கோவில்பட்டி செண்பகவல்லி திருக்கோயில் கும்பாபிஷேக விழா - முழங்க மூன்றாம் கால யாக சாலை பூஜை
Автор: Aanmeega seithigal
Загружено: 2026-01-23
Просмотров: 913
Описание:
*கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா -முன்னிட்டு மேள தாளம் முழங்க மூன்றாம் கால யாக சாலை பூஜை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கோயிலில் வருகின்ற ஜன.25-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 25-ம் தேதி கோயில் முன்புள்ள மைதானத்தில் யாகசாலை பந்தல் அமைக்கும் பணிக்கான கால்நாட்டு விழா நடந்தது. தொடர்ந்து, பந்தல் அமைக்கப்பட்டது. இதற்காக கோயிலின் இடதுபுறம், முன்புறம் என 2 யாகசாலை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், மொத்தம் 42 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது
நேற்று முதல் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து இன்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது மூன்றாம் கால யாகசாலை பூஜை ஆறு மணிக்கு மேல்
*மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், விசேஷசந்தி பூதஸுத்தி பூதஸோதனம் அந்தர் யாகம் கிராம ப்ரதிகூணம் மஹா விக்னேஸ்வர பூஜை , புன்யாஹவாசனம், தொடர்ந்து மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது திரவியாஹீதி மஹாபூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: