காளி வழிபட்ட அம்பர் மாகாளம் மாகாளேஸ்வரர் கோயில் | குபேர யோகம் அருளும் யோக ராகு யோக கேது அருளும் தலம்
Автор: ஆன்மீகத்துடன் நட்பு
Загружено: 2024-06-29
Просмотров: 28959
Описание:
தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
மாகாளநாதர் கோயில்
திருஅம்பர்மாகாளம் (118/274)
பிரம்மஹத்தி தோஷம் நீங்க காளி வழிப்பட்ட மாகாளநாதர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 55வது தலம். அரிசிலாற்றின் கரையில் அமைந்துள்ள தலம். அம்பன் , அம்பாசூரன் அசுரர்களைக் கொன்ற பாவந்தீர காளி சிவலிங்கம் அமைத்து வழிபட்ட தலம்
மூலவர்: மாகாளநாதர், காளகண்டேஸ்வரர்.
அம்பாள்: பக்ஷயாம்பிகை, ராஜமாதங்கி.
தல விருட்சம்: கருங்காலி மரம்.
தலதீர்த்தம்: அரி சொல்லாறு, மாகாள தீர்த்தம்.
ஊர்: அம்பர் மாகாளம், கோயில் மாகாளம்.
மாவட்டம்: திருவாரூர்
தலவரலாறு
அம்பன் அம்பாசூரன் என்ற இரு அசூரர்கள் பார்வதி தேவியை திருமணம் செய்ய விரும்பினார்கள் இதை அறிந்த அம்பாள் காளி வடிவம் எடுத்து அம்பகரத்தூர் என்ற இடத்தில் அவர்கள் சம்காரம் செய்தாள் இதனால் அம்பாளுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்ப்பட்டது இந்த தோஷம் விளக இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்து தோஷம் நீங்கப் பெற்றார், காளி சிவபூஜை செய்ததால் சிவன் மகாகாளநாதர் எனப்பட்டார்.
சோமாசிமார் நாயனார் நடத்திய யாகத்திறகு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும்.
சோமாசியார் தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார்.
சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார். இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது.
சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்தும் சோமயாகத்திற்கு இறைவன் நேரில் எழுந்தருளினார்.
நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக் கொண்டு தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்து கொண்டு யாகத்திற்கு எழுந்தருளுகிறார்.
யாகத்தை நடத்திவந்த அந்தணர்கள், இவன் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று கூறி ஓடி விடுகின்றனர்.
தந்தை தான் இவ்வாறு வருகிறார் என்பதை சோமாசிமாற நாயனாருக்கு விநாயகர் குறிப்பாக உணர்த்தி அச்சத்தைப் போக்கினார்.
ஆகையால் சோமாசிமாற நாயனார் வந்திருப்பது இறைவன் எனத் தெரிந்து, தனது மனைவியுடன் பறைத் தம்பதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்கள்.
இறைவனும் தனது பறையன் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாற நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார்.
திருவாரூரில் இருந்து தியாகராஜர் இவ்விழவிற்கு எழுந்தருள்வதால் அன்றைய தினம் திருவாரூரில் தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது.
அஷ்டநாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற் நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றது.
நாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்க கிழமைகளில் இராகு காலத்தில் வாசுகிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் அடையலாம்.
கோவிலமைப்பு
ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், காற்றோட்டமான திறந்த வெளியும், அதனூடே மண்டபங்களும் காணப்படுகின்றனர். இந்த மண்டபங்களைக் கடந்து சென்றால், கிழக்கு நோக்கிய சன்னிதியில் மாகாள நாதர், லிங்க மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மாகாளப் பெருமானுக்கு வலதுபுறம் தியாகேசப் பெருமான் சன்னிதி உள்ளது. இந்த ஆலயம் சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகும். ஆலயத்தில் பரிகார கணபதி, தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி, மகரிஷிகள், வில்லேந்திய முருகப்பெருமான், மகாலட்சுமி, சண்டேசர், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. தெற்கு பிரகாரத்தில் காளி அம்மன் கோவில் உள்ளது.
ஆலயத்தின் தெற்கு புறத்தில் அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்புரிகிறார். பட்சயாம்பிகை என்ற பெயரில் வீற்றிருக்கும், இந்த அம்பாளை வழிபடுபவர்களுக்கு திருமணம் தடை அகலும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு இரண்டு சிவப்பு அரளி மாலைகளைக் கொண்டு வந்து சாத்தி வழிபாடு செய்தால், அம்பிகை நல்ல வழி காட்டுவாள் என்பது கண்கூடான விஷயம்.. இந்த ஆலயத்தின் தல விருட்சம் கருங்காலி மரம். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத தலவிருட்சமாக இது காணப்படுகிறது.
பிராத்தனை
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இவ்வாலயத்தின் சிறப்பு.
இந்த தலத்தில் உள்ள மோட்ச லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேண்டிக் கொண்டால், கடைசி காலங்களில் படுத்தப் படுக்கையில் கிடந்தபடி மரண அவஸ்தையில் வாழ்பவர்கள், நிம்மதியாக கண்மூடுவதுடன் மோட்சம் அடைவர் என்பது நம்பிக்கை.
அமைவிடம்
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மி. தூரத்தில் இத்தலம் இருக்கிறது.
திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், நாச்சியார் கோயில் மற்றும் நன்னிலம் போன்ற இடங்களில் இருந்து பூந்தோட்டம் வர பேருந்து வசதி உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள அம்பர் மாகாளம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
கோயில் Google Map Link
https://maps.app.goo.gl/9mEr5NaYWs863...
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 9486601401
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathinam2301
Join Our Channel WhatsApp Group
https://chat.whatsapp.com/LRPxBQMNHRA...
தமிழ்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: