கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ தேவி பூமாதேவி சமேத ஸ்ரீ கரியமால் அழகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா
Автор: Aanmeega seithigal
Загружено: 2026-02-06
Просмотров: 384
Описание:
கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ தேவி பூமாதேவி சமேத ஸ்ரீ கரியமால் அழகர் திருக்கோவில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாஸ்ம்ப்ரோகூண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கும்பாபிஷேக நிகழ்வினை தாிசனம் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஸ்ரீ தேவி பூமாதேவி சம்மத ஸ்ரீ கரியமால் அழகர் திருக்கோவில் பழமையானது. பல்வேறு சிறப்புகள் கொண்ட இத் திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த கடந்த 4ம் தேதி மாலை பகவத் ப்ரார்த்தனை.அநுஞ்யை ம்ருத் ஸ்ங்க்ரஹனம். புண்யாகவாசனம்
உபய வேதபாராயணம் தொடக்கம். சோமஹோமம்.வாஸ்து ஹோமம் அஷ்டதிக் பந்தனம் மாலை 6மணிக்கு தீர்த்த சங்க்ரஹம் கலா கர்ஷனம்.முதல் கால யாகசாலை ஹோமங்கள் .பூர்ணாஹீதி சான்று முறை தீர்த்த ப்ரசாதவிநியோகம் நடைபெற்றது. இரண்டாம் கால யாகசாலை பூஜைகள்
சதுஸ்தான. அர்ச்சனை
பஞ்ச சூக்தாதி ஹோமங்கள்
பூர்ணாஹிதி
உத்ஸ்வமூர்த்திகளுக்கு 108கலச திருமஞ்சனம்.விமான கலசங்களுக்கு திருமஞ்சனம் தீபாராதனை.ப்ரசாத வினியோகம் தொடர்ந்து மூலவர் தாயார் பரிவாரங்கள் திருமஞ்சனம்
மூன்றாம் கால யாகசாலை. ஹோமங்கள் உத்ஸ்வர் சயானாதி வாச வேலை.தீபாராதனை சாற்றுமுறை.தீர்த்தப்ரசாதவிநியோகம் நடைபெற்றது தொடா்ந்து காலை மாலை இரு வேலைகளிலும் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. நேற்று இரவு ஸ்ரீ தேவி பூமாதேவி கரியமால் சுவாமி மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு எந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் போன்றவைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான இன்று காலை சுப்ரபாதம் கோ.பூஜை. சமஸ்தானம் அர்ச்சுனம் நான்காம் கால யாகசாலை ஹோமங்கள் மஹாபூர்ணாஹீதி முதலில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித கலச நீர் அடங்கிய கலசங்கள் அதிகாலை 9- 10.30 க்குள் மேளதாளங்களுடன் எடுத்துவரப்பட்டு ஸ்ரீ தேவி பூமாதேவி ஸ்ரீ கரியமால் சுவாமி விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பாிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு மகா அபிஷேகம் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் மற்றும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிா்வாகம் மற்றும் ஊா்பொதுமக்கள் செய்திருந்தனா்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: