நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் - திரு.ரவீந்திரன் காமாட்சி (NST) - Nanjarayan Bird Sanctuary Conservation
Автор: சூழல் அறிவோம் - Suzhal Arivom
Загружено: 2026-02-05
Просмотров: 147
Описание:
2022இல் ஈரோடுக்கு அருகிலுள்ள திருப்பூரில், நஞ்சராயன் குளமானது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. சமகாலத்தில் சரணாலயம் எவ்வாறு அறிவிக்கப்பட்டது என்பது குறித்தும், அவர்கள் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றினர் என்பது குறித்தும் திருப்பூர் இயற்கை கழகத்தைச் சேர்ந்த, பறவைகள் - சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திரன் காமாட்சி விரிவாக விளக்கினார்.
------------
‘ஈரோடும் சூழல் பாதுகாப்பும்’ (Conservation Stories of Erode) கருத்தரங்கு 21.12.2025 திண்டல் ‘VET’ கல்லூரியில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் அன்றும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கியமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகள் குறித்த இக்கருத்தரங்கில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் கலந்துகொண்டனர்.
வல்லுநர்களின் உரைகள், புத்தக வெளியீடு, தமிழ்நாட்டில் சமகாலத்தில் நிகழ்ந்துவரும் முக்கியமான சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகள், ஆவணப்பட வெளியீடு, ஒளிப்படக் கண்காட்சி, கலந்துரையாடல் எனச் சூழல் பாதுகாப்பு சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் இக்கருத்தரங்கில் நடைபெற்றன.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: