கேது பரிகார தலம்| கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயில்| Keezhaperumpallam Kethu Parigara Temple|
Автор: AalayaOm
Загружено: 2023-05-26
Просмотров: 38949
Описание:
அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் நாம் தரிசிக்க இருப்பது, தமிழ்நாட்டில் புகழ் பெற்ற கேது பரிகார தலமான, நாகப்பட்டினம் மாவட்டம், கீழப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ள செளந்தர்யநாயகி சமேத நாகநாதசுவாமி திருக்கோயில். பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோயில், சம்பந்தரால் பாடல் பெற்ற தேவார வைப்பு தலம்.
ஆலய நுழைவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தனி கருவறை சன்னதியில் மூலவர் நாகநாதசுவாமி கிழக்கு நோக்கி சிவலிங்க வடிவில் அருள் புரிகிறார். மூலவர் சன்னதிக்கு இடதுபுறம் தனி சன்னதியில் செளந்தர்யநாயகி தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். ஆலய பிரகாரத்தில் கருவறை மண்டபத்திற்கு இடதுபுறம் தனி சன்னதியில் கேது பகவான் மேற்கு நோக்கி அமைந்துள்ளார். இங்கு கேது பகவான், ஐந்து பாம்புகளை கொண்ட தலையுடனும், மனித உடலுடனும் தனது இரண்டு கைகளை கூப்பி, மூலவர் நாகநாதசுவாமியை வணங்கிய கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு கேது அனுக்கிரக மூர்த்தியாக அருள் புரிவதால், நவகிரக சன்னதி இல்லை. கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள குளம், நாக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சம் மூங்கில் மரம்.
பிரார்த்தனைச் சிறப்பு: இத்திருத்தலம் கேதுவுக்குரிய பரிகாரத் தலம். கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், முதலில் இங்குள்ள அனுகிரக விநாயகர், நாகநாதர், அம்பாளை வணங்கி, பின் கேதுவை வழிபட வேண்டும். கேதுவிற்கு செவ்வரளி மலர் வைத்து, கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, ஏழு தீபம் ஏற்றி வணங்குவது சிறப்பு. கொள்ளு சாதம் கோயிலில் விற்பனை செய்யப்படுகிறது. கேதுவிற்கு படைக்கப்பட்ட கொள்ளு சாத நைவேத்யத்தை கோயிலில் உள்ள பக்தர்கள், ஏழை எளியவர்களுக்கு பிராசதமாக வழங்க வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக் கூடாது என்பது ஐதீகம். இங்கு கேதுவை வழிபடுவதால் நரம்பு, வாயு தொடர்பான பிரச்சினைகள், விபத்து, மரண பயம், காரிய தடை, திருமண தடை, புத்திர தோஷம் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் தம்பதியர் ஒற்றுமை, சகல ஐஸ்வரியங்களுடன் கூடிய மகிழ்ச்சியான வாழ்க்கை, சிறந்த தலைமுறை அமையும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். ஜாதகத்தில் கேது தசை, புத்தி நடப்பவர்கள், ஜென்ம நட்சத்திரத்தன்று கேதுவிற்கு பாலபிஷேகம் செய்து வழிபடலாம். பரிகார பூஜைகளை எமகண்ட நேரத்தில் செய்வது சிறப்பு. இங்கு பதினெட்டு மாதங்களுக்கு ஒரு முறை ஏற்படும் ராகு கேது பெயர்ச்சியன்று விசேஷ ஹோமம், பூஜைகள் நடைபெறுகின்றன.
ஆலய நடை திறப்பு நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
இத்திருக்கோயில் சென்னையிலிருந்து சுமார் 260 கி.மீ தூரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து 22 கி.மீ தூரத்திலும், பூம்புகாரில் இருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ளது. பேருந்து வசதிகள் அதிகமில்லை. கார் மற்றும் ஆட்டோவில் சென்று வரலாம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: