ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

சங்க கால நட்பு, கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு, Friendship in Sangam

Автор: முயற்சி முருகேசன் Muyarchi Murugesan

Загружено: 2022-01-03

Просмотров: 336

Описание: வணக்கம்.
இலக்கியங்கள் வகைப்படுத்தியிருக்கும் உறவுகளில் நட்பு சிறப்பிடம் பெறுகின்றது. தாய் - பிள்ளை, கணவன்- மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாகப் போற்றப்படுகின்ற உயர் உறவு நட்பாகும். நட்புக்காகத் திருக்குறள் நான்கு அதிகாரங்களை ஒதுக்கியிருக்கின்றது.

“நெஞ்சத்து அகநக நட்பது நட்பு' என்றும், "அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு" என்றும், "இடுக்கண் களைவதாம் நட்பு" என்றும், "கொட்புன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்றும் நட்புப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார் வள்ளுவர்.

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையர்

இலக்கியங்கள் இன்றுவரை போற்றிக் கொண்டாடும் நட்பு பிசிராந்தையர் என்ற புலவருக்கும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனுக்கும் இடையிலானது.

பாண்டிய நாட்டிலே பிசிர் என்ற ஓர் ஊர் இருந்தது. இந்த ஊரிலே வாழ்ந்த ஒரு புலவரின் பெயர் ஆந்தையார். ஊரின் பெயரைக் கூடவே இணைத்து தன் பெயர் கொள்வது அக்கால புலவோர் வழக்கம். இவரும் பிசிராந்தையர் ஆனார்.

இவரது நாடு பாண்டிநாடு ஆயினும் சோழ மன்னனான கோப்பெருஞ்சோழனின் நல்லியல்புகளைக் கேள்வியுற்று அவன் மேல் பேரன்பு கொண்டார். தமிழ்மேல் பெருங்காதல் கொண்ட சோழன் செய்யுள் இயற்றுவதிலும் வல்லவன். புலவோரைப் போற்றுவதிலும் உயர்ந்தவன். இத்தகைய ஒரு மன்னன் மீது தமிழ்ச்சான்றோர் பேரன்பு கொள்வது இயல்பே.

பிசிர் என்ற ஊரிலிருந்து நெடுந்தொலைவில் இருந்தது சோழனின் உறையூர். சோழனைக் கண்டு வர பிசிராந்தையரால் முடியவில்லை.

அக்காலத்தில் சிறந்த செய்யுள்களை இயற்றிப் புகழ்பெற்றிருந்தார் பிசிராந்தையர்.

“யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின், .....”

என்று தொடங்கும் இவரது செய்யுள் பெரும் புகழ் பெற்றது. இவை யாவற்றையும் செவியற்ற சோழனும் பிசிராந்தையர் மீது பெரும் அன்பு கொண்டான். பாண்டி நாட்டுக்குச் செல்வோர் வாயிலாகத் தன் அன்பைப் புலவருக்குத் தெரிவித்துவந்தான்.

இந்நிலையில் கோப்பெருஞ்கோழனது கொடையும் புலவரைப் போற்றும் மாண்பும் அவனது புதல்வர்களுக்கு எரிச்சலை மூட்டியது. தந்தையோடு போரிட்டு அரசைக் கைப்பற்றத் தயாராயினர். சூழ்ச்சிகளோடு கலந்து மூண்ட போரில் தன் புதல்வரைக் எதிர்க்கத் தயாரான கோப்பெருஞ்சோழனை புலவர் எயிற்றியனார் தடுத்தார். ‘மன்னா நீ மறைந்த பிறகு இந்த நாடு யாருக்கு? அவர்களுக்குத்தானே’ என உணர்த்தினார்.

புதல்வர்களை மன்னித்து அவர்களுக்கு அரசை வழங்கிவிட்டு வடக்கிருந்து உயிர்நீக்கப் புறப்பட்டான் சோழன்.

இந்த செய்திகள் எதுவும் பிசிராந்தையருக்குத் தெரியாது.

வடக்கிருக்கச் சென்ற சோழன் உடன் சென்ற பலவர் பொத்தியாரை நோக்கி, பொத்தியாரே, என் நண்பர் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். அவரிடம் என் அன்பைத் தெரிவித்துவிடுங்கள் என்றான்.
“மன்னா அது எப்படிச் சாத்தியம்? இங்கு நடந்த எதுவும் அவருக்குத் தெரியாதே?”
“அவர் நிச்சயம் என்னைக் காண வருவார்” என்றான் சோழன் உறுதியுடன்.

நட்பின் மிகுதியால் மன்னர் கருத்திழந்து பேசுகின்றார் என அருகிருந்த சான்றோர் தமக்குள் பேசிக்கொண்டனர். இது மன்னன் செவியில் விழுந்தது.

“பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.” (புறம் 215)

“பிசிர் எனும் ஊரைக் கொண்டோன் நான் செல்வச் செழிப்போடு இருந்தவேளை என்னைக் காண வருபவன் அல்லன். நான் துன்பமுற்றிருக்கும் வேளையிலேயே வரக் கூடியவன். நிச்சயமாக வருவான்” என்றான் மன்னன்.

கூட இருந்தோர் அனைவரும் அதை நம்பவில்லை ஆயினும் மன்னன் வேண்டுகோளை ஏற்றனர்.

நீரும் உணவும் இன்றி வடக்கிருந்து உயிர்நீத்தான் சோழன். அரசன். இறந்த ஓரிரு நாட்களில் அவன் கூறியதைப் போன்றே பிசிராந்தையர் அங்கு வந்தார். அவர் வரவு கண்டு எல்லோரும் வியந்தனர். நடந்ததைக் கூறினர். ஆறாத் துயர் கொண்டார் பிசிராந்தையர். மரணத் தறுவாயிலும் மன்னன் கொண்டிருந்த நடபின் ஆழம் அவரைத் துயரத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றது.

மன்னன் வடக்கிருந்து உயிர்நீத்த இடத்திற்கு இருகே தானும் வடக்கிருந்து உயிர்நீத்தார்.

கண் கொண்டு காணாத இருவரின் நெஞ்சார்ந்த நட்பின் ஆழத்தை பொத்தியார் துயரம் சொரியப் பாடினார்.

“இசைமரபு ஆக நட்பு கந்தாக
இனியதோர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே." (புறம் 217)

புகழ் மேம்பாடு அடையும்படியாக நட்பையே பற்றுக்கோடாகக் கொண்ட “மன்னன் நல்லதொரு பொழுதில் என் நண்பரான பிசிராந்தையர் இங்கு வருவார்” என்றான். இவ்வாறு உரைத்த மன்னனமு பெருமையும், மன்னன் கூற்று பொய்க்காவண்ணம் வந்துசேர்ந்த பிசிராந்தையரின் அறிவும் பெரு வியப்பைத் தருகின்றது.

காலம் உள்ளவரை போற்றப்படவல்ல இலக்கிய நட்பு இதுவெனச் சான்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
சங்க கால நட்பு, கோப்பெருஞ்சோழன்   பிசிராந்தையார் நட்பு, Friendship in Sangam

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

19//12/2025  இந்த பதிவு  லண்டனில் இருக்கும்  you tobe  ப்பாளர் ஜெயபாலன் அவர்களுக்கு எதிரானது.

19//12/2025 இந்த பதிவு லண்டனில் இருக்கும் you tobe ப்பாளர் ஜெயபாலன் அவர்களுக்கு எதிரானது.

ஔவையார் , Avvaiyar, அவ்வையார், எத்தனை அவ்வையார் இருந்தனர், சங்க கால பெண்பாற் புலவர்கள்.

ஔவையார் , Avvaiyar, அவ்வையார், எத்தனை அவ்வையார் இருந்தனர், சங்க கால பெண்பாற் புலவர்கள்.

✨🌺🌺வெண்ணிலவுக்கு வானத்த பிடிக்கலையா 💞💞✨

✨🌺🌺வெண்ணிலவுக்கு வானத்த பிடிக்கலையா 💞💞✨

Pisiranthaiyar +koperumchozhan - friendship/பிசிராந்தையார்+கோப்பெருஞ்சோழன்  நட்பு-Prema gnanamurugan

Pisiranthaiyar +koperumchozhan - friendship/பிசிராந்தையார்+கோப்பெருஞ்சோழன் நட்பு-Prema gnanamurugan

4 Hours Chopin for Studying, Concentration & Relaxation

4 Hours Chopin for Studying, Concentration & Relaxation

ФЕСТИВАЛЬ «ЯВЛЕНИЕ». КОНЦЕРТ «ПАГАНИНИ РУССКОЙ БАЛАЛАЙКИ»

ФЕСТИВАЛЬ «ЯВЛЕНИЕ». КОНЦЕРТ «ПАГАНИНИ РУССКОЙ БАЛАЛАЙКИ»

என்னடி! ஓவரா கத்துற அவன் வன்னியரசு மயிர போய் கேளுடி! செம்பு தூக்கி செருப்படி வாங்கிய மதிவதனி Seeman

என்னடி! ஓவரா கத்துற அவன் வன்னியரசு மயிர போய் கேளுடி! செம்பு தூக்கி செருப்படி வாங்கிய மதிவதனி Seeman

Забери свой металлолом - Турция возвращает России С-400 или опять удар в спину

Забери свой металлолом - Турция возвращает России С-400 или опять удар в спину

திருவல்லிக்கேணி அக்ரஹாரம் Triplicane Agrahara Tour

திருவல்லிக்கேணி அக்ரஹாரம் Triplicane Agrahara Tour

МОЖНО БОЛЬШЕ НЕ БОЯТЬСЯ БУДУЩЕГО Разум молодежи другой ТАТЬЯНА ЧЕРНИГОВСКАЯ

МОЖНО БОЛЬШЕ НЕ БОЯТЬСЯ БУДУЩЕГО Разум молодежи другой ТАТЬЯНА ЧЕРНИГОВСКАЯ

இலக்கிய இன்பம் 9 யாதும் ஊரே யாவரும் கேளிர், Pleasure of Literature part 9

இலக்கிய இன்பம் 9 யாதும் ஊரே யாவரும் கேளிர், Pleasure of Literature part 9

СЕКРЕТЫ спецслужб. РАЗВЕДЧИЦА Елена Вавилова. Удивительная ИСТОРИЯ.

СЕКРЕТЫ спецслужб. РАЗВЕДЧИЦА Елена Вавилова. Удивительная ИСТОРИЯ.

Kopperuncholan History in Tamil | Kopperuncholan Pisiranthaiyar story | In Tamil 👬

Kopperuncholan History in Tamil | Kopperuncholan Pisiranthaiyar story | In Tamil 👬

4 часа Шопена для обучения, концентрации и релаксации

4 часа Шопена для обучения, концентрации и релаксации

புஸ்ஸி முன்னாடி அடித்துக்கொண்ட தவெக செயலாளர்கள் | முள்வேலி போட்ட செங்கோட்டையன் | ஈரோடு கூத்துகள்

புஸ்ஸி முன்னாடி அடித்துக்கொண்ட தவெக செயலாளர்கள் | முள்வேலி போட்ட செங்கோட்டையன் | ஈரோடு கூத்துகள்

Иван Ургант всё уехал из РФ. Дмитрий Нагиев сказал своё мнение

Иван Ургант всё уехал из РФ. Дмитрий Нагиев сказал своё мнение

Tamil story பாண்டிய மன்னன் AI CARTOON VIDEO #aicartoonvideos #pandiyaraja_cartoon #tamilcartoon

Tamil story பாண்டிய மன்னன் AI CARTOON VIDEO #aicartoonvideos #pandiyaraja_cartoon #tamilcartoon

சாட்டை துரைமுருகனுக்கு தேர்தலில் சீட் இருக்கா? உடைக்கும் NTK Dr. Karthikeyan | Seeman | Bharathiyar

சாட்டை துரைமுருகனுக்கு தேர்தலில் சீட் இருக்கா? உடைக்கும் NTK Dr. Karthikeyan | Seeman | Bharathiyar

КЛАССИЧЕСКАЯ МУЗЫКА ДЛЯ ВОССТАНОВЛЕНИЯ НЕРВНОЙ СИСТЕМЫ🌿 Нежная музыка успокаивает нервную систему 22

КЛАССИЧЕСКАЯ МУЗЫКА ДЛЯ ВОССТАНОВЛЕНИЯ НЕРВНОЙ СИСТЕМЫ🌿 Нежная музыка успокаивает нервную систему 22

சங்ககாலப் புலவர் அம்மூவனார், Ammovanaar

சங்ககாலப் புலவர் அம்மூவனார், Ammovanaar

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]