லக்ஷ்மி கடாக்ஷத்திற்கு | வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும் | ஜோதிடர் A.M.ராஜகோபாலன் | Astrologer AMR
Автор: ஞான வாள்—The Sword of Knowledge
Загружено: 2021-06-30
Просмотров: 25761
Описание:
யத்ர யோகேஷ்வர: க்ரு'ஷ்ணோ யத்ர பார்தோ தனுர்-தர:
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம
யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ, உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ, அங்கெல்லாம் நிச்சயமாக செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
—பகவத் கீதை 18:78
பகவத் கீதை திருதராஷ்டிரரின் வினாவுடன் தொடங்கியது. பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலிய மாபெரும் வீரர்களின் உதவியால் தனது மகன்களது வெற்றியின் மீது திருதராஷ்டிரர் நம்பிக்கை கொண்டிருந்தார். வெற்றி தன் பக்கமே என்று அவர் நம்பியிருந்தார்.
ஆனால் போர்க்களத்தின் நிலையை விவரித்த பிறகு, “நீங்கள் வெற்றியைப் பற்றி எண்ணிக் கொண்டுள்ளீர், ஆனால் எனது அபிப்பிராயம் என்னவெனில், கிருஷ்ணரும் அர்ஜுனனும் எங்குள்ளார்களோ, அங்கே எல்லா நல்ல திர்ஷ்டங்களும் இருக்கும்” என்று மன்னனிடம் சஞ்ஜயன் கூறுகின்றான்.
திருதராஷ்டிரர் தனது பக்கத்தில் வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்று அவன் நேரடியாக உறுதி செய்கின்றான். கிருஷ்ணர் அர்ஜுனனின் பக்கத்தில் இருப்பதால், அங்கு வெற்றி நிச்சயம். அர்ஜுனனின் சாரதி என்னும் நிலையை கிருஷ்ணர் ஏற்றுக் கொண்டது அவரது மற்றொரு ஐஸ்வர்யத்தைக் காட்டுகின்றது. கிருஷ்ணர் எல்லா ஐஸ்வர்யங்களும் பூரணமாக நிறைந்தவர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: