ஊரகத்திலிருந்து உயர் கல்வி பயணம்
Автор: பாடம் PAADAM
Загружено: 2026-01-11
Просмотров: 13
Описание:
ஊரகத்திலிருந்து உயர்கல்வியை நோக்கிய பயணம்!
--------------
கூலி வேலைக்கு செல்லும் தாய் தந்தையர்கள்.
எளிய குடும்பப் பின்னணி.
ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் வறுமைக் கோடுகள்....
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் நிலை இதுதான்.
பள்ளியில் என்ன நடத்தினார்கள்? வீட்டுப்பாடம் எழுத வேண்டுமா? எப்பொழுது தேர்வு? இப்படி எல்லாம் அங்குள்ள பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கேட்க மாட்டார்கள்.
ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை தாய்மையாய் பராமரிக்கும்.
அண்ணன் குழந்தைகள் அக்கா குழந்தைகள் என இப்பள்ளியின் சிறுமிகள் பராமரிக்க வீட்டில் இன்னொரு குழந்தை இருக்கும்.
சிறுமிகளின் மேற்பார்வையில் வீட்டை விட்டு விட்டு தாய் தந்தையர்கள் கூலி வேலைக்கு படையெடுத்து விடுவார்கள்.
வீடு பெருக்குவது, சோறாக்குவது, குழம்பு வைப்பது, பாத்திரம் விளக்குவது அத்தனையும் சிறுமிகள் தான்.
குழந்தைகளை ஆடு மாடு மேய்க்க அனுப்புவது இவர்களுக்கு ஒன்றும் அவமானமாக தெரிவதில்லை.
கீழத்தெரு மேலத்தெரு வடக்குத்தெரு கோவில் தெரு என பரந்த வீதிகள் நிறைந்த பெரிய ஊராட்சி செங்கமங்கலம்.
ஒரு சில குடும்பங்களை தவிர ஏனையர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகி வரும் தமிழ்நாட்டில் செங்கமங்கலம் - மேலத்தெரு மாணவர்களை முதல் தலைமுறையாக பள்ளிக்கூடம் வர வைப்பது இப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சவாலாக இருக்கிறது.
மெல்ல கற்கும் மாணவர்களான மேலத்தெரு மாணவர்கள், வகுப்புக்கு வருவதையே விரும்புவதில்லை.
தமிழ்நாடு அறக்கட்டளையின் ஏபிசி திட்டம் இப்பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மேலத்தெரு பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகள் வாசிப்பதை முதல் முறையாக கேட்டு ரசிக்கிறார்கள்.
தனது பிள்ளைகளின் படிப்பை தற்பொழுது தான் பெருமை பொங்க பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் பெற்றோர்கள்.
கல்லூரியில் தான் கண்டதை கூறும்பொழுது மகேஸ்வரியின் கண்கள் விரிகிறது. அதில் அவளின் உயர்கல்வி கனவு வெளிச்சமாய் சுடர் விடுகிறது.
"வாய் திறந்து பேச மாட்டாள் எப்படி பேசுகிறாள் பாருங்கள்" என்று ஆசிரியர்கள் மகேஸ்வரி குறித்து வியப்படைகிறார்கள்.
பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்கள் அத்தனையும் மேலத்தெரு மக்களிடமும் காண முடியும்.
படிப்படியாக படித்து முன்னேறி வருகிறார்கள்.
கல்வி ஒரு வலிமையான ஆயுதம் என்பதை என்பதை அப்பகுதி அழகாக வெளிப்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அறக்கட்டளையின் ஏபிசி திட்டம் இவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியதாக பள்ளி தலைமை ஆசிரியர் பெருமிதத்தோடு கூறுகிறார்.
இப்பள்ளி மாணவர்களை அருகிலுள்ள ஆவணம் கலாம் பல் தொழில் நுட்பக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று வந்தது தமிழ்நாடு அறக்கட்டளை.
கல்லூரி கல்விப் பயணம் இவர்களுக்கான கல்விச் சிறகுகளை முளைக்க வைத்திருக்கிறது. பறப்பதை யாராலும் தடுக்க முடியாது.
பொறியியல் ஆய்வுக்கூடங்களில் கருவிகளை இயக்குவது குறித்து பேராசிரியர்கள் பேசும் பொழுது மாணவர்களின் கைகள் அதை பரீட்சித்துப் பார்த்து விட வேண்டும் என்ற உணர்வு மேலிடுவதை அவர்களின் உற்சாகம் நிறைந்த உடல் மொழி வெளிப்படுத்தியது.
மீன்களைக் கொடுப்பதற்கு பதிலாக மீன்பிடிக்க கற்றுக் கொடுக்கிறது தமிழ்நாடு அறக்கட்டளை.
கல்வி எனும் பெருநெருப்பு அவர்களை சமைக்கும். சமூகத்தில் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளை கடந்து அவர்கள் வாழ்க்கையில் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: