அஷ்டமசனி, 71/2சனி அர்தாஷ்டம சனியிடம் இருந்து காக்கும் திருநள்ளாறு பதிகம் Thirunalaru Pachai Pathigam
Автор: nam azhagiya aanmeegam
Загружено: 2023-05-06
Просмотров: 6747
Описание:
#thirunallar #thirunallaru #thirunallaru_pachai_pathigam #sani #ashtamasani #ardhashtamashani #shani #shanimantra
அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனியினால், வாழ்க்கையில் எதிர்பாராத இடர்ப்பாடுகள் ஏற்படாமலிருக்க, திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர்,/திருநள்ளாற்று ஈஸ்வரரையும், போகம் ஆர்த்த பூண்முலையாளையும் மனதில் நினைத்து ஓத வேண்டிய திருநள்ளாறு பச்சை பதிகம் பதிகம்
சனியிடம் இருந்து காக்கும் பாடல் :
நவகிரகங்களில் அனைவரையும் நடுங்க வைக்கும் கிரகம் என்றால் அது சனி தான்.
சனி பகவானின் பார்வை பட்டால் அரசனும் ஆண்டி ஆவான்.
அதே சனி பகவானின் அருள் இருந்தால் ஆண்டியும் அரச பதவி பெற முடியும்.
நீதி தவறாதவராக விளங்கும் சனி பகவான், அவரவரின் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்க பலன்களை தரக் கூடியவர்.
துன்பம் போக்கும் பாடல் :
அப்படிப்பட்ட சனியால் ஏற்படும் துன்பங்கள் நீங்கவும், வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத துன்பங்கள், பிரச்சனைகள் நீங்கவும் திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தை படித்தால்/kettal நல்ல பலன் கிடைக்கும்.
பன்னிரு திருமுறைகளில் முதல் திருமுறையாக விளங்குவது திருஞான சம்பந்தர் அருளிய தேவாரம்.
இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பதிகமும் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், வாழ்க்கையில் ஏற்படும் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் தீர்க்கும் சக்தி படைத்ததாகவும் உள்ளது.
சைவ சமயம் தழைக்க செய்த பதிகம் :
சமண மற்றும் சைவ சமயங்களுக்கு இடையே கடும் போட்டி நடந்த காலத்தில் திருஞான சம்பந்தரை மதுரையில் நகரில் வாதத்திற்கு அழைத்தனர் சமணர்கள்.
அனல் வாதம், புனல் வாதம் நடைபெற்றது.
இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடைய சமயமே உயர்ந்தது என ஒப்புக் கொள்ளலாம் என மதுரை மன்னர் முன்னிலையில் போட்டி நடந்தது.
அப்போது சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி, அதை தீயில் போட்டனர்.
ஏடுகள் தீயில் எரிந்தன.
பிறகு சம்பந்தர் முறை வந்த போது திருமுறை ஏட்டில் கயிறு போட்டு பார்த்த போது, நவகிரக தலங்களில் சனி பகவானுக்கு உரிய தலமான திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரர் மீது பாடிய போகமார்த்த பூன்முலையாள் என துவங்கும் பதிகம் வந்தது.
இந்த பதிகம் எழுதப்பட்ட ஏட்டினை சம்பந்தர் தீயில் போட்டார்.
ஆனால் அது தீயில் எரியாமல், பச்சை ஓலையாக வெளிவந்தது.
திருநள்ளாறு பதிகம் :
சமணர்கள் வாதத்தில் தோல்வி அடைந்ததால் மதுரை மன்னன் சைவ சமயத்திற்கு மாறினார்..
பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பெருமையை பெற்ற பதிகம் திருநள்ளாறு பதிகம்.
இதற்கு பச்சைப்பதிகம் என்றும் பெயர். 11 பாடல்களைக் கொண்ட பச்சைப் பதிகத்தை பாராயணம் செய்தால் சனி பகவானால் ஏற்படும் துன்பங்கள், எதிர்பாராத துன்பங்கள், கஷ்டங்களில் இருந்து மீள முடியும்.
திருநள்ளாறு பச்சைப்பதிகம் :
போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே. 1
தோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே. 2
ஆன்முறையால் ஆற்ற வெண்நீறு ஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே. 3
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. 4
ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான் மேயது நள்ளாறே. 5
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. 6
வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே. 7
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டுமாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர்பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. 8
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
"அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல்ஆகா உள்வினை' என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே. 9
மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான்; மேயது நள்ளாறே. 10
nam azhagiya aanmeegam You Tube Channel
தண்புணலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே. 11
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: