குரூப் 2 தேர்வு கடைசி நேரத்தில் ரத்து: TNPSC குளறுபடி: தேர்வர்கள் கொதிப்பு
Автор: Dinamalar
Загружено: 2026-02-08
Просмотров: 2907
Описание:
#Partnership துணைப் பதிவாளர்,
துணை வணிக வரி அதிகாரி
நகராட்சி ஆணையர்
தொழிலாளர் உதவி ஆய்வாளர்
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
உள்ளிட்ட பல அரசு துறைகளில்
காலியாக உள்ள குரூப்-2, குரூப் 2 ஏ
பணியிடங்களுக்கான தேர்வு குறித்த
அறிவிப்பு கடந்தஆண்டு வெளியிடப்பட்டது.
828 காலி பணியிடங்களுக்கான
முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது.
4 லட்சத்து 20 ஆயிரத்து 217 பேர் எழுதினார்கள்.
தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியானது. குரூப்-2 பதவிகளுக்கான தேர்வில்
1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளுக்கான தேர்வில் 9,457 பேரும் தகுதி பெற்றனர்.
அதனை தொடர்ந்து முதன்மைத் தேர்வு
இன்று நடைபெற இருந்தது.
தமிழகம் முழுவதும் 38 மையங்களில்
தேர்வு நடக்கும் என டிஎன்பிஎஸ்சி
அறிவித்திருந்தது.
சென்னையில் 7 மையங்களில்
தேர்வு நடைபெற இருந்தது.
அரும்பாக்கம் மற்றும் நந்தனம்
தேர்வு மையங்களில் பல நூறு தேர்வர்கள் காலையிலேயே குவிந்தனர்.
அரும்பாக்கம் மையத்தில் பல தேர்வர்களுக்கான பதிவெண் இல்லை
என்பதை கடைசி நேரத்தில்தான் தேர்வர்கள் பார்த்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. அங்கிருந்த அதிகாரிகள்,
“உங்களது பதிவெண் நந்தனம் மையத்தில் இருக்கும் என்றனர். அங்கு போய் தேர்வு எழுதுங்கள் என்றனர்.
கடைசி நேரத்தில் சொன்னால் என்ன அர்த்தம்? என கேட்டு அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் தேர்வர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அரும்பாக்கத்தில் தேர்வர்கள் சாலை மறியல் செய்தனர்.
போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
#TNPSC #GroupII #GroupIIA #TamilNadu #ExamCancellation #YouthProtest #ChennaiTraffic #CentreAllocation #StudentVoices #EducationCrisis #ProtestForChange #TamilNaduStudents #ExamConfusion #TrafficJam #YouthAwareness #GovernmentResponse #StudentRights #TensionInChennai# #TNPSC #GroupII #GroupIIA #TamilNadu #ExamCancellation #YouthProtest #ChennaiTraffic #CentreAllocation #StudentVoices #EducationCrisis #ProtestForChange #TamilNaduStudents #ExamConfusion #TrafficJam #YouthAwareness #GovernmentResponse #StudentRights #TensionInChennai
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: