சுந்தர மூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருப்பதிகம் |தேவாரம் |திருப்பாண்டிக் கொடுமுடி|மற்றுப் பற்றெனக்
Автор: TalentTalks
Загружено: 2023-09-13
Просмотров: 87
Описание:
சுந்தர மூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருப்பதிகம் |தேவாரம் |திருப்பாண்டிக் கொடுமுடி|மற்றுப் பற்றெனக்
Lyrics:
(1)
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
(9)
சார ணன்தந்தை எம்பி ரானெந்தை
தம்பிரா னென்பொன்மா மணியென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்றொ ழுங்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
(10)
கோணி யபிறை சூடியைக் கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
சொல்லு வார்க்கில்லை துன்பமே.
சுவாமி : கொடுமுடிநாதர்; அம்பாள் : பண்மொழிநாயகி.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: