திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா இன்று 22.10.2025 ல் தொடக்கம்...
Автор: Chendur news 2025
Загружено: 2025-10-21
Просмотров: 1326
Описание:
திருச்செந்தூர்........சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம்........ விரதம் இருக்கும் பக்தர்கள் கோவில் தற்காலிக கொட்டைகளில் தங்க தொடங்கினர்....
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது கந்த சஷ்டி திருவிழா. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 6நாள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. இந்த கந்த சஷ்டி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி விரதம் இருப்பது வழக்கம். இந்த நிலையில் விரதம் இருக்கக்கூடிய பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட சுமார் 20 தற்காலிக கொட்டைகளில் தங்கி வருகின்றனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ம் தேதி மாலை கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கந்த சஷ்டி திருவிழா ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன் மற்றும் அறங்காவலர்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: