ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

"அரியானை அந்தணர்தம்" முயற்சிகளுக்குபலன் அப்பர் அருளியது நன்றி குரலினை திருத்தணி சாமிநாதன் ஓதுவார்

Автор: Siva Vaithilingam Pondicherry

Загружено: 2023-04-16

Просмотров: 4711

Описание: தலம் சிதம்பரம்
கோயில்.(தில்லை)

திருநாவுக்கரசர் தேவாரம்.

ஆறாம் திருமுறை.

பண் : திருத்தாண்டகம்.

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 1.

கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
வானவர்க ளெப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 2.

கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 3.

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 4.

அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 5.

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 6.

வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச்
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 7.

காரானை யீருரிவைப் போர்வை யானைக்
காமருபூங் கச்சியே கம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட் கணியான் தன்னை
அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 8.

முற்றாத பால்மதியஞ் சூடி னானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 9.

காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 10.

திருச்சிற்றம்பலம்.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
"அரியானை அந்தணர்தம்" முயற்சிகளுக்குபலன் அப்பர் அருளியது நன்றி குரலினை திருத்தணி சாமிநாதன் ஓதுவார்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

"கொங்கை திரங்கி" காரைக்கால் அம்மையார் அருளியது நன்றி குரலிசை by. கரூர் சாமிநாதன் ஓதுவார் அவர்கள்

⚡️ Истребители НАТО открыли огонь || Путин срочно направляет спецборт

⚡️ Истребители НАТО открыли огонь || Путин срочно направляет спецборт

Что бы вы сказали, если бы ваш любимый Наянмар появился до вас? | Храмы Шивы и самадхи Дживы

Что бы вы сказали, если бы ваш любимый Наянмар появился до вас? | Храмы Шивы и самадхи Дживы

Киев резко сменил тон / Срочное заявление Зеленского

Киев резко сменил тон / Срочное заявление Зеленского

மாதர்ப் பிறைக்கண்ணி யானை|திருவையாற்றில் அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகம்.

மாதர்ப் பிறைக்கண்ணி யானை|திருவையாற்றில் அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகம்.

"உண்மை விளக்கம்" | செம்பொருள் துணிவு பயிற்சி வகுப்பு 01 | சைவ சித்தாந்தம் | ரமேஷ்குமார் ஐயா

Ariyaanai Andhanar

Ariyaanai Andhanar

" ஏதும் ஒன்றும் அறிவு இலர்" நோய்கள் அகல அப்பர் அருளியது குரலிசை by. மயிலை Pa. சற்குணநாதர் ஓதுவார்

"வாழ்க அந்தணர்" எல்லாம் நலன்களும் தரும் மதுரையில் திருஞானசம்பந்தர் அருளிய பதிகம்

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் | Kandar Alangaram | Powerful Murugan Devotional | OM TV

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் | Kandar Alangaram | Powerful Murugan Devotional | OM TV

"ஏடுமலி கொன்றையர"பழி பாவங்கள் நிவர்த்தி சம்பந்தர் அருளியது குரலிசை by. மயிலை Pa. சற்குணநாதர் ஓதுவார்

"மீளா அடிமை உமக்கே" ஆழ்ந்த கவலைகள் போக சுந்தரர் அருளியது நன்றி By குரலிசை P.சம்பந்த குருக்கள்

Koil (Chidambaram) -Ariyaanai Anthanartham

Koil (Chidambaram) -Ariyaanai Anthanartham

திருஞானசம்பந்தர் திருநீலகண்ட திருப்பதிகம் | Thirugnanasambanthar’s Thiruneelakanda Pathigam

திருஞானசம்பந்தர் திருநீலகண்ட திருப்பதிகம் | Thirugnanasambanthar’s Thiruneelakanda Pathigam

Chidambaram Thevaram- Dharmapuram P.Swaminathan -சிதம்பரம் பாடல்கள் -தருமபுரம் பி.சுவாமிநாதன்

Chidambaram Thevaram- Dharmapuram P.Swaminathan -சிதம்பரம் பாடல்கள் -தருமபுரம் பி.சுவாமிநாதன்

Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

"பற்றற்றார் சேர்" சிவனை வணங்கும் முறைபற்றி அப்பர் அருளியது நன்றி குரலிசை வயலூர் பாலசந்தர் ஓதுவார்

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

"Meiyya Mutra"கடன்கள் இல்லாமல் வாழ சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது நன்றி By P.சம்பந்த குருக்கள்

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]