பட்டுக்கோட்டை அரசியல் வரலாற்றில் உயிரில்லா உயிரோட்டம் சேர்மன் விசுவநாதன்
Автор: Naalai Namadhe News
Загружено: 2021-07-16
Просмотров: 11908
Описание:
சேர்மன் விசுவநாதன்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா பண்ணைவயல் கிராமத்தில் சுந்தரராஜ சேர்வைகாரர்-அன்னபூரணி அம்மாள் இவர்களுக்கு ஐந்தாவது பிள்ளையாக பிறந்தவர் பட்டுக்கோட்டையின் முன்னாள் சேர்மன் விஸ்வநாதன்.
1954 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பிறந்தவர் தனது பள்ளிப்படிப்பை தேவகோட்டை டி பிரிட்டோ பள்ளியில் படித்தார், தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளம்வயதிலேயே ஆர்வம் கொண்டு தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
பட்டுக்கோட்டை நகர திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்து 1986ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகரசபை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்றார்
பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வைகோவுடன் கைகோர்த்தவர் 2001 ஆம் ஆண்டு நகரசபை தலைவர் தேர்தலில் தனது மனைவி ஜெயபாரதி விசுவநாதன் அவர்களை வேட்பாளராக களமிறக்கி பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.
பிறகு 2006ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி சட்டமன்ற வேட்பாளராக களம் கண்டார்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் கொண்டார்.
தானும் தன்னுடைய மனைவியும் சேர்மனாக இருந்த காலகட்டத்தில் பட்டுக்கோட்டை நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மேம்படுத்தினார்.
நகரின் முக்கிய பிரச்சனையான குடிநீர் பிரச்சினையை சீர்செய்து மக்களின் தாகம் தீர்த்தார். ஒருகட்டத்தில் தனது சொந்த டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நகர மக்களுக்கு வழங்கினார்
பட்டுக்கோட்டையின் புறநகர் பகுதிகளான லெட்ச தோப்பு சிவகொல்லை பாப்பாவெளி பாளையக்கோட்டை ஆதி தெரு பூக்கொல்லை போன்ற பகுதிகளில் சாலை வசதி குடிநீர் வசதி அடிப்படை கட்டமைப்பு வசதி என பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டார்
பட்டுக்கோட்டை நகர்புறத்தில் பெரும்பான்மையான நபர்களை அறிந்து,பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு மக்களோடு மக்களாக இணைந்து வாழ்ந்தவர் சேர்மன் விஸ்வநாதன்
எத்தனையோ நபர்கள் பதவிக்காக பணத்துக்காக அதிகாரத்திற்காக கட்சி விட்டு கட்சித் தாவும் நிலையிலும்கூட உண்மைக்கு கைகொடுத்து விசுவாசத்திற்கு உதாரணமாக இறுதிவரை வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஓர் அங்கமாக விளங்கினார்
அஞ்சாநெஞ்சன் அழகிரி, கவிஞர் கல்யாணசுந்தரம் வரிசையில் தமிழகத்தில் பட்டுக்கோட்டை என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது சேர்மன் விஸ்வநாதன்
அனைத்து சமுதாய மக்களிடமும் அனைத்து அரசியல் கட்சி இயக்கங்களிடமும் இனிய தோழமை கொண்டு மக்களின் நலனுக்காக நகரத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்
பட்டுக்கோட்டையை பொருத்தவரை சேர்மனாக எத்தனை நபர்கள் வந்து சென்றாலும் அப்பெயருக்கு இன்றளவும் பொருத்தமாய் திகழ்ந்தவர் சேர்மன் விஸ்வநாதன்.
எளிய மக்களின் தோழனாக, ஏழைகளின் பங்காளனாக, நகரத்தின் நாயகனாக வலம் வந்தவர் 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் நாள் இரவு 8 மணி அளவில் இவ்வுலகுக்கு விடைகொடுத்தார்.
பட்டுக்கோட்டை அரசியல் வரலாற்றில்...சேர்மன் விஸ்வநாதன் உயிரில்லா உயிரோட்டம் என்பது எவராலும் மறுக்கமுடியாத எதார்த்த சத்தியம்.
இந்த நேரத்தில் நகர மக்களின் இதயத்தில் நீங்கா பதிவை பெற்றிருக்கும் சேர்மன் விசுவநாதன் அவர்களை உறவாய் - உணர்வாய் பிளாக்மூன் நினைவில் கொள்கிறது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: