ஆ இன்ப காலமல்லோ(கீர்த்தனை - 209) Aa Inba Kalamallo/W.Michael Samraj
Автор: Composer Thought
Загружено: 2020-12-30
Просмотров: 4347
Описание:
B flat major 3/4 160bpm(Lyrics Available)
[email protected]
நண்பர்களே!
நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள்
மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது.
சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன்.
கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
W.Michael Samraj
பல்லவி
ஆ! இன்ப கால மல்லோ-ஜெபவேளை
ஆனந்த காலமல்லோ?
அனுபல்லவி
பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப்
பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும். - ஆ!
சரணங்கள்
1. துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கன்-சோதனைகள் போக்கி,
அம்பர வாசிகளோ-டிதயத்தை-இன்ப உறவாக்கி,
கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம்
கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும். - ஆ!
2. ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்-சிகரமதனில் உற்று,
தேவ நகர் கண்ணுற்றுச்-சடலத்தை-ஜெகத்தில் எறிந்துவிட்டு,
ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே,
அன்போடு பார்த்து நல் வந்தனஞ் சொல்லுவேன். - ஆ!
ம. வேதமாணிக்கம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: