VLR INDIAN AGRI RESAERCH DIRECTOR SELVRAAJAN SPEECH AGRI EXPO
Автор: tamizh vazhga
Загружено: 2026-02-05
Просмотров: 92
Описание:
வேலூர் 5-2-26
காட்பாடியில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு உழவர் சங்கமம் 2026 - அரிசி ஏற்றுமதியில் இந்தியா ஆண்டுக்கு 80 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்கிறது - இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் செல்வராஜன் பேச்சு
___________________________________________________
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உழவர் சங்கமம் 2026 வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெறுகிறது இக்கண்காட்சி துவக்க விழா வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் கௌரவ விருந்தினர்களாக கொரமண்டல் இண்டர் நேஷனல் துணை தலைவர் சீனிவாசன் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவன மாநில விற்பனை மேலாளர் சுரேஷ்,சிறப்பு விருந்தினராக இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் செல்வராசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவங்கினார் இதில் பல்வேறு வாழைகள் உரங்கள் கருவிகள் வேளாண் நவீன தொழில்நுட்பங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது நாளையும் இக்கண்காட்சி நடைபெறுகிறது இதில் வேந்தர் விசுவநாதன் பேசுகையில் தடுப்பணைகளை கடலுக்கு அதிக அளவு செல்லாமல் தடுக்க வேண்டும் விவசாயத்திற்கு நீர் பற்றாகுறை ஏற்படுகிறது எனவே கடலுக்கு செல்லும் நீரை ஏரிகளுக்கு தேக்க வேண்டும் குடிமராமத்து பணிகளை செய்ய வேண்டும் நதிகளை இணைக்க மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும் இவ்வாறு செய்தால் நீர் கிடைத்து இதன் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும் இதனை மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டுமென பேசினார்
இதில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் செல்வராசன் பேசுகையில் இந்தியா 6.6 மடங்கு அதிகமான உணவு உற்பத்தியை செய்கிறது 353மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி தோட்டகலையில் 360 மில்லியன் டன்னும் செய்கிறோம் பாஸ்மதி மற்றும் பிற அரிசிகளும் சேர்த்து 80 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்து வருகிறோம் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு செய்துள்ளோ, அக்காலத்தில் 17 மில்லியன் டன் பால் உற்பத்தி ஆனால் தற்போது தொழில் நுட்பங்களால் பால் உற்பத்தி தற்போது 240 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது மீன் 2.4 மில்லியன் டன் இருந்தது இப்போது 14.7 மில்லியன் டன் மீன் உற்பத்தி செய்கிறோம் சிறுதானியங்கள் தற்போது 2023 சிறுதானியங்கள் கொண்டாடினோம் அதன் மதிப்பு உயர்ந்துள்ளது விலையும் உயர்ந்துள்ளது விஞ்ஞானிகளும் உழவர்களும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தியதால் நெல்லில் கோதுமையில் உற்பத்தியில் உலகளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம் வாழை உற்பத்தியில் உல்களவில் முதலிடத்தில் இருக்கிறோம் ஏற்றுமதி வருடத்திற்கு 8 லட்சம் டன் செய்கிறோம் இதன் மூலம் 4 ஆயிரம் கோடி வாழைப்பழ ஏற்றுமதியில் வருகிறது விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமென என பேசினார்
இந்த உழவர் சங்கமத்தில் வேலூர் ராணிப்பேட்டை,திருப்பத்தூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: