பல ஜென்ம பாவம் விலகி இன்றே நீங்கள் கற்பனை செய்ய முடியாத அதிசயம் உங்களுக்கு நடக்கப்போகுது-பெரியவா
Автор: பேசும் தெய்வம் - மஹா பெரியவா
Загружено: 2025-09-17
Просмотров: 88892
Описание:
Pesum Deivam Maha Periyava
திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.
செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.
நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.
பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.
அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.
காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.
திருச்சிற்றம்பலம்.
இந்த பதிகமானது திருவேங்கடத்து எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணப்பட்டது ஆகும்.
கொங்கலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த
கோவலன் எம்பிரான்*
சங்கு தங்கு தடங்கடல்
துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்கு புள்ளினை வாய்ப் பிளந்த
புராணர் தம்மிடம்*
பொங்கு நீர் செங்கயல் திளைக்கும் சுனைத்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*
பள்ளியாவது பாற்கடல் அரங்கம்
இறங்கவன் பேய்முலை*
பிள்ளையாய் உயிருண்ட எந்தை
பிரான் அவன் பெருகுமிடம்*
வெள்ளியான் கரியான்
மணிநிற வண்ணன் என்று எண்ணி*
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*
நின்ற மாமருது இற்று வீழ
நடந்த நின்மலன் நேமியான்*
என்றும் வானவர் கைதொழும்
இணைத் தாமரை அடி எம்பிரான்*
கன்றி மாறி பொழிந்திடக்
கடிதா நிறைக்கு இடர் நீக்குவான்*
சென்று குன்றம் எடுத்தவன்
திருவேங்கடம் அடை நெஞ்சமே
பார்த்தர்க்காய் அன்று பாரதம் கை செய்திட்டு
வென்ற பரஞ்சுடர்*
கொத்து அங்கு ஆயர் தம் பாடியில்
குரவை பிணைந்த எம் கோவலன்*
ஏத்துவார் தம் மனத்துள்ளான்
இடவெந்தை மேவிய எம்பிரான்*
தீர்த்த நீர் தடம் சோலை சூழ்
திருவேங்கடம் அடை நெஞ்சமே
வன்கையான் அவுணர்க்கு நாயகன்
வேள்வியில் சென்று மாணியாய்*
மண் கையால் இறந்தான்
மராமரம் ஏழும் எய்த வலத்தினான்*
எண் கையான் இமயத்துள்ளான்
இருஞ்சோலை மேவிய எம்பிரான்*
திண் கைம்மா துயர் தீர்த்தவன்
திருவேங்கடம் அடை நெஞ்சமே
எண் திசைகளும் ஏழுலகமும் வாங்கிப்
பொன் வயிற்றில் பெய்து*
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளிகொண்டவன்
பால்மதிக்கு இடர் தீர்த்தவன்*
ஒண்திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்
ஒள் எயிற்றோடு*
திண்திறல் அறி ஆயவன்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*
பாரும் நீர் எரி காற்றினோடு
ஆகாசமும் இவை ஆயினான்*
பேரும் ஆயிரம் பேச நின்ற
பிறப்பிலி பெருகுமிடம்*
காரும் வார்பனி நீள் விசும்பிடை
சோறு மாமுகில் தோய் தர*
சேரும் வார்பொழில் சூழ்
எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே
அம்பரம் அனல் கால் நிலம்
சலமாகி நின்ற அமரர் கோன்*
வம்புலாம் அலர் மேல்
மலிமட மங்கை தன் கொழுநன் அவன்*
கொம்பின் அன்ன இடை மடக் குறமாதர்
நீளிதணந்தொரும்*
செம்புனம் அவை காவல் கொள்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*
பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்
சொல்லி நின்று பின்னரும்*
பேசுவார் தமை உய்ய வாங்கிப்
பிறப்பறுக்கும் பிரானிடம்*
வாசமாமலர் நாறுவார் பொழில்
சூழ் தரும் உலகுக்கெல்லாம்*
தேசமாய்த் திகழும் மலை
திருவேங்கடம் அடை நெஞ்சமே*
செங்கயல் திளைக்கும் சுனைத்
திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி
வண்தமிழ் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்துரைக்க வல்லார்கள்
தஞ்சமதாகவே*
வங்கமாகடல் வையம் காவலராகி
வானுலகு ஆள்வரே*
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: