ஸ்ரீ எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் | Echil porukki arumuga samikal | kottaiyur | sither valipadu
Автор: Siddhargal Valipadu
Загружено: 2022-06-04
Просмотров: 10544
Описание:
ஸ்ரீ எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள்
ஆறுமுக சுவாமிகள்பொதுவாக ஒருவரின் கர்மவினைகளை
இன்னொருவர் வாங்கிக் கொள்ள முடியாது.
அவரவரது கர்மவினையை அவரவர்கள்தான்
அனுபவிக்க வேண்டும் என்றுதான் சாஸ்திரங்கள்
சொல்கின்றன. ஆனாலும், பிறரது கர்மவினைகளை வாங்கிக்
கொள்ளும் இத்தகைய சக்தி படைத்த மகான்கள் இருக்கத்தான்
செய்தார்கள்; இன்றும் நம் குறிப்பிடத்தக்க ஒருவர்தான்-எச்சில்
பொறுக்கி ஸ்ரீஆறுமுக சுவாமிகள் எச்சிக்கலை சுவாமிகள்,
கர்மவினைச் சித்தர், எச்சிக்கலையும் பொறுக்கும் சுவாமிகள்
(அதாவது பக்தர்களுக்கு எந்த விதமான சிக்கல் இருந்தாலும்,
அதைத் தானே வாங்கிக் கொண்டு பொறுத்து ஆள்பவர்)
என்றெல்லாம் இவரை அழைப்பார்கள். அழுக்கான காவி
வேஷ்டியே இவரது ஆடை முழங்கால் வரைக்குமான ஒரு
சட்டை அணிந்திருப்பார். பார்ப்பதற்குப் பரதேசி போல்
தோற்றமளிக்கும் இவருக்கு அடர்ந்து வளர்ந்த தாடி, சடைமுடி
இவர் ஜீவஜீ சமாதி ஆகி. 28 வருடங்கள் ஆகின்றன.
திருச்சி - மதுரை சாலையில் திருச்சிக்கு அடுத்து வருவது
விராலிமலை இங்குதான் ஆறுமுக சுவாமிகளின் காலம்
கழிந்தது. ஜீவஜீ சமாதி ஆனது காரைக்குடிக்கு அருகே உள்ள
கோட்டையூரில். ஒரு வைகாசி விசாகத்தன்று சுவாமிகள் சமாதி
ஆனார். வைகாசி மாதம் விசாகத்தன்று தான் முக்தி அடைந்து
விடுவேன் என்கிற தகவலை சுவாமிகள் தன் சீடர்களிடம்
முன்னமேயே சொல்லி இருந்தார். சுவாமிகள் ஜீவஜீ சமாதிஆகும்
நாள் பற்றிக் குறிப்பு. பல ஓலைச் சுவடிகளில் இருந்ததாகவும்
பிரமிப்பூட்டும் தகவலைச் சொல்கிறார்கள் அவரது பக்தர்கள்.
விராலிமலையில் முருகப் பெருமான் குடி கொண்ட மலையில் -
தெற்குமலை அடிவாரத்தில் ஒரு குகையில் பல காலம் வசித்து
வந்தார் ஆறுமுக சுவாமிகள். குகையில் வேல் வடிவத்தை
பிரதிஷ்டை செய்து அங்கேயே வாழ்ந்தார். பல ஊர்களில்
இருந்தும் பக்தர்கள் இவரைத் தேடி வந்தார்கள். சுவாமிகளின்
எட்டு வயதிலேயே மூதேவி (வாராஹி என்றும் சொல்கிறார்கள்)
அவரது உடலில் குடி கொண்டாளாம். இத்தகையோருக்கு
வாக்குப் பலிக்கும். செயல்பாடுகள் முரட்டுத்தனமாக இருக்கும்.
யாராவது இலையில் சாப்பாட்டைக் கொடுத்தால், சாப்பிட்டு
முடித்து விட்டு, அந்த இலையைப் பத்திரமாக மடித்து ஒரு
மூலையில் வைப்பாராம். தூர எறிய மாட்டார். சில நேரங்களில்
தான் இருக்கும் குகைக்குள்ளேயே சாப்பாட்டை வாரி
இறைப்பாராம். இப்படி எச்சில் இலையை மடித்து வைத்துப்
பத்திரப்படுத்துகிறாரே என்று இதைப் பார்க்க நேரிடும் அவரது
பக்தர்கள் சிலர் சில நேரங்களில் முகம் சுளிப்பார்களாம்.
எச்சில் என்பது அசூயைப்படக் கூடிய ஒரு விஷயம் அல்ல.
அசுத்தம் அல்ல. மனிதர்களின் மனதில்தான் வேறுபாடு
வேரூன்றி இருக்கிறது. என்பதை சுவாமிகள் அடிக்கடி சொல்லிக்
கொண்டே இருப்பார். இதனால்தான் ஆறுமுக சுவாமிகள் எச்சில்
பொறுக்கி சுõவமிகள் ஆனார். கர்மவினைகளை வாங்கிக்
கொள்ளும் சக்தி படைத்த மகான் ஒருவர் விராலிமலையில்
வசித்து வருகிறார் என்கிற தகவல் வெளியூர் பக்தர்களுக்கு தெரிந்தது.
இத்தகைய சித்த புருஷரின் ஆசியைப் பெறுவதற்காக சாதாரண
பக்தர்களும் விராலிமலைக்கு வந்து செல்வது வழக்கம்.
சுவாமிகளுக்கு சாப்பாடு டீ ஏதாவது வாங்கித் தந்து விட்டு,
அவரது உபதேச மொழிகளைக் கேட்டுச் செல்வார்கள் பல
பக்தர்கள். அப்படித்தான் கோட்டையூர் நகரத்தார் அன்பரான
ஏஎல். சிதம்பரமும் சுவாமிகளுக்கு பழக்கமானார். சுவாமிகளின்
அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானார் இவர். இவர்தான்
தற்போது சுவாமிகளின் ஜீவஜீ சமாதிக் திருப்பணிகளைக்
கவனித்துக் கொண்ட வருகிறார்.
தான் சமாதி ஆகப் போகும் தினத்தை முன்கூட்டியே சொல்லி
இருந்தார் சுவாமிகள். 18.5.81. வைகாசி மாதம் விசாக நட்சத்திரம்.
திங்கட்கிழமை. சுவடிகளில் சொல்லி இருந்தபடியும் சுவாமிகள்
அறிவித்திருந்தபடியும் அவர் அன்றைய தினம் சமாதி ஆகி
விட்டார். கோட்டையூரில் இந்த திசையில் ஒன்பது அடி
ஆழத்தில் ஒரு குழி உள்ளது. என் ஜீவஜீ ன் அடங்கியதும் அங்கே
கொண்டு போய் சமாதி வையுங்கள். நான் சமாதி கொண்ட
இடத்தைச் சுற்றி பின்னாளில் ஒரு நகர் தோன்றும். காடு
நாடாகும் என்று ஏற்கெனவே சுவாமிகள் கூறி இருந்தபடி,
அவரை ஒரு டாக்ஸியில் வைத்து விராலிமலையில் இருந்து,
கோட்டையூர் கொண்டு வந்தோம். சுவாமிகள் சொன்ன
குறிப்பின்படி - அவர் சொன்ன திசையில் - சொன்ன இடத்தில்-
சொன்ன ஆழத்தில் ஒரு குழி இருந்தது. அங்கேயே சமாதி
வைத்தோம் என்றார். குழந்தைபேறு, திருமணத்தடை, போன்ற பல குறைகளை
சுவாமிகளின் சன்னிதியில் கொட்டி விட்டுச் செல்கிறார்கள்.
அனைத்து பிரார்த்தனைகளும் இங்கே நிறைவேறுகிறது.
மதியம் அபிஷேகம் மற்றும் அன்னதானமும் பவுர்ணமி அன்று
இரவு அபிஷேகமும் மதியமும் அன்னதானமும் நடக்கிறது. பல
பக்தர்கள் ஓரிரவு இங்கு தங்கி, சுவாமிகளின் ஆசியை பெற்றுச்
செல்வதை விரும்புகிறார்கள்.
பூர்வ ஜன்மத்தில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் புண்ணிய
பலத்தால் மட்டுமே இவரது ஜீவ சமாதியைத் தரிசிக்கும்
பாக்கியம் கிடைக்கும்.
கர்மவினையால் அவதிப்படுபவர்கள்தான் இந்தக் கலியுகத்தில்
அதிகம். இறை அருளால் ஏராளம் சாதித்த எச்சில் பொறுக்கி
ஆறுமுக சுவாமிகளின் திருச்சன்னிதியைத் தேடி செல்லுங்கள்.
உங்கள் குறைகளைக் கொட்டுங்கள். அவரது திருவடி தரிசனம்.
உங்களைத் திடப்படுத்தும், நம்பினோரைக் கைவிட மாட்டார்
ஆறுமுக சுவாமிகள்.
காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் வழியில் காரைக்குடியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது . கோட்டையூர் மெயின் ரோட்டில் இருந்து சுமார் ஒண்ணரை கி.மீ. தொலைவு உள்ளே சென்றால் சுவாமிகளின்
ஜீவஜீ சமாதி.
குரு வாழ்க
குருவே துணை
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
ஜெய குரு ராயா .
#எச்சில்பொறுக்கிஆறுமுகசுவாமிகள்
#ஆறுமுகசுவாமிகள்
#sithergal #mahan #சித்தர்வழிபாடு #jeevasamathi #sither #amirtha #karaikudi #karaikudisithergal #kottaiyur #viral #viralimalai
#product #products
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: