உத்தமர்சீலி கல்லணை கரிகாலன்
Автор: INDIAN GODS AND SAINTS
Загружено: 2021-12-25
Просмотров: 668
Описание:
இறைவன்
ஸ்ரீகைலாச நாதர்,
இறைவி
ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகை,
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம்
உத்தாமரை சீலம்...
கிராமத்தில் கூட திருக்குளத்தை காணோம்...
மூலவரான கைலாசநாதர் கிழக்கு நோக்கி இருந்து அருள்பாலிக்கிறார்.
திருமூலர், மார்கண்டேய மகரிஷி,
மிருகண்டு முனிவர், வாலி அவரது மனைவி தாரை ஆகியோர் வணங்கி பேறு பெற்ற தலம்.
தாயார் ஸ்ரீஆனந்தவல்லி எனும் ஸ்ரீவசுந்தரா தேவி ஆவார்.
தென் முகமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்
பிரம்மா வணங்கிய ஈசன்
பிரம்மா சிவபெருமானின் திருமுடியை கண்டேன் என
பொய் கூறிய தவறுக்கு பிராயசித்தம் பெறும் பொருட்டு பிரம்ம மூர்த்தி உத்தமர்சீலி தலத்தை அடைந்து பன்னெடுங்காலம் உத்தாமரை சீலம் என்ற சத்திய சக்திகள் செறிந்த தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு தன்னிலை உணர்ந்தார்.
இறைவனிடமே பொய் கூறியதால் பிரம்ம மூர்த்திக்கு கோயில் கிடையாது என்ற சாபத்தைப் பெற்றிருந்தார் பிரம்மா.
அவர் அதற்காக பிராயசித்தங்களை நிறைவேற்றி தன்னிலையைத் தான் அடைந்து இறைவனின் அன்புக்கு பாத்திரமான போது பிரம்ம மூர்த்தியானவர் சிவத்தலங்களில் உள்ள அனைத்து கோமுக நீர்த்தாரைகளில் அமர்ந்து அருள்புரியும் வரத்தை அளித்து அந்த வரத்தை விருத்தி செய்யும் முகமாக அவருக்கு சதுராங்க சக்தி என்ற அற்புத சக்தி ஒன்றையும் அளித்தார் ஈசன்.
இதுவே சிவத் தலங்களில் கோமுகம் என்னும் அபிஷேக நீர்த்தாரை வழியும் தீர்த்த வழியின் மேற்பாகத்தில் பிரம்ம மூர்த்தி உறைவதற்கான ஆன்மீக காரணமாகும்.
சிவபெருமான் அளித்த சதுராங்க சக்தி என்பவை நான்கு பிரிவுகளாக பிரிந்து பிரம்ம மூர்த்தியின் நான்கு தலைகளிலும் நிலவி நின்றன.
சிவத்தலங்கள் அனைத்திலும் அபிஷேகம் நிறைவேற்றும்போது அந்த அபிஷேகத் தீர்த்தம் கோமுகம் வழியாக வெளியேறும்போது பிரம்ம மூர்த்தியின் நான்கு தலைகளில் நிலவும் இந்த சதுராங்க சக்திகள் தீர்த்த நீரை அடைந்து சிவ பிரம்ம பிரசாதமாக பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றன. இதுவே எம்பெருமான் அளித்த பேறாகும்.
சரஸ்வதி தாயார் பெற்ற வீணை...
தனது கணவர் பிரம்மாவின் தவம் சிறப்பாக நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் சரஸ்வதி தேவி உத்தமர்சீலி தலத்தில் தட்சிணா மூர்த்தி எதிரே அமர்ந்தவாறே தொடர்ந்து பஞ்சாட்சரத்தை பக்தியுடன் ஜபித்துக் கொண்டே இருந்தார்.
பிரம்ம மூர்த்தியின் தவம் கனியும் காலம் முழுவதும் ஊண் உறக்கம் என்பது சிறிதும் இன்றி சரஸ்வதி தேவி ஜபித்த பஞ்சாட்சர சக்திகளே பிரம்ம மூர்த்தியின் தவம் இனிதே நிறைவேறி அவர் சதுராங்க தேவ சக்திகளைப் பெற பெரிதும் உதவின.
தட்சிணா மூர்த்தியும் மகிழ்ந்து சரஸ்வதி தேவிக்கு வசுந்தரா வம்சாதினி என்ற ஒரு அற்புத வீணையை பரிசாக அளித்தார். இறைப் பிரசாதமான அந்த வீணையைப் பெற்றுக் கொண்டவுடன் ஈசன் சரஸ்வதிக்கு ஒரு இறைப் பொறுப்பையும் அளித்தார்.
சிவ பஞ்சாட்சரத்தையே ஜபித்து பிரம்மாவின் தவத்திற்கு உறுதுணையாக சரஸ்வதி தேவி இருந்ததால் இந்த பிரபஞ்சத்தில் ”உ” என்னும் சப்தத்தை ஆதியாக உடையாக எழுத்துக்களை எழுப்பும் பணியை சரஸ்வதிக்கு அளித்தார் ஈசன்.
தேவி மகிழ்ந்து வீணையை மீட்டினாள். அப்போது பிறந்ததே ”உத்தமர்” என்ற ஐந்து உத்தம எழுத்துக்கள், சிவ பஞ்சாட்சர அட்சரங்கள்.
எனவே தட்சிணா மூர்த்தியின் சிவப் பிரசாதமான வசுந்தரா வம்சாதினி வீணையில் தோன்றிய முதல் வார்த்தையே ”உத்தமர்” என்பதாகும். அந்த உத்தம ஐந்து எழுத்துக்கள் தோன்றிய திருத்தலமே உத்தமர்சீலி சிவத்தலமாகும்.
தாமரையின் மகிமை...
தீர்த்தக் குளத்தில் பூக்கும்
உத்தாமரை சீல தாமரை மலர்கள் காலையில் செந்நிறத்துடன் திகழும். பொழுது செல்லச் செல்ல செந்நிறம் குறைந்து அது வெண்மை நிறத்தை அடைந்து மாலையில் பொன்னிற ஒளியைப் பெறும். இதுவே உத்தாமரை சீல தாமரை மலர்களின் தனிச் சிறப்பாக இருந்திருக்கிறது.
மிருகண்டு முனிவர்
மிருகண்டு முனிவர் தனது மனைவியோடு இத் தலத்திற்கு வந்து
நல்ல புதல்வன் வேண்டி
கடும் தவம் இருந்தார்.
வாடாத தாமரைக் கொடியின் விதைகளை கொடுத்த ஈசன் அதனை பல திருக்குளங்களில் விதைக்க செய்தார்.
ஆயிரம் ஆண்டானாலும் வாடாத தாமரை கொண்டு பூஜித்து மார்க்கண்டேயனை குழந்தையாக பெற்றார்.
வாலியும் தாராவும்...
வாலியும் தாராவும் தமக்கு நல்ல குழந்தை வேண்டும் என மார்கண்டேய மகரிஷியிடம் வேண்டினர்.
அவரின் வழிகாட்டுதலின் படி
உத்தமர்சீலி இறைவனை வழிபட்டு
அங்கதனை பெற்றெடுத்தனர்.
பனைமரம்...
உத்தமர்சீலியில் தலத்தின் ஈசான்யத்தில் ஸ்ரீ மார்கண்டேயரே பனை மரமாக உள்ளார்.
பனை மரம் என்றும் மறையாத ஒன்றாய், பிரளயத்தையும் விஞ்சி நிற்பதாக இங்கே இருக்கிறது.
உத்தமர்சீலி திருத்தலத்தில் ஈசனை வணங்கி அடிப் பிரதட்சணம் செய்து வழிபட்டு பனை மரத்தை வழிபடுவதால் உத்தம குழந்தைகளை வரமாகப் பெறலாம்.
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். கடுமையான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.
கண் நோய்களையும், தீரா நோய்களைத் தீர்க்கும் வல்லமையையும் உடையது
விக்கிரம சோழன் (1118-1136) காலக் கல்வெட்டு இத்தலத்தில் உள்ளது.
நன்செய், புன்செய் நிலங்களை அளப்பதற்குப் பயன்பட்ட அளவுகோல் இங்கே கிடைக்கப்பெற்றுள்ளது.
கட்டுமானங்களில் உள்ள 5 கோட்டங்களின் மேல் காட்டப்பட்டுள்ள மகர தோரணங்களில் சிற்றுருவச் சிற்பங்களும் இத் தலத்தில் உள்ளது.
#உத்தமர்சீலி
#கல்லணை
#கரிகாலன்
#கைலாசநாதர்
#மிருகண்டுமுனிவர்
#மார்கண்டேயர்
#பார்வதி
#சோழர்
#சோழர்கள்
#திருச்சி
#chola
#temple
#cholatemple
#karikalacholan
#karikalan
#kailash
#kailasanathar
#kailasanathan
#trichy
#markandayar
#indiangodsandsaints
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: