கட்டபொம்மன் வழிபட்ட பாஞ்சாலங்குறிச்சி ஜக்கம்மா தேவி ஆலய வரலாறு | Jakkamma Temple History in Tamil
Автор: JK Nursery Garden
Загружено: 2021-07-30
Просмотров: 170006
Описание:
#Channel_8_Tamil #RJ_Jeyakalyani #VeeraJakkadeviAlayam #Panchalankurichi #VeerapandiyaKattabommanMemorialFort :
#பாஞ்சாலங்குறிச்சி வீர ஜக்கமாதேவி என்ற பெண் தெய்வத்தின் சோகக்கதை:- ஜக்கம்மா தேவி என்பது ராஜகம்பளம் தொட்டிய நாயக்கரால் வணங்கப்படும் குல தெய்வம். தொட்டிய நாயக்கர்களில் சிலர் குறி சொல்தல், கோடாங்கி சொல்தல், அருள் வாக்களித்தல், குடுகுடுப்பை சொல்தல், கைரேகை சோதிடம் பார்த்தல், மாந்திரீகம் செய்தல் போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தேவி ஜக்கம்மாதான் முதல் தெய்வம். ஜக்கம்மா காளி தேவியின் அவதாரம் என்றும், இவர் போயசம்மா, எல்லம்மா, ஜக்கும்மா, போலேரம்மா, பொம்மம்மா போன்ற வேறு சில பெயர்களாலும் இந்த மக்களால் அழைக்கப்படுகிறார்.
ஜக்கம்மா தேவி வரலாறு
இஸ்லாமிய மன்னன் ஒருவர் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருவரை விரும்பி மணமுடித்துத் தரும்படி கேட்டதாகவும், தங்கள் சமுதாயப் பெண்ணின் பாதுகாப்பிற்காக கம்பள நாட்டை ஆண்டு வந்த பாலராசு நாயக்கர் என்ற மன்னர் இஸ்லாமியர்களிடம் இருந்து தங்கள் குல பெண்களைக் காப்பாற்றிக் கொள்ள தெற்கு நோக்கி தமிழகத்திற்கு செல்ல ஆணையிட, ஜக்கம்மா என்ற பெண் தலைமையில் கம்பளத்து சமுதாய மக்கள் சிலர் அங்கிருந்து தெற்கு நோக்கி தமிழகத்துக்கு வந்தனர்.
இப்படி வரும் வழியில் பல தடைகள் ஏற்பட்டதாகவும் , அதனை வீரம், மாந்தரிகம் போன்றவற்றால் கலைத்து அவர்களை ஜக்கம்மா காத்ததால் அவரை தெய்வமாக வழிபடத் தொடங்கினர். இதனால் இவர் ராஜகம்பளம் சாதியினரால் குல தெய்வமாக வணங்கப்படுகின்றார். என்று வரலாறு கூறுகிறது.
மேலும் காப்பு இனத்தில் பிறந்த ஜக்கம்மாளுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்ததாகவும் , இந்தப் பிள்ளைகளின் வம்சம்தான் தற்போதைய ஒன்பது கம்பளத்து மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.
மாந்தரிகம்
ஜக்கம்மா மிக சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை சோதிட நம்பிக்கையுடைய பலருக்கும் உண்டு. குடுகுடுப்பை, கைரேகை சோதிடம், மாந்தரிகம், கோடாங்கி பார்த்தல் போன்ற வேலைகள் ஜக்கம்மா பெயரைச் சொல்லித்தான் தொடங்கப்படுகிறது. கம்பளத்தார் சொல்லும் வாக்கு உண்மையாக நடக்கும் என்கிற நம்பிக்கை பலருக்கும் உண்டு .
கட்டபொம்மன்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சில மன்னர்களுள் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர். இவர் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவரது குல தெய்வமாக ஜக்கம்மாவே இருந்துள்ளார். இவருடைய அரண்மனை அமைந்திருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைப் பகுதியில் ஜக்கம்மாவுக்கு கோவில் ஒன்றும் அமைத்திருந்தார். இவர் தினமும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதுடன் தன்னுடைய செயல்பாடுகளுக்கு இங்குதான் வேண்டிக் கொள்வார் என்பதும் ஒரு கும்மிப் பாடல் மூலம் தெரிகிறது . இந்த காணொளியில் நாம் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள ஜக்கம்மா தேவி கோவிலுக்கு சென்றோம். வீரபாண்டிய கட்டபொம்மனின் 5ஆம் தலைமுறை வாரிசான பீமராஜாவிடம் ஜக்கம்மா தேவி கோவில் உருவான வரலாறு பற்றி உரையாடியதை நீங்கள் பார்க்கலாம். RJ. Jeyakalyani@JK_Nursery_Gardens
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: