🔴LIVE: பல்வேறு துறை சார்ந்த முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
Автор: TN DIPR
Загружено: 2026-03-11
Просмотров: 1112
Описание:
TN - DIPR.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்
சென்னை, தலைமைச் செயலகத்தில்
(1) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 45 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்கள்.
(2) தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் வசதிக்காக செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலையில் 59,600 சதுர அடி பரப்பளவில் 35 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உள் கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படைவீரர்கள் தங்கும் விடுதி மற்றும் பயிற்சி மையக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.
(3) மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ துறையில் (Obstetrics & Gynaecology) 182 சிறப்பு மருத்துவர்களும், கதிரியக்கவியல் (Radiology) துறையில் 37 சிறப்பு மருத்துவர்களும், தடயவியல் மருத்துவ துறையில் (Forensic Medicine) 24 சிறப்பு மருத்துவர்களும், முதியோர் மருத்துவ துறையில் (Geriatrics) 6 சிறப்பு மருத்துவர்களும், இருதய அறுவை சிகிச்சை துறையில் (Cardio-Thoracic Surgery) 1 சிறப்பு மருத்துவரும், என மொத்தம் 250 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்கள்.
(4) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டின் மின்சார துறை வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்தி பயன்பாட்டினை வலுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசிற்கும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.
(5) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் 119.06 கோடி மதிப்பீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 1,85,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள 'மினி டைடல் பூங்காக்களுக்கு' அடிக்கல் நாட்டுகிறார்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: