முருகனிடம் கேள்வி கேட்டால் பதில் கிடைக்குமா? அப்படி கேட்டால் முருகன் சொல்வதை எப்படி புரிந்து கொள்வது
Автор: arul velmurugan அருள் வேல்முருகன் 🦚
Загружено: 2026-03-12
Просмотров: 323
Описание:
நாம் எல்லாரும் முருகனை மனசார கும்பிடுறோம்.
ஆனா வாழ்க்கையில் சில நேரங்களில் கஷ்டம், துன்பம், நெருக்கடி வந்தால்…
“ஏன் முருகன் இப்படி கஷ்டம் கொடுக்கிறார்?” என்ற கேள்வி நமக்கு வருவது இயல்பு.
ஆனா உண்மையா பார்த்தா…
முருகன் நமக்கு கஷ்டம் கொடுக்குறது நம்மை கைவிடுவதற்காக இல்ல.
அந்த கஷ்டத்தின் வழியாக ஒரு உண்மை, ஒரு பாடம், ஒரு வழி காட்டுவதற்காக.
நாம் மனசார முருகன் கிட்ட கேள்வி கேட்டால்…
அவர் ஒரு சைகை மூலமா, ஒரு பூ விழுதலாலயோ, வேல், மயில், சேவல் மூலமாவோ, சில சமயம் கனவில் கூட நமக்கு பதில் சொல்வார்.
இந்த வீடியோவில்
ஒரு சகோதரி கேட்ட கேள்விக்கு நான் சொல்லிய பதிலும்
என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை அனுபவத்தையும் பகிர்கிறேன்.
எனக்கும் சில மாதங்களுக்கு முன்பு பித்தப்பை பிரச்சனை வந்தது.
அப்ப என்ன செய்யணும் என்று தெரியாமல் இருந்த நேரத்தில்…
முருகன் ஒரு கனவு மூலமாக ஒரு சைகை கொடுத்தார் என்று நான் நம்புகிறேன்.
நமக்கு வரும் இந்த உடம்பு, இந்த வாழ்க்கை எல்லாமே
பாவம் – புண்ணியத்தின் விளைவு.
அதனால் கஷ்டம் வந்தாலும்
“இது என் முருகன் கொடுத்ததுதான்” என்று நம்பிக்கையோடு எடுத்துக்கொண்டால்
அவர் நமக்கு கண்டிப்பாக ஒரு வழி காட்டுவார்.
முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
ஓம் சரவணபவ. 🔱🙏
#murugan
#muruganarul
#omsaravanabhava
#muruganbakthi
#murugandevotees
#murugansongs
#muruganstory
#muruganinspiration
#muruganblessing
#tamilspiritual
#tamilbakthi
#tamildevotional
#spiritualtamil
#bakthivideo
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: