ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

Pathigams for Wealth-பணம் பெற உதவும் மூன்று அற்புதமான பதிகங்கள் (In description)

Автор: Annamalai Adimai

Загружено: 2022-05-09

Просмотров: 16444

Описание: திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் திருவாவடுதுறை பதிகம்

1.இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

2. வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

3. நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

4.தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

5.கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

6.வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

7.வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

8.பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

9. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

10. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

11. அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய்
விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் னேறுவர்
நிலமிசை நிலையிலரே

II திருச்சிற்றம்பலம்
சுந்தரர் பதிகம் ஓணகாந்தன்தளி

1.நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்;
கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்;
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு,
உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே! .

2.திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி;
அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கொற்று அடியாளால்;
உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! .

3.பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி உன் கழல் ஏத்துவார்கள்
“மற்று ஓர் பற்று இலர்” என்று இரங்கி, மதி உடையவர் செய்கை செய்யீர்;
அற்ற போழ்தும் அலந்த போழ்தும், ஆபற் காலத்து, அடிகேள்! உம்மை
ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே! .

4.வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று
இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்?
பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! .

5.கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே,
ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்;
தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்;
ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே! .

6.வார் இருங்குழல், மை வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்-
தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த,
கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய்
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!

7.பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை;
மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்;
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓரீர்;
உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே!

8.வலையம் வைத்த கூற்றம் ஈர்வான் வந்து நின்ற வார்த்தை கேட்டு,
சிலை அமைத்த சிந்தையாலே திருவடீ தொழுது உய்யின் அல்லால்,
கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவர் ஊடு ஐ-
உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்-ஓணகாந்தன் தளி உளீரே!

9.வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே?
ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று;
தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உம்தம்
ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே!

10.ஓவணம்(ம்) ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம்
ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி,
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன
பா வணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே

III திருச்சிற்றம்பலம் சுந்தரர் நம்பி பதிகம் திருமுதுகுன்றம்

மெய்யைமுற் றப்பொடிப் பூசியொர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியொர் நம்பி
கையில்ஓர் வெண்மழு வேந்தியொர் நம்பி
கண்ணும் மூன்றுடை யானொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Pathigams for Wealth-பணம் பெற உதவும் மூன்று அற்புதமான பதிகங்கள் (In description)

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

பஞ்சம் நீக்கும் பதிகம்! கடன் தொல்லை நீங்க - 11 நாட்கள் பாட வேண்டிய பதிகம்!

பஞ்சம் நீக்கும் பதிகம்! கடன் தொல்லை நீங்க - 11 நாட்கள் பாட வேண்டிய பதிகம்!

நீடிய ஆயுளும் நோயற்ற வாழ்வும் நிச்சயம்! வாழ்வில் ஒரு முறையாவது கேட்க    வேண்டிய புராணம்!

நீடிய ஆயுளும் நோயற்ற வாழ்வும் நிச்சயம்! வாழ்வில் ஒரு முறையாவது கேட்க வேண்டிய புராணம்!

சிறு ஆசைகளை அடக்கி வைத்துவிட்டு வாழ்ந்தால் தப்பிக்கலாம் | இன்றைய ரிஷபம் ராசி பலன் | Rishabam Rasi

சிறு ஆசைகளை அடக்கி வைத்துவிட்டு வாழ்ந்தால் தப்பிக்கலாம் | இன்றைய ரிஷபம் ராசி பலன் | Rishabam Rasi

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

வறுமை நீக்கி இன்பம் தரும் | இடரினும் தளரினும் | சிவன் பாடல்கள் | பலன் தரும் பதிகங்கள் | Sivan Songs

வறுமை நீக்கி இன்பம் தரும் | இடரினும் தளரினும் | சிவன் பாடல்கள் | பலன் தரும் பதிகங்கள் | Sivan Songs

சித்தர்கள் வணங்கிய சித்தர் மகான் ஜோதி நிர்வாண மெளன குரு சுவாமிகள் அவர்களின் வரலாறு

சித்தர்கள் வணங்கிய சித்தர் மகான் ஜோதி நிர்வாண மெளன குரு சுவாமிகள் அவர்களின் வரலாறு

அஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் பதிகம் | நெய்யும் பாலும் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல்கள்|Sivan Songs

அஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் பதிகம் | நெய்யும் பாலும் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல்கள்|Sivan Songs

தொழில் விருத்தியடைய | வாசி தீரவே காசு நல்குவீர் பதிகம் | பலன் தரும் பதிகங்கள்|Tamil Devotional Songs

தொழில் விருத்தியடைய | வாசி தீரவே காசு நல்குவீர் பதிகம் | பலன் தரும் பதிகங்கள்|Tamil Devotional Songs

தீராத வயிற்று வலி தீர | கூற்றாயினவாறு பதிகம் | சிவன் பலன் தரும் பதிகங்கள் | பக்தி பாடல்கள் Lyrics

தீராத வயிற்று வலி தீர | கூற்றாயினவாறு பதிகம் | சிவன் பலன் தரும் பதிகங்கள் | பக்தி பாடல்கள் Lyrics

சடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

சடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

😱 இழந்த பணம் திரும்பும் | lakshmi narasimhar mantra tamil | 1008 narasimha mantra japam tamil

😱 இழந்த பணம் திரும்பும் | lakshmi narasimhar mantra tamil | 1008 narasimha mantra japam tamil

அரசு வேலை கிடைக்க பாடவேண்டிய தேவாரம்

அரசு வேலை கிடைக்க பாடவேண்டிய தேவாரம்

சொந்த வீடு அமைய படிக்க வேண்டிய பதிகங்கள் & செல்ல வேண்டிய கோயில்கள் | Worship to get own house

சொந்த வீடு அமைய படிக்க வேண்டிய பதிகங்கள் & செல்ல வேண்டிய கோயில்கள் | Worship to get own house

1. இக்கட்டான சூழ்நிலையிலும் மன அமைதியைத் தரும் பதிகம் | Padhigam which gives Peace of Mind

1. இக்கட்டான சூழ்நிலையிலும் மன அமைதியைத் தரும் பதிகம் | Padhigam which gives Peace of Mind

விருச்சிகம் - இதை செய்தால் யோகம் வரும் - Viruchigam Rasi | Visakam | Anusham | Kettai | IBC Bakthi

விருச்சிகம் - இதை செய்தால் யோகம் வரும் - Viruchigam Rasi | Visakam | Anusham | Kettai | IBC Bakthi

வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/  பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/

வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/ பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/

கடன் பிரச்சினைகளில் இருந்து வெளிவர படிக்க வேண்டிய பதிகம் | Padhigams to get out of from Debt issue

கடன் பிரச்சினைகளில் இருந்து வெளிவர படிக்க வேண்டிய பதிகம் | Padhigams to get out of from Debt issue

மேஷத்தில் ராகு இவ்வளவு தெளிவா யாரும் இதுவரை சொல்லவே இல்லை!| Rahu in Aries|Kovilpatti Thangapandiyan|

மேஷத்தில் ராகு இவ்வளவு தெளிவா யாரும் இதுவரை சொல்லவே இல்லை!| Rahu in Aries|Kovilpatti Thangapandiyan|

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க | தொழில் விருத்தியடைய | இடரினும் தளரினும் | Siva Devotional Songs

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க | தொழில் விருத்தியடைய | இடரினும் தளரினும் | Siva Devotional Songs

🔴 LIVE SONGS | பணம் மலை போல் குவியும் செல்வ விநாயகர் வியாழக்கிழமை அன்று கேட்க வேண்டிய பாடல்

🔴 LIVE SONGS | பணம் மலை போல் குவியும் செல்வ விநாயகர் வியாழக்கிழமை அன்று கேட்க வேண்டிய பாடல்

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]