ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

Unveiling the Mysteries of Siddhar Sri Mahendragiri and His Teachings || siddhargal valipadu

Автор: Siddhargal Valipadu

Загружено: 2023-03-31

Просмотров: 16666

Описание: ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி மகான்

திருவிதாங்கூர் சமஸ்தான ஜமீன் மன்னர் வகையறாவைச் சேர்ந்தவரான மகேந்திரகிரி மகான் சுவாமிகள் 13 வயதில் துறவு மேற்கொண்டு இளம் வயதிலேயே இறையருளை நாடி இமயம் தொடங்கி திருவண்ணாமலை வரையில் பற்பல இடங்களில் ஆண்டுக்கணக்கில் தலயாத்திரை செய்தும் தவநிலையை மேற்கொண்டும் இருந்தும் வந்தவர் இறுதியில் சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி என்னும் ஊரை வந்தடைந்து தனக்கென ஆசிரமம் அமைத்தும் ஜீவசமாதி பீடமும் அமைத்துக் கொண்டவர். அப்போது தான் தனது பெயரை சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அறிவித்தார்கள்.அதுவரை சுவாமிகள் தங்கியிருந்த ஊரின் பெயரைச் சேர்த்துதான் சுவாமிகளை அழைத்திருந்தார்கள்.கண்டனூர் சுவாமிகள் என்றும்,கணக்கன்பட்டி சுவாமிகள் என்றும் பொட்டுக்கடலை சுவாமிகள் என்றும் பல்வேறு பெயர்களில் அழைத்து வந்துள்ளனர்.
ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி ஆசிரமம்'என்று தனது ஆசிரமத்திற்குப் பெயரிட்டுத் தனது பெயர் 'மகேந்திரவர்மன்' என்றும் தனது பூர்வீகம் பற்றியும் தானே அறிவித்தார்கள்.

ஆன்மீகத் தேடல்:-
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வழிவந்த ஜமீன் மன்னர் பரம்பரையின் வாரிசாகப் பிறந்த சுவாமிகள் தனது 13 வது வயதில் இருக்கும் போதே ஆன்மீகத் தேடலில் நாட்டம் கொண்டு இமயமலை,மும்பை போன்று பல இடங்களில் தியானம், தவம் செய்து ஞானம் பெற்று பலருக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தும், நோய்களைக் குணப்படுத்தியும் வந்துள்ளார்கள்.
ஞானிகளின் குரு:-
மகான் மகேந்திரகிரி சுவாமிகள் மகாராஷ்டிரா மாநிலம் வந்தபோது அவருக்கு மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர் சத்குரு சீரடி சாய்பாபா. இவ்விருவரும் இளமைப் பருவத்தில் ஒன்றாக ஒரே இடத்தில் வசித்து வந்துள்ளார்கள்.பின்னர் சுவாமிகள் தனது தவ வாழ்வை மேற்கொள்ள எண்ணி காசி, அலகாபாத், திரிவேணி சங்கமம் போன்ற பகுதிகளில் தங்கி தவநிலை மேற்கொண்டு இருந்து அதன்பின் தமிழகத்தில் பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி வந்து அவ்வூரிலேயே தங்கி தவமிருந்த சுவாமிகள் அங்கு மிகப்பெரிய காளி கோவில் ஒன்றைக் கட்டித் தந்து ஊர் மக்கள் அனைவரும் வழிபடும் வகை செய்துள்ளார்கள். அப்போது அவ்வூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் சுவாமிகளுடனேயே இருந்து பணிவிடைகளும், தொண்டுகளும் பல புரிந்து வந்துள்ளார்கள்.மகேந்திரகிரி சுவாமிகளும் காளிமுத்துவுடன் பழனிமலையைத் தினமும் கிரிவலம் வருவார். அப்போது அங்கு சுவாமிகளைத் தரிசிக்க ஒரு ஞானியை ராஜயோகம் கொண்ட மௌன ஞானியாக்கி வரம் வழங்கி பழனியிலேயே வாழ வரம் கொடுத்தார்கள்.அவரே "பழனி சாக்கடை சித்தர்" ஆவார்.
தினமும் மகேந்திர கிரி சுவாமிகளுடன் காளிமுத்து உடனிருப்பதை விரும்பாத சில ஜாதி வெறியர்கள் காளிமுத்துவை அடித்துக் கொலை செய்து இரவோடு இரவாக அவரது உடலை இடுகாட்டில் போட்டுவிட்டுச் சென்றனர். இதனை அறிந்த சுவாமிகள் விரைந்து சென்று இறந்த கிடந்த காளிமுத்துவின் உடலைத் தூக்கி கட்டி அணைத்து இருக்க, இறந்தவர் உயிர் பெற்றார்கள். அப்போது அவருக்கு அந்த இடத்திலேயே ஞான உபதேசம் செய்து சில குறிப்பிட்ட இடங்களில் தவம் மேற்கொண்டு நீ இவ்வூரைக் காத்து இங்கேயே இரு என்று கூறிய சுவாமிகள் யாரிடமும் சொல்லாமல் இமயமலை நோக்கிப் புறப்பட்டார்கள். இன்று அவரே "கணக்கன்பட்டி அழுக்கு மூட்டை சுவாமிகள்" என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

மகான்களுக்குத் தரிசனம்:-
இவ்வாறு மகேந்திரகிரி சுவாமிகள் பல சித்தர்களின் அழைப்பை ஏற்று அவர்களுக்குத் தரிசனம் தர முன்வந்து சென்றுள்ளார்கள். அவர்களில் தஞ்சை அருகே ராஜகிரி சுவாமிகள், இடையமேலூர் மாயாண்டி சித்தர், காரைக்குடி எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் ஆகியோர் ஆவார்கள்.மகான் மகேந்திரகிரி சுவாமிகள் திருவண்ணாமலை வந்தடைந்தபோது அவரைக் காண வழக்கறிஞர் ஒருவர் வர அவருக்கு சுவாமிகள் ஞான உபதேசம் வழங்கி அவரை "நீ திருவண்ணாமலையிலேயே தங்கியிரு" என்று கூறி அங்கிருந்து சுவாமிகள் ஆந்திராவுக்கு சென்றார்கள். சுவாமிகளிடம் அன்று ஞான உபதேசம் பெற்றவர் இன்று "யோகி ராம் சுரத்குமார் என்றும் விசிறி சுவாமிகள்" என்றும் அழைக்கப் படுபவர் ஆவார்

குடையால் அடி:-
மகரிஷி சுவாமிகள் அவர்களது கையில் வைத்திருக்கும் குடையால் தம்மைக் காணவரும் பக்தர்களை ஒரு அடி வைப்பார்கள்.அதன் மூலம் பக்தர்கள் தங்களது கர்மவினைகளைத் தீர்த்து வைத்துள்ளார்கள். அவரிடம் அடி வாங்குவதற்கென்றே பக்தர்கள் காத்திருந்து அவரை நாடி வருவார்கள்.

ஜீவ முக்தி:-
சுவாமிகள் தான் முக்தியடையப் போவதை மூன்று மாதங்களுக்கு முன்னதாக அறிவித்து ஆசிரமமும், சமாதி பீடம் அமைத்துக் கொண்டபடியே சுவாமிகள் தை மாதம் 25.01.2017 ஆண்டில் தை மாதம் அமாவாசை தினத்தில் நாற்காலியில் அமர்ந்தவாறே முக்தி அடைந்தார்கள்.

ஜீவத் திருமேனி:-
மகான் மகேந்திரகிரி சுவாமிகள் முக்தி அடைந்த பின்னர் பக்தர்களின் தரிசனத்திற்காக 24 மணி நேரம் சுவாமிகளை நாற்காலியில் அப்படியே அமர வைத்திருந்தார்கள். பின்னர் சமாதி செய்விக்க சுவாமிகளின் உடலை எடுத்தபோது சுவாமிகளின் உடலில் விரைப்புத்தன்மை இன்றி உடலில் சூடும் இருக்க உடல் நெகிழ்வுத் தன்மையோடு அப்படியே இருந்ததாம்.
இன்றளவும் சித்தர்கள் ரூபமாகவும், அரூபமாகவும் மற்றும் வெவ்வேறு நிலைகளிலும் காட்சி கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். பிரம்மஸ்ரீ மகான் மகேந்திரகிரி சுவாமிகள் முக்தி அடைந்த போது அவருக்கு வயது 180க்கு மேல் இருக்கும் என்று அவர்களது சீடர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சித்தர்களின் தந்தை எனக் குறிப்பிடப்படும் மகேந்திர கிரி சுவாமிகளின் விருப்பப்படியே சமாதி செய்விக்கப்பட்டதும் தினமும் ஆறுகால பூஜைகள் சுவாமிகளின் ஜீவசமாதி பீடத்தில் நடைபெற்று வருகிறது.அத்துடன் அன்னதானமும் எந்நேரமும் சுவாமிகளின் ஆசிரமத்தில் நடைபெறுகிறது.
அமைவிடம்:-
ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரிஷி மகேந்திரகிரி ஆசிரமம்,
மதகுப்பட்டி,
சிவகங்கை மாவட்டம்.
கட்டுரை புனைவு:-
ஈரோடு அகிலா குமார்
#aanmeegam #siddhargal #srimahendragirisiddhar #siddhargaljeevapeedam
#sithervalipadu

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Unveiling the Mysteries of Siddhar Sri Mahendragiri and His Teachings || siddhargal valipadu

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

How powerful was Pulipani Sithar | What happened to him | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

How powerful was Pulipani Sithar | What happened to him | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

மனதில் உள்ள பிரச்சனைகளை சொல்லாமலே தீர்க்கும் விபூதி சித்தர்| Miracles Of Viboothi Siddhar 🙏|

மனதில் உள்ள பிரச்சனைகளை சொல்லாமலே தீர்க்கும் விபூதி சித்தர்| Miracles Of Viboothi Siddhar 🙏|

நள்ளிரவு 12 மணிக்கு நடேசன் சுவாமிகளுக்கு காட்சி கொடுத்த அம்மன் | Marmam | Vasanth TV

நள்ளிரவு 12 மணிக்கு நடேசன் சுவாமிகளுக்கு காட்சி கொடுத்த அம்மன் | Marmam | Vasanth TV

மதகுபட்டி ஓம் ஸ்ரீ  பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின் ஜீவா சமாதி #NOSProgramme by REACH MEDIAA

மதகுபட்டி ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின் ஜீவா சமாதி #NOSProgramme by REACH MEDIAA

141 வயது வரை வாழ்ந்த அதிசய சித்தர் அப்பா பைத்தியம் சாமிகள் | Story of Appa paithiyam saamigal

141 வயது வரை வாழ்ந்த அதிசய சித்தர் அப்பா பைத்தியம் சாமிகள் | Story of Appa paithiyam saamigal

நினைத்த இடத்தில் வந்து அருள்பாலிக்கும் கசவனம்பட்டி சித்தர் | Kasavanampatti Siddhar | Jaya TV

நினைத்த இடத்தில் வந்து அருள்பாலிக்கும் கசவனம்பட்டி சித்தர் | Kasavanampatti Siddhar | Jaya TV

கோடி சுவாமிகளின் வரலாறு | Siddhi Tharum Siddhargal 08/09/19

கோடி சுவாமிகளின் வரலாறு | Siddhi Tharum Siddhargal 08/09/19

தலைவிதியை மற்றும் தாத்தா கோவில்.. தாத்தா ஜீவசமாதியில் நடக்கும் அதிசியம் !Thatha Kovil |Jeeva Samadhi

தலைவிதியை மற்றும் தாத்தா கோவில்.. தாத்தா ஜீவசமாதியில் நடக்கும் அதிசியம் !Thatha Kovil |Jeeva Samadhi

நானும் மூட்டைசுவாமியும் | ஒரு பக்தரின் உண்மை அனுபவம் | பிரத்யேக பேட்டி

நானும் மூட்டைசுவாமியும் | ஒரு பக்தரின் உண்மை அனுபவம் | பிரத்யேக பேட்டி

Старец Василий Из Богородского Предупредил, В 2026 Исчезнут Пять Продуктов...

Старец Василий Из Богородского Предупредил, В 2026 Исчезнут Пять Продуктов...

பிரம்மஸ்ரீ  இரா.நாகரத்தினம் | காஞ்சிபுரத்தில் வாழும் சித்தர் | SITHAR IN KANCHI | Kattiyakkaran

பிரம்மஸ்ரீ இரா.நாகரத்தினம் | காஞ்சிபுரத்தில் வாழும் சித்தர் | SITHAR IN KANCHI | Kattiyakkaran

இறந்த பின்னர் உயிர் எங்கே செல்கிறது? கோட்டு சூட்டு போட்ட சித்தர் அறிவியல் விளக்கம் Dr. Ramachandran

இறந்த பின்னர் உயிர் எங்கே செல்கிறது? கோட்டு சூட்டு போட்ட சித்தர் அறிவியல் விளக்கம் Dr. Ramachandran

மகத்தான மகேந்திரகிரி ஸ்வாமிகளின் முத்தான காட்சிகள்..இறுதி ஐக்கிய ஊர்வலத்தோடு!/ RM. Ramanathan

மகத்தான மகேந்திரகிரி ஸ்வாமிகளின் முத்தான காட்சிகள்..இறுதி ஐக்கிய ஊர்வலத்தோடு!/ RM. Ramanathan

நாட்டு மருந்து ஆபத்து! Traditional Medicine SHOCKER! Inaivom Iyarkaiyudan Vengaram Krishnavel Ts -19

நாட்டு மருந்து ஆபத்து! Traditional Medicine SHOCKER! Inaivom Iyarkaiyudan Vengaram Krishnavel Ts -19

மரணத்தையே மிரள வைத்த மானூர் சாமிகள்…| Pranavam TV

மரணத்தையே மிரள வைத்த மானூர் சாமிகள்…| Pranavam TV

ரத்தன் டாடாவுக்கு அதிசயங்களை காட்டிய மௌனகிரி சாமிகள் | Story of Mouna Giri Siddhar @PranavamTV

ரத்தன் டாடாவுக்கு அதிசயங்களை காட்டிய மௌனகிரி சாமிகள் | Story of Mouna Giri Siddhar @PranavamTV

காசு வேண்டாம் வேண்டியதை தரும் விபூதி சித்தர் | கணக்கன்பட்டி சித்தரின் மறுபிறவி விபூதி சித்தர்

காசு வேண்டாம் வேண்டியதை தரும் விபூதி சித்தர் | கணக்கன்பட்டி சித்தரின் மறுபிறவி விபூதி சித்தர்

கேளக்கிய சித்தரை வழிபடும் முறை, நேரம் மற்றும் மந்திரங்கள் |kelakkiya Siddhar| Ashoka Astro

கேளக்கிய சித்தரை வழிபடும் முறை, நேரம் மற்றும் மந்திரங்கள் |kelakkiya Siddhar| Ashoka Astro

பொதிகை மலை அகஸ்தியர்  அபிஷேகம் | பொதிகை மலை அகத்தியர் சுவாமி பூஜை | Pothigaimalai Agathiyar Abisegam

பொதிகை மலை அகஸ்தியர் அபிஷேகம் | பொதிகை மலை அகத்தியர் சுவாமி பூஜை | Pothigaimalai Agathiyar Abisegam

கோடிகளில் புரண்டு தெருக்கோடிக்கு வந்த கண்ணீர் கதை | Kanakkanpatti sarguru miracles | Iraimai Astro |

கோடிகளில் புரண்டு தெருக்கோடிக்கு வந்த கண்ணீர் கதை | Kanakkanpatti sarguru miracles | Iraimai Astro |

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]