மார்கழி 15: ஆண்டாள் & மாணிக்கவாசகர் பாசுரங்கள் | திருப்பாவை & திருவெம்பாவை | Star Media
Автор: SM Divine TV
Загружено: 2025-12-29
Просмотров: 2406
Описание:
🌸 மார்கழி | திருப்பாவை & திருவெம்பாவை – தெய்வீக பாசுரங்கள் 🌸
🎶 பாடகர்: பவதாரிணி அனந்தராமன் 🎼 இசை: சிவபுராணம் டி.வி. ரமணி 📺 வழங்குபவர்: Star Media
🌼 திருப்பாவை – பாசுரம் 15
“எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன் வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.”
📖 பொருள்
“ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இன்னும் உறங்குகிறாயே?” என்று தோழிகள் அழைக்க...
“சற்று பொறுங்கள்! சில்லென்று கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன்" என்கிறாள் அவள்.
“உன்னுடைய சாமர்த்தியப் பேச்சுக்கள் நாங்கள் முன்பே அறிந்தது தானே! இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு எங்களிடமே கோபிக்காதே” என்கிறார்கள் இவர்கள்.
“சரி.. சரி... நீங்களே பேச்சில் வல்லவர்கள்! நான் ஏமாற்றுக்காரியாகவே இருந்து விட்டுப் போகிறேன்” என்கிறாள் அவள்.
“சீக்கிரம் எழுந்து வா! உனக்கு மட்டும் என்ன தனிச் சிறப்பு? எல்லாரும் வந்துவிட்டார்களா?” என அவள் கேட்க...
“நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய யானையை அழித்தவனும், எதிரிகளை வெல்லும் மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய்!”
✨ விளக்கம்
ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள்.
தோழிகளுக்குள் நடக்கும் செல்லச் சண்டையும், ஊடலும், கூடலுமாக நகைச்சுவை ததும்பும் பாடல் இது.
"நான் தான் தவறு செய்தேன்" என ஒப்புக் கொள்வதும், "எல்லாரும் வந்துவிட்டார்களா" என உறுதி செய்வதும், அடியார்கள் கூட்டத்தோடு சேர்வதில் ஆண்டாளுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது.
தோழியை எழுப்பும் படலம் இப்பாடலோடு இனிதே நிறைவுறுகிறது.
🌺 திருவெம்பாவை – பாசுரம் 15
“ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும் ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.”
📖 பொருள்
அவ்வப்போது "எம்பெருமான்" என்று சொல்லிச் சொல்லி, நம்பெருமானின் பெருமையையே வாய் ஓயாமல் பேசுகிறாள்.
உள்ளமெல்லாம் மகிழ, எப்பொழுதும் விடாது தாரைதாரையாக கண்ணீர் வழிய, இறைவனையே எண்ணி உருகுகிறாள்.
இவள் இவ்வுலக நினைவுக்கே திரும்புவதில்லை! வேறு தேவர்களை இவள் பணிவதில்லை!
பேரரசனாகிய இறைவன்பால் இப்படி பித்துப்பிடித்து இருக்கிறாளே! இப்படி பக்தர்களை ஆட்கொள்ளும் வல்லவராகிய சிவபெருமானின் திருப்பாதத்தையும் வாயாரப் பாடி...
கச்சை அணிந்த பெண்களே! நாம் நேர்த்தியான, மலர் நிறைந்த இந்த நீரில் ஆடி மகிழ்வோம்!
🌸 மார்கழி ஆன்மிக செய்தி
மார்கழி வழிபாடு என்பது வெறும் சடங்கு அல்ல, அது ஒரு பரவச நிலை.
திருப்பாவை – அடியார்கள் ஒன்றுகூடிப் பேசுவதில் உள்ள இன்பத்தையும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பண்பையும் உணர்த்துகிறது.
திருவெம்பாவை – இறைவனின் நினைவில் மெய்மறந்து இருத்தலே உண்மையான பக்தி என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த தெய்வீக காணொளியில், திருப்பாவையும் திருவெம்பாவையும் பக்தி, தூய்மை மற்றும் ஆன்மிக ஆழத்துடன் அழகாக வழங்குகிறார் பவதாரிணி அனந்தராமன்.
சிவபுராணம் டி.வி. ரமணி அவர்களின் இசை, இந்த பாசுரங்களுக்கு மேலும் உயிரும் ஆன்மிக நெகிழ்ச்சியும் சேர்க்கிறது.
இந்த மார்கழி காலையில், இந்த பாசுரங்களை பக்தியுடன் கேட்டு, கண்ணனின் லீலைகளையும் ஈசனின் ஆட்கொள்ளும் திறனையும் ஒருங்கே அனுபவியுங்கள் 🙏🕉️
📌 Star Media உடன் இந்த ஆன்மிகப் பயணத்தில் இணைந்திருங்கள்.
#Margazhi #Margazhi15 #Thiruppavai #Thiruvembavai #TamilDevotional #Bhakti #Andal #Manickavasagar #StarMedia
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: