ்சம் கவனமா ஆராய்ஞ்சு பாத்தா, உங்களுக்கு இங்க ஏதோ ஒரு வித்தியாசமான விஷயம் இருக்கறது தெரியும். இங்க வித விதமா குறைஞ்சபட்சம் ஒரு டசன் பாறைங்களாவது இருக்கு. இது Red Stone, இது black basalt, அப்பறம் இது granite. இது வினோதமா இருக்கு. ஏன்னா, ஒரு கோயில இந்த மாதிரி வேற வேற கல்லுங்கள வச்சி கட்டியிருந்தா , அது பாக்கறதுக்கு ரொம்ப அசிங்கமா இருக்கும்.
பொதுவா எல்லா கோவில்லயும் பாதிங்கன்னா ஒரே மாரி கல்லுங்கள வச்சி தான் மொத்த கோவிலயும் கட்டியிருப்பாங்க . வேற வேற கல்லுங்கள வச்சி ஒரு கோயில் கட்றதுங்கறது நடக்காத ஒரு விஷயம். அதோட இந்த எடத்தோட வாசல்லயே இது ஒரு கோயில் இல்லங்கிறது தெரியுது. இந்த மொத்த எடத்த சுத்தியும் 4 பெரிய entrance gates இருக்கு. அது ஒவ்வொன்னும் 33 அடி உயரம் இருக்கு.
அதோட இந்த எடத்த சுத்தி எந்த சுவரும் இல்ல. இது தான் ரொம்ப வித்யாசமா இருக்கு. ஒரு கோவிலுக்கு இவ்ளோ பெரிய entrance gates தேவையே இல்ல. அதுமட்டுமில்லாம நம்ப இந்து கோவில்ல எல்லாம் பாதிங்கன்னா எப்பவுமே வெளிப்புறத்துல compound சொவர் இருக்கும். இது ஒரு கோவிலும் இல்ல, இது ஒரு கோட்டையும் இல்ல அப்டின்னா, இங்க என்ன தான் நடந்திருக்கும்? நிஜமா இந்த எடம் எதுக்கு use ஆகியிருக்கும்.
யாராலயும் இதுக்கு ஒரு சரியான பதில சொல்ல முடியல. ஆனா இந்த எடத்த கொஞ்சம் கவனமா ஆராச்சி பண்ணதுல இந்த இடம் மொத்தமும் ஒரு manufacturing site மாரி இருந்திருக்கும். , அதாவது ரொம்ப பெரிய பாறைங்ள வச்சி செய்யற பொருளயெல்லாம் மொத்தமா தயார் பண்ற ஒரு factoryயா இத கட்டியிருக்கலாம்.
இப்போ நான் சொல்றது archeologists அப்பறம் historians, இவங்களோட எல்லா theoriesக்கும் எதிரா இருக்கும். ஏன்னா ஒவ்வொரு பழங்கால கோவிலும் அந்தந்த எடத்துல உள்ள சிற்பிங்க கட்டடம் கட்றவங்க இவங்கள வச்சி தான் கட்டியிருப்பாங்க அப்படின்னு historians நம்பறாங்க. அவங்க தான் அந்தந்த கோவில் இருக்கற இடத்துல , பாறைங்கள ஒடச்சி அத சிலைங்களா செதுக்குவாங்க. இப்படித்தான் historians நினைக்காரங்க.
ஆனா இந்த வாரங்கல் கோட்டை வேறொரு வித்யாசமான ஒரு விஷயத்த காட்டுது. இங்க இருக்கற தூணு செல, அப்புறம் சுவத்துக்கு தேவையான பாறைங்க எல்லாத்தயுமே மொத்தமா ஒரே எடத்துல செஞ்சிருக்காங்க. அது மொத்தமா ஒரு manufacturing siteஆ இருந்திருக்கு. இது தான் இந்த இடத்தோட useஆ இருந்திருக்கும். உதாரணத்துக்கு இந்த rectangle மாதிரியான பாறைங்கள பாருங்க. இங்க இது மாதிரி ஆயிரகணக்குல இருக்கு. இது எல்லாத்துலயும் ரொம்ப பிரமாதமான geometric patterns இருக்கு. அதோட ஒவ்வொரு பாரையும் இன்னொரு பாரையில இருந்து மொத்தமா வித்யாசமா இருக்கு. இந்த rectangle பாறைங்க எல்லாம் என்னவா இருக்கும்? இந்த எடத்தை சுத்தி இருக்கற கோவில்ல போய் பாத்திங்கன்னா உங்களுக்கே தெரியும். இந்த பாறைங்கெல்லாம் நம்ம இந்து கோவில்ல கூரைங்கள்ல இருக்கற நடுப்பகுதி.
#India #Ancienttechnology #praveenmohantamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: