அபிராமி அந்தாதி - 4
Автор: Jagan Medispiri
Загружено: 2026-02-12
Просмотров: 109
Описание:
இன்று. நாலாவது பாடலில் பேறு பெற்ற மனிதர்களும் தேவர்களும் முனிவர்களும் தொழும் அன்னையையும் அவரோடு இணைந்துறையும் சிவபெருமானையும் தன்னுடைய சிந்தையில் புகுந்து உள்ளத்தில் குடிபெற வேண்டும் என வேண்டி விழைகிறார்.அதனை இன்று காண்போம்
சிவதாஸன் ஜகன்நாதன்
ஓம் நமசிவாய:
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே.
மனிதரும் தேவரும்====== மாந்தர்களும்,தேவர்களும்
மாயா முனிவரும்===== என்றும் அழிவிலா முனிவரும்
வந்து===== உனை நாடி வந்து
சென்னி====== தம் தலை திருவடி வைத்து
குனிதரும்======= வணங்கும்
சேவடி கோமளமே======= சிவந்த மென்மையான பாதங்களையுடைய கோமளவல்லியே
கொன்றைவார்======= கொன்றை மலரணிந்த
சடைமேல்======== ஜடாமுடியில்
பனிதரும் திங்களும்======= குளிர்ந்த பிறையையும்
பாம்பும்======== நாகங்களும்
பாகீரதியும் படைத்த====== கங்கையையும் அணிந்த
புனிதரும் நீயும்======== ப்ரமனும் நீயும்
என்புந்தி எந்நாளும்======== என் உள்ளத்தில் எப்பொழுதும்
பொருந்துகவே========= நிலைபெற்று உறையவே
பூவுலக வாசிகளாகிய மனிதர்களும் பொன்னுலக வாணராகிய தேவர்களும் மரணம் இல்லாத பெருமையையுடைய முனிவர்களும் வந்து தலை வணங்கும் செம்மையாகிய திருவடிகளும் மெல்லியல்பும் உடைய தேவியே. கொன்றைக் கண்ணியை அணிந்த நீண்ட சடாபாரத்தின் மேல் பனியை உண்டாக்குகின்ற சந்திரனையும் பாம்பையும் கங்கையையும் கொண்ட தூயவராகிய சிவபிரானும் நீயும் என் அறிவினிடத்தே எக்காலத்திலும் இணைந்து எழுந்தருள்வீர்காளாக!
இந்தப் பாடலுக்கு அழகாகப் பண்ணமைத்து இனிமையாகப் ப்பாடியவர் டாக்டர் சுகுணா வரதராஜன் அவர்கள்
சிவதாஸன் ஜகன்நாதன்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: