ஷீரடியில் வாழ்கின்ற எங்களது சாய்நாதன் வந்துவிட்டார் தந்துவிட்டார் அருளை | சீரடி ஊர்வல பாடல்
Автор: SAI MAHIMA Tv | சாய் மஹிமா டிவி
Загружено: 2023-06-06
Просмотров: 12047
Описание:
ஷீரடியில் வாழ்கின்ற எங்களது சாய்நாதன் வந்துவிட்டார் தந்துவிட்டார் அருளை
××××××××××××××××××××××××××××××××××××××××
இசை : அக்னி கணேஷ்
பாடியவர் : சபிதா
பாடல். : சாய் சரண்யா
இது ஒரு சாய் மஹிமா டிவி தயாரிப்பு
×××××××××××××××××××××××××××××××××××××××××
ஷீரடியில் வாழ்கின்ற எங்களது சாய்நாதன் வந்துவிட்டார் தந்துவிட்டார் அருளை
நம்பிக்கையின் உருவாக பொறுமையின் பொருளாக நின்று விட்டார் வென்று விட்டார் மனதை
கருணையே வடிவாக கலியுக குருவாக
ஆளவந்தார் ஆளவந்தார் உலகை
கருணையே வடிவாக கலியுக குருவாக
ஆளவந்தார் ஆளவந்தார் உலகை
காலமெல்லாம் உன் நினைவில் நான்சாயி நிறைவுடன் வாழவையி எனைசாயி
காணவந்தோம் சீரடியில் உனைசாயி
கண்களும் குளமென
ஏன்சாயி
துன்பமெல்லாம் துனியினில் சுகமாக எரிகையில் நல்மனமே பொதுவாக
சரணம் சரணம் சாய்பாபா சீரடி சீரடி சாய்பாபா
சரணம் _1
சிலையாக அமர்ந்தாலும் உயிரோடு இருக்கின்றேன் வாக்குறுதி வழங்கிய சாய்பாபா
மனதார அழைத்தாலே மறுகணம் இருப்பாய் என்னுடைய நிழலாக குரு நாதா
தள்ளாடும் மனதினை தாழாமல் செய்திட ஊன்றுகோலின் உறுதியாய் வா பாபா
ரோகம் எல்லாம் தீரட்டுமே பாவமெல்லாம் போகட்டுமே சீரடிக்கு வந்து விட்டோம் சாய்பாபா
ரட்சகனே அற்புதனே சாய் பாபா
அர்ச்சிக்கிறோம் ஆனந்தமாய் உனை பாபா
பொற்பதமே புண்ணியனே சாய் பாபா
பொறுமையின் நித்திலமே ஸ்ரீ பாதா
சத்தியமே சந்தனமே சாய் பாபா
சடுதியில் அருளிடு ஸ்ரீவாசா
சரணம் சரணம் சாய்பாபா சீரடி ஷீரடி சாய் பாபா
சரணம் _2
சீரடிக்கு வந்தாலே திருமுகம் கண்டாலே பூரிக்குதே மனம் எல்லாம் சாய் பாபா
ஆசனத்தில் நீ அமர்ந்து அருளிடும் அழகை பார்க்கத்தானே புண்ணியமே தான் பாபா
அபயம் காட்டியே ஆசிகள் வழங்கிய
அன்னையாகமாறிய அன்னரூபா
ஞானமெல்லாம் நன்மையென ஞானி எல்லாம் நீயுமென நம்பியோரை ரட்சிக்கிறாய் பரமாத்மா
பளிங்கு பகலவ சாய் பாபா பக்தியிலே பணிந்தோம் உனை பாபா
எங்கிருந்து பார்த்தாலும் சாய்பாபா
எனை கண் பார்க்குது குருநாதா
கால் மேலே காலைப் போட்டு சாய்பாபா
ராஜாங்கம் செய்கிறாய் குருநாதா
சரணம் சரணம் சாய்பாபா சீரடி சீரடி சாய்பாபா
சரணம் _3
குருவாக இருந்து இறையாக விரிந்து ஆட்சிக்குள்ளே எனைவையி சாய் பாபா
பக்தனாக நானும் இருப்பதும் ஏனோ
பூர்வ ஜென்ம புண்ணியமே குருநாதா
சரிதமே சத்தியமாய் சந்தோசத்தின் சங்கல்பமாய்
படித்தாலே கொடுத்திடும் சாய்பாபா
உதியெல்லாம் மருந்தாக மருத்துவர் நீயாக உடற்பிணி விரட்டிடு ஸ்ரீ பாபா
பூமியெல்லாம் உன் தோட்டம் சாய் பாபா
நீரூற்றி வளர்த்திடு சாய்நாதா
புன்னகையில் லட்சணமே சாய்பாபா
பூவுலகில் அட்சயமே ஸ்ரீபாதா
சாவடியே என் மனமே சாய் பாபா
ஊர்வலம் தினம் வா திருப்பாதா
சரணம் சரணம் சாய்பாபா சீரடி சீரடி சாய்பாபா
ஓம் சாய் ராம்
இரா.சரண்யா
எந்த ஜன்மத்தில், எந்த சந்தர்ப்பத்தில், எந்நேரத்தில், எவ்விதத்தில், என்ன தவம் செய்தேனோ அறியேன்;
சாயி தம் சிறகுகளுள் என்னை அணைத்துக்கொண்டார்.
சீரடி சாய்பாபாவின் விஸ்வரூப தரிசனம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: