thiruvathigai | திருவதிகை | வீரட்டேஸ்வரர் கோயில் | அட்டவீரட்டம் | திரிபுராந்தகர் | கடலூர் மாவட்டம்
Автор: Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
Загружено: 2023-12-26
Просмотров: 1181
Описание:
திருச்சிற்றம்பலம்
தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் # 73
ஊர் - திருஅதிகை
தற்போது - திருவதிகை
வரிசை - 7. நடு நாடு
மூலவர் - வீரட்டேஸ்வரர்
திரிபுராந்தகர்
அம்பாள் - பெரியநாயகி
திரிபுரசுந்தரி
பாடியவர் - திருஞானசம்பந்தர் -1
திருநாவுக்கரசர் -14
சுந்தரர் -1
தேவாரம் - "கூற்றாயினவாறு"
விருக்ஷம் - சரக்கொன்றை,
தீர்த்தம் - கெடிலம்,சூலை
மாவட்டம் - கடலூர்
சிவமயம்
இன்று ஆதிரை திருநாள்( திருவாதிரை ) இந்த நன்னாளிலே தேவாரப் பாடல் பெற்ற கோயிலின் ஒரு முக்கிய ஸ்தலமாகவும் அட்டவீர ஸ்தலங்களில் ஒன்றான இந்த திருவதிகை கோயிலைப் பற்றி பதிவிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இந்த நன்னாளிலே இந்த பதிவை பார்க்கும் கேட்கும் அத்தனை அடியார்களுக்கும் இறைவனின் அருட்கடாட்சம் பெருகட்டும். திருஅதிராயமங்கலம் என்று அழைக்கப்பட்டு பிற்காலங்களில் திருவதிகை என்று தற்போது அழைக்கப்படும் இந்த ஸ்தலத்தில் இறைவனும் இறைவியும் கருவறை உள்ளே திருமண காட்சியுடன் இருப்பது தரிசிக்கும் பக்தர்களுக்கு வாழ்வில் மங்கள நிகழ்வுகள் ஏற்படும் என்ற தாத்பரியத்திலேயே அமைந்துள்ளது. இதனால்தான் இந்த ஸ்தலத்தை தரிசிப்பவர்களுக்கு திருமணம் கைகூடும் அமைப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே இந்த ஊருக்கு அதிராயமங்கலம் என்றும் பெயர் அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக முப்புரம் எரித்த சிவபெருமானான திரிபுராந்தகரும் அம்மன் திரிபுரசுந்தரி இங்கு இருப்பது தனி சிறப்புதான். எதிரி பயம் நீங்கவும் எடுத்த காரியம் கைகூடவும் வழிபட வேண்டிய மூர்த்தங்கள் இவர்கள். சமண சமயத்தில் அதீத பற்று கொண்டு தனது தமக்கையாரின் அறிவுறுத்தலின் பெயரில் பிற்காலங்களில் சைவ சமயத்தின் மீது பற்று கொண்டு தேவாரப் பாடல்களை இயற்றி கோயில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி என்ற ஒன்றை துவக்கி வைத்து தனது தனி முத்திரையை பதித்து தொண்டு செய்த நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசு நாயனாரை இறைவன் ஆட் கொண்ட ஸ்தலம் தான் இது திருவதிகை. இந்த ஒரு ஸ்தலத்தில் மட்டும் 14 பதிகங்களை இயற்றியுள்ளார் திருநாவுக்கரசர். அதிலும் குறிப்பிட்டு சொல்வதென்றால் "சுண்ணவென் சந்தனச் சாந்தும்" என்ற பதிகத்தில் சமணர்களால் அவருக்கு இழைத்த அநீதிகள் சொல்லப்பட்டிருக்கும் அதிலிருந்து அவர் மீண்ட அற்புதங்களைப் பற்றியும் பாடல் அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பாடல்களின் முடிவிலும் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை என்று அவர் எதிர்த்த போராட்டங்களை அற்புதமாக குறிப்பிடப்பட்டிருக்கும். மூவராலும் பாடல் பெற்ற அற்புத திருத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம். இந்த பதிவின் தலைப்பில் தமிழகத்தின் எல்லோரா என்று குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த ஸ்தலத்திற்கு அது குறைவுதான். எல்லோராவை பற்றி குறிப்பிடும் பொழுது வட நாட்டின் திருவதிகை என்று குறிப்பிடும் அளவிற்கு பிரமிக்க வைக்கும் பல அற்புத சிற்பங்களை கொண்ட ஸ்தலம் இது. உலகமே வியக்கும் தாஜ்மஹாலுக்கு சற்றும் குறைந்தது அல்ல நம் தஞ்சை பெரிய கோயில் அதுபோல இந்த திருவதிகை எல்லோரா சிற்பங்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல. இந்த ஒரே ஸ்தலத்தில் சிவபெருமானின் பல ரூபங்களை ஆங்காங்கே காணலாம். சேர,சோழ, பாண்டிய ,பல்லவ, சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், விஜயநகர மன்னர்கள், என்று பலராலும் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்ட ஸ்தலம். நம் மனம் ஒருநிலைப்பட்டு அமைதி பெறும் பொழுது நம் பிரச்சனைகளும் நோய்களும் தீரும் என்பது சித்தர்கள் வாக்கு. அந்த மகா மருந்தை தரக்கூடிய அற்புதத் திருத்தலம் தான் இந்த திருவதிகை.
சிவாய நம.........
https://maps.app.goo.gl/M2tcAbnFaRMof...
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
Ganesh mani
Contact us
WhatsApp - 8056179430
mail- [email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: