77 வது குடியரசு தின (2026) செய்தி / 77th Republic Day (2026) Message by Pr. S. John Madhiyazhagan.
Автор: JOHN MADHIYAZHAGAN
Загружено: 2026-01-26
Просмотров: 164
Описание:
Message by Pr. S. John Madhiyazhagan.
77 வது குடியரசு தின (2026) செய்தி:
இந்தியா 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திரம் அடைந்தது.ஒரு நாள் முன்பு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தது. எந்த மாதிரியான ஆட்சியை இரு நாடுகளும் பின்பற்ற தொடங்கின? இந்தியா மதசார்பற்ற ஒரு நாடு (Secular Country) மற்றும் குடியரசு ஆட்சி முறையில் (Republic Country) ஆட்சியை துவங்கியது.பாகிஸ்தான் இஸ்லாம் மதம் சார்ந்த (Islamic Nation) ஒரு குடியரசு ஆட்சி முறையில்(Republic Country ) ஆட்சியை துவங்கியது.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அது மன்னராட்சி. இங்கிலாந்தை ஒரு ராணி ஆட்சி செய்தார்கள். ஒரு அரசனோ அல்லது ஒரு அரசியோ ஒரு நாட்டை ஆட்சி புரிந்தால் அதை மன்னராட்சி /முடியாட்சி என்று தான் அழைக்க முடியும். ஆங்கிலத்தில் அதற்கு மொனார்க்கி ( Monarchy) என்று பெயர். இதற்கு மாறாக ஒரு குடியரசு தலைவரின் கீழ் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் மற்றும் அவரின் மந்திரிகள் மூலம் ஒரு மக்களாட்சி நடைபெற்றால் அதற்கு குடியரசு ஆட்சி முறை ( Republic Form of Government) என்று பெயர்.
இந்தியாவில் குடியரசு ஆட்சி முறை ஆரம்பித்தது ஜனவரி 26, 1950 ஆம் நாள் ஆகும்.இந்திய அரசியல் அமைப்புச் சிற்பி டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ( Constitution of India) 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சபையின் தலைவராக இருந்த இராஜேந்திரப் பிரசாத் உள்ளிட்ட உறுப்பினர்களால் அரசியலமைப்பு இறுதி செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் "அரசியல் அமைப்பு தினமாக ( Constitution Day)" கொண்டாடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி" இந்தியாவை ஆட்சி புரிவோம் என்று தீர்மானம் எடுத்து அது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஜனவரி 26 - "இந்திய குடியரசுத் தினம் ( Republic Day of India)" ஆகும். இந்த நாளுக்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு மன்னரால் அல்லது ஒரு பேரரசரால் ஆளப்படவில்லை. மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களால் இந்தியா ஆளப்பட்டு வருகிறது.எனவே இந்தியாவை ஆட்சி புரிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும் போது மக்கள் தங்களுக்கு பிடித்த தலைவர்களை MLA, MP ஆக தேர்ந்தெடுக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் தரும் கையூட்டுத் தொகையை பணத்தை பெற்றுக் கொண்டு பணம் கொடுத்தவர்களுக்கு ஓட்டுப் போடக்கூடாது. அவ்வாறு பணத்தை பெற்றுக்கொண்டு பணம் கொடுத்தவர்களுக்கு ஓட்டுப் போட்டால் தேவன் நமக்கு கொடுத்த சுதந்திரத்தை குடியரசு ஆட்சி முறையை நாம் அவமதிக்கிறோம் என்று பொருள் ஆகும்.ஒரு நாடு சிறந்த நாடாக இருக்க தங்களது நாட்டின் சட்டத்தின் படி அங்கு ஆட்சி நடைபெற வேண்டும்.
இந்தியாவில் அனைவரும் சமம்.
ஆண் பெண் பாகுபாடு இல்லை.
உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு இல்லை.இந்தியாவில் சாதி பாகுபாடு பார்ப்பது குற்றம்.கர்த்தர் நமக்கு கொடுத்த சுதந்திரத்தை குடியரசு ஆட்சியை நாம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை கடை பிடிப்பதன் மூலமாக பாதுகாக்கலாம்.
பழைய ஏற்பாட்டில் கடவுள் பத்து கட்டளைகளை( Ten Commandments) யாத் 20:1-17) கொடுத்தார். அதில் ஒரு மனிதன் கடவுளுக்குச் செய்ய வேண்டிய 4 கட்டளைகள் ஒரு கற்பலகையிலும் இரண்டாவது கற்பலகையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் 6 கட்டளைகளும் கொடுக்கப்பட்டது. Man to God 4 commandments & Man to Man 6 commandments. பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்தில் மொத்தம் 613 கட்டளைகள் காணப்படுகின்றன. இதில் செய் (Do) என்ற கட்டளைகள் 248 ம் செய்யாதே என்ற கட்டளைகள் 365 (Don't Do) ம் காணப்படுகின்றன. கர்த்தர் நீதியுள்ளவர். பாரபட்சம் அற்றவர். ஒரு நீதியான சமுதாயத்தை உண்டாக்க கர்த்தர் தமது மக்கள் தனது கட்டளைகளை கடை பிடிக்க கட்டளையிட்டார். புதிய ஏற்பாட்டில் /புதிய உடன்படிக்கையில் ( New Testament) இயேசு பழைய ஏற்பாட்டு பத்து கட்டளைகளை இரண்டு கட்டளைகளாக சுருக்கி விட்டார். மனிதன் கடவுளை முழுமையாக நேசிக்க வேண்டும் என்பது இயேசுவின் முதல் கட்டளை." நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூறுவாயாக."
(உபாகமம் 6:5). இயேசுவின் இரண்டாவது கட்டளை நீ உன்னை நேசிப்பது போல உன் பிறனை/ உன் அயலானை நேசிக்க வேண்டும் என்பதே. "பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூறுவாயாக, நான் கர்த்தர்."
(லேவியராகமம் 19:18) இதுவே புதிய உடன்படிக்கையில் இயேசுவின் முக்கியமான போதனையாகும்( காண்க மாற்கு 12:28-31).
இயேசுவின் போதனையை பின்பற்றி நடக்கும் போது ஒரு நீதியான நேர்மையான சமாதானமான ஒரு சமுதாயம் இந்த உலகில் தேவனுடைய திருச்சபையின் மூலமாக உண்டாகும்.
ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை, ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது(மத்தேயு 7:24-25).
இந்த குடியரசு தினத்தில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கூறும் நீதியை நியாயத்தை கடைபிடித்து ஒரு சிறந்த குடியரசாக இந்தியா திகழ நாம் காரணமாக இருப்போம். அதேபோல் இயேசுவின் நீதியான போதனையை நாம் கடைபிடித்து இயேசு ஏற்படுத்திய இறையரசை நாம் இந்த பூமியில் வளரச்செய்வோம்.தந்தை மைந்தன் தூய ஆவியானவராகிய மூவொரு கடவுள் நமக்கு அருளைத் தந்தருள்வாராக! ஆமென்.
பாஸ்டர் S. ஜான் மதியழகன்
கொரட்டூர் RS , சென்னை -600076.
Ct.No.: +91 9952004047.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: