துணைக்கு வரும் சிவன் | அகத்தியர் சிவ மந்திரம் | Agathiyar Siva Manthiram
Автор: Aalayam Selveer
Загружено: 2019-04-27
Просмотров: 370865
Описание:
Agathiyar Siva Manthiram in Tamil(Agathiyar Siva Manthiram) - Shiva Mantra Tamil - Sivan Manthiram Tamil
இந்த மந்திரம் அகத்திய பெருமான் இயற்றிய பரிபாஷை 300 என்னும் நூலில் உள்ளது. நாம் ஏற்கனவே அந்த நூலில் இருந்து செல்வம் கொழிக்க சுவர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம் பற்றி ஒரு பதிவை வெளியிட்டுஇருந்தோம். அதே நூலில் சிவ மற்றும் சக்தி மந்திரங்களும் பற்றியும் அகத்திய பெருமான் அருளியுள்ளார்.
அகத்தியர் சிவ மந்திரம் பாடல் :
செய்யப்பா சிவத்தினுட மந்திரந்தான்கேளு
சீரான யென்மகனே கண்ணேசொல்வேன்
செய்யப்பா தெங்கென்றுங் கிலிவாவென்றும்
செயங்கொள்ளப் பிரபஞ்சம் வாவாவென்றும்
கையப்பா ஐயுமென்றும் ஸ்ரீறீங்கென்றும்
காமனையுந் தான்வென்ற யீஸ்வராவாவா
நொய்யப்பா நூற்றெட்டு உருவேயானால்
நோக்குமுன்னே சிவனங்கே வருவார்பாரே. ( பாடல் 85 - பரிபாஷை 300)
அகத்தியர் சிவ மந்திரம்:
"ஓம் தெங் கிலி வா செயங்கொள்ளப்பிரபஞ்சம் வாவா
ஐயும் ஸ்ரீறீங் காமனையும்தான் வென்ற ஈஸ்வரா வாவா"
Agathiyar Siva Manthiram:
"OM THENG KILI VA SEYANGKOLLAPRAPANJAM VAVA
IYUM SREEREENG KAMANAYUMTHAN VENDRA ESWARA VAVA"
அகத்தியர் சிவ மந்திரம் பொருள்:
மகனே சிவபெருமானின் மந்திரத்தை சொல்கிறேன் கேள், தூய்மையான ஓர் இடத்தில் அமர்ந்து உடல் மற்றும் மன சுத்தியுடன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து இம்மந்திரத்தை செபிக்கவும்.
என்று 108 உரு செபித்து பின்னர் நாம் எண்ணுகின்ற எந்த செயலையும் தொடங்கி செயல்பட்டால் அதற்கு துணையாக சிவபெருமானே உடன் வருவார் என்கிறார் அகத்திய பெருமான்.
மேலும் இந்த மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் பாடல் 89ல் அகத்திய பெருமான் குறிப்பிட்டிருக்கிறார்.
பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம்
பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
அல்லதா லின் னூலே சொல்லும்பாரே. (பாடல் 89 - பரிபாஷை 300)
சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து வழி நடத்தி சொல்லும் என்றும் சொல்கிறார் அகத்திய பெருமான்.
எனவே, எல்லாம் வல்ல குருநாதரை மனதில் தியானித்து மிகவும் எளிதான இந்த மந்திரத்தை பயன்படுத்தி, நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் பெற குருவருள் துணை நிற்க நாங்க வாழ்த்தி வாங்குகின்றோம்.
#aalayamselveer #agathiyarsivamanthiram
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: