கந்தர்அலங்காரம்71"துருத்தி".விளக்கவுரை: : கோபாலகிருஷ்னன்.காணொளி TCN சண்முகரின்சிவப்புசாத்தி அபிஷேகம்
Автор: Ayappan P
Загружено: 2026-02-16
Просмотров: 62
Описание:
கந்தர் அலங்காரம் செய்யுள் 71 "துருத்தி எனும்படி கும்பித்து வாயுவை". விளக்கவுரை: திருப்புகழ் ஓவியர் : ஸ்ரீ.கோபாலகிருஷ்னன்
காணொளி :திருச்செந்தூர் பிரம்மோத்சவம் சண்முகரின் சிவப்பு சாத்தி அபிஷேகம்
துருத்தி எனும்படி கும்பித்து வாயுவை, சுற்றி முறித்து,
அருத்தி, உடம்பை ஒறுக்கில் என்ஆம்? சிவயோகம் என்னும்
குருத்தை அறிந்து, முகம் ஆறுடைக்குரு நாதன் சொன்ன
கருத்தை மனத்தில் இருத்தும் கண்டீர்! முத்தி கைகண்டதே!. 71
பாடல் விளக்கம்
தோலால் செய்யப்பட்ட துருத்தி என்று சொல்லும் படி கும்பகம் செய்து பிராண வாயுவைச் சுழற்றி முறியச் செய்து அவ்வாயுவையே உணவாக உண்பித்து இந்த உடலைத் துன்புறுத்துவதனால் விளையும் பயன் யாது? "சிவயோகம்" என்னும் முளையைத் தெரிந்து ஆறு திருமுகங்களுடைய சற்குருநாதராகிய திருமுருகப்பெருமான் உபதேசித்து அருளிய திருக்கருத்தை உங்கள் மனத்தில் நிலைபெறச் செய்வீர்களானால் முக்தியாலாகிய பேரின்பம் உங்கள் கைக்கு எட்டியதாகும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: