முருகு தமிழ்.1029 | வேலவன் வெண்பா.10 | பேசு | 10 வெண்பாக்கள் இசையுடன் | முனைவர் பொன்மணி சடகோபன்|
Автор: முருகு தமிழ்
Загружено: 2026-02-06
Просмотров: 144
Описание:
"பிருத்தி அவனாவான் பேசு"
***
*பாரெல்லாம் தேடியே பாவத்தைப் போக்கவே
ஊரெல்லாம் உன்பேரை ஓதுவார் -நல்லோர்கள்
பாரெல்லாம் போற்ற பல்லாண்டு வாழ்ந்திட
சீரெல்லாம் சேர்ப்பாய் சிறந்து.
(பிருத்தி அவன் ஆவான் பேசு)
--
*மனத்தால் வருந்தி மருவி அழைத்தால்
கனத்தில்* வருவான் கடம்பன் - பதத்தை
விதத்தில் பலவாய் விரும்பி வருவோர்
பிருத்தி அவன் ஆவான் பேசு.
(பிருத்தி அவன் ஆவான் பேசு)
--
*பேச்சும் செயலும் பெருமான் அருளே
கூச்சம் தவிர்தே குலவிடு - வீச்சாய்
அச்சம் விலக்கி அதர்மம் அகற்ற
ஏச்சு வரினும் எதிர்.
(பிருத்தி அவன் ஆவான் பேசு)
--
*எதிர்ப்பும் தவிர்ப்பும் இணைந்தே வரினும்
விதிர்ப்பை பலவாய் விலக்கு !- குவிப்பாய்
நகைப்பைத் தினமும் நலமாய் பெறவே
துதிப்பாய் முறையாய்த் தொடர்ந்து.
(பிருத்தி அவன் ஆவான் பேசு)
--
*விரும்பி வருவார் விதர்ப்பம் மொழிவார்
அரும்பு மலரால் அருச்சிப்பார் - எம்மான்
தரும்பல் அருளைத் தனக்கும் பிறர்க்கும்
வரம்பாய் வகுப்பார் வரைந்து.
(பிருத்தி அவன் ஆவான் பேசு)
--
வருவாய் முருகா வடிவில் அழகா!
திருவாய் மலர்வாய் தினமே! – அருளில்
குருவாய் இருந்தே குலமே குலவ*
உருவாய் வருவாய் உணர்ந்து.
(பிருத்தி அவன் ஆவான் பேசு)
--
*துணிந்தே செயலில் துரியம் துலங்க
அடைந்தேன் அழகன் அருளை – அணிமா*
வரத்தை அடைய வகுப்பாய் வழியே
துரத்தும் துயரைத் துடைத்து.
(பிருத்தி அவன் ஆவான் பேசு)
--
*மறந்ததின் மாற்றத்தை மண்ணில் உணர்கிறேன்
துறந்ததின் பாரம்* துயரே !– சிறந்த
அண்ணலே உன்னை அருகில் துதிக்கவே
வண்ணமாம் மஞ்ஞையில்* வா .
(பிருத்தி அவன் ஆவான் பேசு)
--
*வாழும் வழியில் வருத்தம் கொடுக்கும்
பாழும் நெறியும் பகையே - ஊழும்
விரட்டி வருதல் உனக்கே தெரிந்தும்
மிரட்டி அகற்ற மேவு.
(பிருத்தி அவன் ஆவான் பேசு)
--
*வெண்பாவின் பாட்டெல்லாம் வேலவன் பாட்டாகும்
எண்கூட்டிப் பார்த்தாலே ஏற்பாகும் - மண்மீது
கண்போலக் காக்கின்ற கந்தனின் காவலை
அண்டங்கள் ஏற்கும் அறி.
(அண்டங்கள் ஏற்கும் அறி.)
____
பாடல்
முருகு தமிழ்
முனைவர்
பொன்மணி சடகோபன்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: