எல்லையில் பதற்றம்... பாக் தளபதியை சுட்டுத்தள்ளிய ராணுவம் IND vs PAK | JeM |Kashmir Encounter| RAW
Автор: Dinamalar
Загружено: 2026-02-04
Просмотров: 4441
Описание:
#Partnership பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நடந்த போரில் பாகிஸ்தானை இந்தியா பந்தாடியது. அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களையும் குண்டு வீசி சிதைத்தது.
அதன் பிறகு சில மாதங்கள் அமைதியாக இருந்த பயங்கரவாதிகள் மீண்டும் வாலாட்ட துவங்கி விட்டனர். இதனால் எல்லையில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
அன்று முதல் எல்லையில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.
இந்த நிலையில் காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்கார் அருகே ஜோபார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
காஷ்மீர் போலீசார், சிஆர்பிஎப், ராணுவ வீரர்கள் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது காட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
பதிலுக்கு நம் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்; துப்பாக்கியால் சுட்டதோடு கையெறி குண்டுகளை வீசியும் தாக்கினர்.
கிட்டத்தட்ட 20 மணி நேரம் தீவிர சண்டை நடந்தது. இறுதியில் 2 பயங்கரவாதிகளை நம் வீரர்கள் சுட்டுப்பொசுக்கினர்.# #INDvsPAK #JeM #KashmirEncounter #RAW #IndiaVsPakistan #Kashmir #NationalSecurity #CounterTerrorism #Geopolitics #Intelligence #MilitaryOperation #SecurityForces #Terrorism #SouthAsia #BorderSecurity #CivilianSafety #DefenseStrategy #TerrorThreat #PoliticalTensions
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: