அபிராமி அnthaathi - 7
Автор: Jagan Medispiri
Загружено: 2026-02-21
Просмотров: 20
Описание:
ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய், சிந்து ரானன சுந்தரியே.
ததியுறு மத்தின்=== தயிரைக் கடையும் மத்தினைப் போல
சுழலும் என் ஆவி===== அங்கும் இங்கும் பிறப்பிலும் இறப்பிலும் சுழலும் என் உயிர்
தளர்விலது ஓர்===== அச்சுழர்ச்சியில்மயங்கித்தளறா
கதியுறு வண்ணம்====== நற்கதியை அடையுமாறு
கருது கண்டாய் ====== எனக்கு அருள் புரிவாய்
கமலாலயனும்======= தாமரையான் ப்ரம்மனும்
மதியுறு வேணி மகிழ்நனும்======== பிறையணிந்தவரும் உன்னுடன் மகிழ்ந்திருக்கும் சிவபெருமானும்
மாலும்======== திருமாலும்
வணங்கி என்றும்========= என்றென்றும் வணங்கும்
துதியுறு சேவடியாய்====== சிவந்த திருவடிகளையும்
சிந்துரானன======= செஞ்சிந்தூரம் அணிந்த
சுந்தரியே======== பேரெழிலாளே
படைத்தல் தொழில் புரியும் தாமரை மலரில் உறையும் பிரமனும்,வளர் பிறையணிந்து உன்னுடன் மகிழ்ந்திருக்கும் உன் நாயகன் சிவபெருமானும்,காத்தல் தொழில் புரியும் திருமாலும் என்றென்றும் வணங்கி மகிழும் சிவந்த திருவடிகளையும் சிவந்த செந்தூரம் அணிந்த முகத்தையும் கொண்ட பேரெழில் சுந்தரியே
கடையப்படும் தயிரானது மத்தின் சுழற்சியில் அகப்பட்டு அங்கும் இங்கும் சுழல்வதுபோல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் நான் அகப்பட்டு சுழலும் என் ஜீவன் அதிலிருந்து விடுபட்டு நான் மயங்காவண்ணம் எனக்கு அருள்புரிவாயே
விளக்கம்: தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவா
இந்தப் பாடலுக்கு அழகான பண்ணமைத்து இனிமையாகப் பாடியவர் Dr. சுகுணா வரதராஜன் அவர்கள்
நன்றி வணக்கம்
சிவதாஸன் ஜகன்நாதன்
ஓம் நமசிவாய:
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: