கந்தர்அலங்காரம்75"படிக்கின்றிலை"விளக்கவுரை:கோபாலகிருஷ்ணன்காணொளி:செந்தில்சண்முகர்பச்சை சாத்திஅபிஷேகம்
Автор: Ayappan P
Загружено: 2026-02-21
Просмотров: 59
Описание:
கந்தர் அலங்காரம் செய்யுள் 75 "படிக்கின்றிலை பழநித் திருநாமம் ". விளக்கவுரை: திருப்புகழ் ஓவியர் : ஸ்ரீ.கோபாலகிருஷ்ணன்
காணொளி : திருச்செந்தூர் சண்முகர் பச்சை சாத்தி அபிஷேகம்
படிக்கின்றிலை பழநித் திருநாமம்; படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை; முருகா என்கிலை; முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை; பரமானந்தம் மேற்கொள, விம்மி விம்மி
நடிக்கின்றிலை; நெஞ்சமே! தஞ்சம் ஏது நமக்கு இனியே. 75
பாடல் விளக்கம்
'ஓ' நெஞ்சமே, பழநியில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின் திருநாமங்களை ஓதுகின்றாயில்லை. பழநி ஆண்டவரது திருநாமங்களை ஓதுகின்ற அடியார்களின் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்கின்றாயில்லை. பரம்பொருளாகிய திருமுருகப்பெருமானை "முருகா" என்று அழைக்கின்றாயில்லை. யாசிப்பவர்கள் பசியால் மெலிவடையாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்குப் உணவு வழங்கி அதனால் நீ வறியவனாகிவிடவில்லை. பேரின்பம் மிகுதியாக வரும் பொருட்டு விம்மி விம்மி அழுது ஆடுகின்றாயில்லை. இனி நமக்கு அடைக்கலம் தரும் பற்றுக்கோடு எங்கு உள்ளது?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: