மரு. சத்தியசுந்தரி உரை | 'வானி - பவானியை மீட்ட வரலாறு' நூல் வெளியீடு | Bhavani River Protection
Автор: சூழல் அறிவோம் - Suzhal Arivom
Загружено: 2026-02-06
Просмотров: 37
Описание:
30 ஆண்டுகளுக்கு முன்னர் மாசடைந்த பவானி ஆற்றை, மருத்துவர் சத்தியசுந்தரி, பலருடன் இணைந்து ஒரு மக்கள் இயக்கமாக, அறிவியல் - சட்ட ரீதியாக மீட்டெடுத்தார். அந்த வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில், ஈரோடு சர்மிளா எழுதிய 'வானி - பவானியை மீட்ட வரலாறு' எனும் இளையோர் நாவல் வெளியிடப்பட்டது.
இந்த நூல் வெளியீட்டுக்கு பிறகு மருத்துவர் சத்திய சுந்தரி அவர்கள் பவானியை மீட்ட வரலாறு குறித்து விவரிக்கும் காணொளி.
இந்த நூலை பெற 8825857649 எண்ணிற்கு Whatsapp யில் தொடர்பு கொள்ளவும்.
------------
‘ஈரோடும் சூழல் பாதுகாப்பும்’ (Conservation Stories of Erode) கருத்தரங்கு 21.12.2025 திண்டல் ‘VET’ கல்லூரியில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் அன்றும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கியமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகள் குறித்த இக்கருத்தரங்கில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் கலந்துகொண்டனர்.
வல்லுநர்களின் உரைகள், புத்தக வெளியீடு, தமிழ்நாட்டில் சமகாலத்தில் நிகழ்ந்துவரும் முக்கியமான சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகள், ஆவணப்பட வெளியீடு, ஒளிப்படக் கண்காட்சி, கலந்துரையாடல் எனச் சூழல் பாதுகாப்பு சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் இக்கருத்தரங்கில் நடைபெற்றன.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: