அபிராமி பட்டர் அந்தாதி || Abhirami Pattar || Sri Durga Lakshmi Saraswathi || Vijay Musicals
Автор: Vijay Musical
Загружено: 2018-05-08
Просмотров: 25717
Описание:
பாடல் : அபிராமி பட்டர் அந்தாதி || ஆல்பம் : ஸ்ரீ துர்கா லக்ஷ்மி சரஸ்வதி || பாடியவர் : உத்ரா || இயற்றியவர் : இரவிரங்கசுவாமி || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல் || Song : Abhirami Pattar Andhathi || Album : Sri Durga Lakshmi Saraswathi || Singer : Uthra || Lyrics : Ravirangaswamy || Music : Sivapuranam D V Ramani || Video : Kathiravan Krishnan || Tamil Devotional Song
ஒன்பது நாட்கள் நவராத்ரி பாடல்கள், NINE DAYS NAVARATHRI SONGS, 9 DAYS 9 SONGS FOR NAVARATHI, DURGA POOJA, SARASWATHI POOJA, VIJAYADASAMI POOJA, AYUDHA POOJA, AYUDA POOJA, NAVARATHRI SPECIAL, NAVARATHRI PADALGAL, NAVARATHRI SONGS, NAVARATHRI NAYAGI, NALAM THARUM NAVARATHRI, DURGA, LAKSHMI, SARASWATHI
பாடல்வரிகள் || LYRICS :
அபிராமி பட்டரின் அந்தாதி பாடலுக்கு ஆகாயநிலவு ஆனவளே
அந்தாதி பாடலை சொன்னால் எந்த நேரமும் காத்து அருள்பவளே
ஆயுஷ் ஹோமம் செய்தால் ஆயுளை விருத்தி செய்பவளே
அபிராமி தாயே அருட்பெருங்கடலே ஆனந்த வாழ்வைத் தருவாயே
திருக்கடவூரின் அபிராமி தாயே ஆனந்த வாழ்வைத் தருவாயே
அருட்பெருங்கடலே அபிராமி தாயே ஆனந்த வாழ்வைத் தருவாயே
வாடிடும் பக்தரைத் தேடியே சென்று வரம்பலத் தந்து அருள்பவளே
நாடிடும் பக்தர்கள் வேண்டிடும் வரத்தை உடனுக்குடனே கொடுப்பவளே
கூடிடும் அடியார் கூட்டத்தில் உறவாய் தேடியே வந்து செல்பவளே
அபிராமி தாயே அருட்பெருங்கடலே ஆனந்த வாழ்வைத் தருவாயே
நலம் பலம் வளம் பொருள் புத்தி புகழ் நல்லன எல்லாம் தந்து அருள்பவளே
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனம்தந்து மகிழ்ச்சி தருபவளே
சொத்து சுகம் சுகபோகம் அதிஷ்ட யோகங்கள் யாவும் அருளும் ஆத்தாளே
அபிராமி தாயே அருட்பெருங்கடலே ஆனந்த வாழ்வைத் தருவாயே
தனிப்பெரும் தெய்வம் தரணியில் நீயே தயவுடன் என்றும் அருளிடம்மா
அசரிரி வாக்கால் ஆடியார்க்கெல்லாம் ஆசிகள் என்றும் வழங்கிடம்மா
அறுகால பூஜையும் ஆகம நெறியும் தினம் தினம் சிறப்பாய் நடக்குதம்மா
அபிராமி தாயே அருட்பெருங்கடலே ஆனந்த வாழ்வைத் தருவாயே
அமுத தீர்த்தம் சிவகங்கை தீர்த்தத்தில் பக்தரின் பாவங்கள் கரையுதம்மா
அபிராமி உடனுறை அமுதீசர் பேரருள் பெறும் பெரும் பாக்யம் கிடைக்குதாம்மா
தோஷபரிகார நிவர்த்தி செய்தோம் தோஷம் யாவும் போக்கிடம்மா
அபிராமி தாயே அருட்பெருங்கடலே ஆனந்த வாழ்வைத் தருவாயே
தொல்லைப் போக்கி துன்பம் நீக்கி மகிழ்ச்சி வாழ்வு தந்திடம்மா
எல்லை கடந்தும் உன்னருளாட்சி அகிலம் எங்கும் நடக்குதம்மா
சொல்லை காக்க நிலவான மகிமை சொல்லில் ஏட்டில் அடங்காதம்மா
அபிராமி தாயே அருட்பெருங்கடலே ஆனந்த வாழ்வைத் தருவாயே
அநேகர் கூடியே அந்தாதி பாடியே கூட்டுப் பிரார்த்தனை நடக்குதம்மா
ஸ்னேகத்துடனே நீ சிரிக்கும் சிரிப்பில் உலகமும் உயிர்களும் மகிழுதம்மா
பாசாங்குசமும் கரும்பு மலர்வில்லம்பும் நான்கு கைகளில் அசையுதம்மா
அபிராமி தாயே அருட்பெருங்கடலே ஆனந்த வாழ்வைத் தருவாயே
நெய்தீபம் ஏற்றியவர் மனமெல்லாம் வந்திடும் நெய்யாய் நெகிழ்ந்து உருகுதம்மா
கற்பூர தீபம் ஏற்றியவர் பாவங்கள் கற்பூர ஜோதியில் கரையுதம்மா
எண்ணெய் விளக்கு ஏற்றிடும் அவரவர் எண்ணங்கள் என்றும் ஈடேறுதம்மா
அபிராமி தாயே அருட்பெருங்கடலே ஆனந்த வாழ்வைத் தருவாயே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: