சிறந்த வேலை அமைய செய்யும் திருப்புகழ் | திருப்புகழ் விளக்கம் |
Автор: Guganarul (குகனருள்)
Загружено: 2026-03-14
Просмотров: 9520
Описание:
அனைவருக்கும் வணக்கம்!
அருணகிரிநாதரின் தனித்துவம் என்னவென்றால், அவர் மனதில் எழும் ஏக்கம் எதுவாக இருந்தாலும் அதையே திருப்புகழில் வெளிப்படுத்துவார். அந்த ஏக்கத்திற்கு ஏற்ப கிடைக்கும் தீர்வையும் அதே திருப்புகழில் கூறுவார்.
அப்படிப்பட்ட ஒரு திருப்புகழைத்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்!
சில புலவர்கள் செல்வந்தர்களைத் தேடி தேடி சென்று அவர்களைப் புகழ்ந்து பாடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் அருணகிரிநாதர் இந்த முறையை கடுமையாகக் கண்டித்தார்.
அதாவது, உயர்ந்த தமிழை எடுத்துச் சென்று, அதற்குத் தகுதியே இல்லாத ஒருவரைப் புகழ்ந்து பாடி, அவர் தரும் பணத்தில் வாழ்வது ஒரு இழிவான வாழ்க்கை என்று அவர் கருதினார்.
முருகனை தொடர்ந்து வழிபட்டு திருப்புகழ் பாடினால், முருகன் நமக்கு அற்புதமான பாதையை காட்டுவான். இந்த உண்மையை அருணகிரிநாதர் இந்த திருப்புகழில் மிகவும் தெளிவாக விளக்குகிறார்.
திருச்செந்தூர் திருப்புகழ் 91 பாடல் வரிகள்:
முந்து தமிழ் மாலை கோடி கோடி
சந்தோடு நீடு பாடி பாடி
முஞ்சர்மனை வாசல் தேடி தேடி உழலாதே
முந்தை வினையே வாராமல் போக
மங்கையர்கள் காதல் தூரதேக
முந்தும் அடியேனை ஆள தானும் உனை மீதே
திந்தி திமிதோதி தீதி தீதி
தந்தன தான தனதான தான
செஞ்சனகு சேகு தாளத்தோடு நடமாடும்
செஞ்சிரிய கால் விசால தோகை
துங்க அனுகூல தீர பார்வை
செம்பொன் மயில் மீது எப்போது வருவாயே
அந்தன் மறைவேள்வி காவல்கார
செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார
அண்டர் உபகார சேவற்கார முடிமேலே
அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார
குன்றுருவ ஏவும் வேலைய்க்கார
அந்தம் வெகுவான ரூபக்கார எழிலான
சிந்தூரமின் மேவு போகக்கார
விந்தை குறமாதின் வேளைக்கார
செஞ்சொல் அடியார்கள் வாரக்கார எதிரான
செஞ்சமறை மாயும் மாயக்கார
துங்கர சூர சூரைக்கார
செந்திர்நகர் வாழும் ஆண்மைக்கார பெருமாளே.
இந்த அற்புதமான திருப்புகழின் முதல் பகுதியில் அருணகிரிநாதர் தன்னுடைய மேன்மையைச் சொல்லுகிறார். முருகனை வழிபட்ட பிறகு தாம் எவ்வாறு மாறினார் என்பதைக் கூறுகிறார்.
இத்தகைய மேன்மை தமக்குக் கிடைக்க காரணமான முருகப்பெருமானின் பெருமைகளையும் ஒவ்வொன்றாகப் பட்டியலிடுகிறார்.
திருப்புகழ் முந்து தமிழ் மாலை விளக்கம்:
1. தமிழின் மகிமை
உயர்ந்த தமிழ் மொழியில் இனிமையான கவிதைகள் எழுதப்படுகின்றன.
ஆனால் அவற்றை தகுதியற்ற மனிதர்களைப் புகழ்வதற்காக பயன்படுத்த வேண்டாம்.
2. மனிதர்களிடம் அலைந்து நிற்க வேண்டாம்
மனிதர்களிடம் உதவி கேட்டு அலைந்து நிற்கும் வாழ்க்கை உயர்ந்தது அல்ல.
முருகனை நம்பினால் அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்.
3. வினைகள் மற்றும் ஆசைகள் நீங்குதல்
முந்தைய பாவ வினைகள் நம்மை விட்டு நீங்கிவிடும்.
உலக ஆசைகளும் விலகிவிடும்.
4. முருகனின் தரிசன ஏக்கம்
திருவண்ணாமலையில் கிடைத்த முருகன் தரிசனத்தை மீண்டும் காண வேண்டும் என்று ஏங்குகிறார்.
மயிலின் மேல் அழகாக வந்து தரிசனம் தர வேண்டும் என்று வேண்டுகிறார்.
5. முருகனின் பெருமைகள்
முனிவர்கள் செய்யும் வேள்விகளை காக்கும் தெய்வம்.
செந்தமிழ் கவிதைகளை மாலையாக ஏற்றுக் கொள்பவன்.
6. பக்தர்களுக்கு கருணை
அஞ்சலி செய்து வணங்குபவர்களை அன்புடன் காப்பவன்.
அடியார்களின் துன்பங்களை வேலால் அழிப்பவன்.
7. வள்ளி மற்றும் தெய்வயானை
தெய்வயானையுடன் மகிழ்ந்து விளங்குபவன்.
மனிதர்களிடையே பிறந்த வள்ளியை மணந்த முருகன்.
திருப்புகழ் பாடும் அடியார்களை அன்புடன் காக்கிறான்.
8. சூரபத்மனை அழித்த வீரன்
சூரபத்மனையும் அவன் படைகளையும் அழித்தவன்.
தேவர்களுக்கு மீண்டும் அமைதியை வழங்கியவன்.
9. இறுதி கருத்து
திருச்செந்தூரில் வாழும் வீரமும் ஆட்சியும் கொண்ட பெருமான் முருகன்.
இந்த உலகின் உண்மையான அரசன் அவனே.
இவ்வாறு முருகனை முழுமையாக அனுபவித்தவர் அருணகிரிநாதர். அவர் கண்ட ஆன்மீக அனுபவங்களைத் திருப்புகழாக உலகிற்கு வழங்கியுள்ளார்.
அடியார்கள் இந்த அற்புதமான திருப்புகழைப் பாடினால், முருகப்பெருமானின் அருளால் வேறு யாரிடமும் சென்று “இல்லை” என்று கையேந்தும் நிலைக்கு அவர் நம்மை கொண்டு செல்லமாட்டார்.
பல அடியார்கள் “எங்களுக்கு வேலை வேண்டும்”, “வேலையில் முன்னேற்றம் அடைய வேண்டும்” என்று வேண்டுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் இந்த திருப்புகழை முருகப்பெருமானின் அருளை நினைத்து பக்தியுடன் பாடலாம்.
இது வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக மட்டும் பாடப்படும் திருப்புகழ் என்று எங்கும் பரப்ப வேண்டாம். முருகப்பெருமானின் அருள் இருந்தால், நாம் தேடி அலைய வேண்டியதில்லை; எல்லா நன்மைகளும் நம்மைத் தேடி வந்து சேரும்.
எனவே, அடியார்கள் இந்த திருப்புகழைப் பாடி மகிழ்ந்து, செந்தில்வேல் பெருமானின் திருவருளால் நல்ல முறையில் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
#திருப்புகழ்91 #திருச்செந்தூர்_திருப்புகழ் #திருச்செந்தூர்_திருப்புகழ்91_விளக்கம் #திருச்செந்தூர்_திருப்புகழ்91_வீடியோ #திருச்செந்தூர்_திருப்புகழ்_விளக்கம் #முந்துதமிழ்மாலைகோடிகோடி #முந்துதமிழ்மாலை_திருப்புகழ்_விளக்கம் #அருணகிரிநாதர்_திருப்புகழ் #திருச்செந்தூர்முருகன் #செந்தில்வேல்பெருமான் #திருச்செந்தூர்முருகன்_பாடல் #வேலைகிடைக்க_திருப்புகழ் #வேலைக்கான_திருப்புகழ் #வேலை_கிடைக்க_முருகன்_பிரார்த்தனை #வேலைக்காக_திருப்புகழ்_பாராயணம் #ஆன்மீக_சொற்பொழிவாளர்_விஜயகுமார் #விஜயகுமார்_திருப்புகழ்91_விளக்கம் #வேலை_கிடைக்க_விஜயகுமார்_திருப்புகழ்_வீடியோ
#Thirupugazh91 #ThiruchendurThirupugazh #ThiruchendurThirupugazh91Explanation
#ThiruchendurThirupugazh91Video #ThiruchendurThirupugazhExplanation
#MundhuTamilMalaiKodiKodi #ArunagirinatharThirupugazh #ThiruchendurMurugan
#SenthilVelMurugan #ThirupugazhExplanation #ThirupugazhForJob
#MuruganPrayerForJob #MuruganHelpForJob #MuruganHelpForCareer
#ThirupugazhRecitationForJob #VijayaumarThirupugazhVideo #VijayakumarThiupugazh91Explanation
#VijayakumarThirupugazhVideoToGetJob
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: