ஞாயிறு ஆராதனை 01.02.2026.படைப்பின் நிறைவை உறுதி செய்யும் ஓய்வு.ஆதி
Автор: HARRISSUGUNA@0912
Загружено: 2026-01-30
Просмотров: 476
Описание:
ஞாயிறு ஆராதனை 01.02.2026.
படைப்பின் நிறைவை உறுதி செய்யும் ஓய்வு.
SABBATH LEADS TO THE FULLNESS OF CREATION.
ஆதியாகமம் 1:31/2:3,எபிரேயர் 4:2-11,மாற்கு 3:1-6,சங்கீதம் 24.
ஓய்வு நாள்,
1.படைப்பின் மகுடம்.
ஏசாயா 66:22, ஆதியாகமம் 2:3.
2. படைப்பின் மறு எழுச்சி.
ஆதியாகமம் 1:26,27,28, வெளிப்படுத்தல் 21:5, ஆதியாகமம் 9:6.
3. படைப்பின் முழு நிறைவு.
ஆதியாகமம் 1:2,31, யோவான் 1:1, யோவான் 1:3.
ஷாபாத் என்பது ஓய்வு நாள்,ஓய்ந்து இருத்தல் ஆகும். ஓய்வு என்பது களைப்பு நீங்க ஓய்வெடுத்தல் என்பதல்ல மாறாக உளம் சார்ந்து ஓய்வெடுத்தல் ஆகும்.
யூதர்களின் ஓய்வு நாள் சனிக்கிழமை. கிறிஸ்தவர்களின் ஓய்வுநாள் ஞாயிற்றுக்கிழமை. உபாகமம் 5:13-16 ன் படி ஆறு நாள் வேலையும் ஒரு நாள் ஓய்வும் ஆகும். ஒரு நாள் சமாதானத்தோடும் இறைவனிடத்தில் நெருங்கும்போது ஆறு நாள் வருமானம் ஆசீர்வதிக்கப்படும்.
SABBATH WAS LAST IN CREATION BUT FIRST IN THOUGHT. IT WAS THE GOAL OF CREATION NOT A REACTION TO IT.
--- RABBI LAPIN கூற்றாகும்.
அனைத்து படைப்பிற்கு பின் இனி ஒன்றும் இல்லை என்ற நிலையில் - செய்வதற்கு வெறுமனே இருந்த நிலையில் இதுவே படைப்பின் மகுடமாய் கருதப்படும். ஓய்வுநாளை யாத்திராகமம் 31:12-17 ன் படி பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும். ஆதியாகமம் 1:27 ன் படி கடவுள் தம் உருவில் மனிதனை படைத்தார் (இறை சாயலில்).(image of God) இறை சாயலில் படைத்தார் என்பது வேதத்தில் மூன்று முறை மட்டுமே வருகிறது. ஆதியாகமம் 1:26; 5:1; 9:6. இயற்கையின் மீது அதிகாரம் அல்ல பலுகி பெருகி இயற்கையை ஆண்டு கொள்ள வேண்டும் என்பதே பொருள்.
படைப்பில் இறைவன் ஆதியாகமம் 1:31 ன் படி முழு நிறைவை காண்கிறார். மனிதன் கெட்டுப்போன பின்பு தன் மகனை அனுப்பினார்( யோவான் 3:16). ஆகவே நாம் இறை மீட்பு பெற படைப்பின் நிறைவை முழு நிறைவுடன் கொண்டாடுவோம்.... 🐜🐜🐜
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: