🟢 கையில் வெண்ணை தாரேன் கட்டித் தயிரும் தாரேன்| Kaiyil vennai taren kaṭṭit tayirum taren |
Автор: Selvaraj Bhajan
Загружено: 2026-01-13
Просмотров: 1436
Описание:
கோவை நீலிகோணம்பாளையம் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற சின்னமேட்டுப்பாளையம்
திருவேங்கடநாத பெருமாள் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் 🙏
🟢 கையில் வெண்ணை தாரேன் நான் கட்டித் தயிரும் தாரேன்
ஆயர்பாடிக் கண்ணா நீ அருகில் ஓடிவாடா
வாய் நிறைய வெண்ணை வாங்கித் தாரேன் கண்ணா..
ஆயர்பாடி விட்டு என் அருகில் ஓடிவாடா..
குடம் நிறைய வெண்ணை நான் கொண்டு வந்து தாரேன்.
கோகுலத்தை விட்டு என் அருகில் ஓடிவாடா..
பாலும் பழமும் தாரேன் sநான் பச்சமாவும் தாரேன்.
பாற்கடல விட்டு எங்க பக்க ஓடிவாடா..
தேனும்பாலும் தாரேன் திராட்சை முந்திரியும் தாரேன்..
நீ திருமலையை விட்டு எங்கள் அருகில் ஓடிவாடா..
அதிரசமும் பாகும் உனக்கு அவல் பொரியும் தாரேன்..
ஆயர்பாடி விட்டு என் அருகில் ஓடிவாடா..
சீனிசக்கரை தாரேன் நான் செதறு தேங்கா தாரேன்..
ஸ்ரீரங்கத்தை விட்டு கொஞ்சம் சீக்கிரமா வாடா..
கோவப் பழமும் தாரேன் நான் கொய்யாப் பழமும் தாரேன்..
நீ கோணி கோணி நடந்து எங்க கூட ஓடிவாடா..
கடலை பொரியும் தாரேன் s நான் கவாளமும் தாரேன்..
காரமடையை விட்டு எங்க கூட ஓடிவாராய்..
ஓடி வாராய் கண்ணா நீ ஒளிந்திருக்க வேணாம்..
தேடி தேடி நானும் இங்கு அனுதினமும் வருவேன்... 🙏🙏🙏
நாமாவளி
அடடா அடடா ஓடாதேடா.. தாமரைக் கண்ணா ஓடாதேடா.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: