மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா அமைச்சர்கள் மாலை அணிவித்தனர்
Автор: Dinamalar District News
Загружено: 2023-05-23
Просмотров: 20840
Описание:
மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது சதயவிழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள சிலைக்கு கலெக்டர் பிரதீப் குமார், சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏக்கள் பழனியாண்டி, தியாகராஜன், சௌந்தர பாண்டியன், மேயர் அன்பழகன், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுகவினர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது அதிமுகவினரும் அங்கு குவிந்தனர்.
திமுக எம்எல்ஏக்கள் கதிரவன், தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினரின் கார்களும், முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி பரஞ்சோதி உள்ளிட்ட அதிமுகவினரும் ஒரே நேரத்தில் செல்ல முற்பட்டனர்.
போலீசார் திமுகவினரின் கார்களுக்கு வழி விட்டு, அதிமுகவினரை நடந்து செல்லுமாறு கூறினர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இறங்கி வர தாமதம் ஆனது.
இதனால் சிலை அமைந்துள்ள ஒத்தக்கடை பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
போக்குவரத்து நெரிசலில் இரண்டு ஆம்பூலன்சுகள் சிக்கி கொண்டன. சைரன் அடித்தும் முன்னாள் நின்ற அதிமுகவினர் கண்டுகொள்ளவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு அதிமுகவினர் சென்ற பிறகே ஆம்பூலன்சுக்கு வழிகிடைத்தது.
சிலைக்கு மாலை அணிவிக்க கட்சியினருக்கு நேரம் ஒதுக்கி குறிப்பிட்ட நேரத்தில் அனுமதித்தால் இதுபோன்ற சிக்கல் வராது என பொதுமக்கள் தெரிவித்தனர்.#திருச்சி #Tiruchirappalli
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: