கொங்கு வேளாளர் திருமணம் பட்டினிச்சீர் செய்யும் முறை..
Автор: Eswaran arumugam
Загружено: 2021-09-09
Просмотров: 1917190
Описание:
கொங்கு வேளாளர் திருமணத்தில் பட்டனிச்சீர் என்பது முக்கியமானது. இது மணமகன் வீட்டிலும், மணமகள் வீட்டிலும் திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும்.இதனை மங்கல நீராட்டல் அல்லது புனித நீராட்டல் என்றும் கூறுவார்கள். திருமண நாளுக்கு முன்பு பெண் வீட்டில் அல்லது திருமண மண்டபத்தில் இந்த சீர் நடக்கும். இங்கு நடைபெறும் சீர் சூலூர் அருகேயுள்ள செங்கந்துறையில் என் தங்கை மகள் செல்வி .எஸ்.விஷ்ணுப்பிரியாவிற்கு 9-9-2021 அன்று வீட்டில் நடைபெற்ற சீராகும்.
இந்தச்சீரின் போது பகலாக இருந்தாலும் வண்ணார் பந்தம் பிடிப்பார். கொங்கு நாவிதர் இந்தச்சீரினை அருமைக்கார அம்மாவிற்கு கூற அவர் செய்வார். இந்தப்புனித நீராட்டலின் போது மணப்பெண்ணை கிழக்கு முகமாக உட்காரவைப்பார்கள். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து பிசைந்த சோறு ஏழு உருண்டை செய்வார்கள். அருமைக்காரி சருவச்சட்டியில் தண்ணீர் ஊற்றி மூன்று முறை தெளித்து ஊற்றுவார். அதன் பின் இந்த செஞ்சோறு உருண்டையை தலை, தோள்பட்டை , இரு கை மணிக்கட்டு , கால் பாதங்களில் வைத்து எடுப்பார்கள். பின் வெற்றிலை மடித்து கொடுத்து மென்று துப்பச்சொல்வார்கள். சில ஊர்களில் புளியமார் வைத்து அதனை தாண்டவும் (ஆக்கை போடுதல்) சொவார்கள். இந்தச்சமயத்தில் பலருடைய வாழ்த்துக்கள் பெண்ணிற்கு கிடைக்கும். இதன் பின் பெண்ணிற்கு புத்தாடை அணிவிப்பர். இந்த நீரினால் நனைந்த ஆடை தானமாக வழங்கப்படும்.
செஞ்சோறு சுற்றுதல் என்பது மணப்பெண்ணிற்கு திருஷ்டி கழிப்பதாகும். இந்த சீரினை அருமைக்காரியும், விஷ்ணுவின் அத்தையுமான திருமதி.சிவகாமி(எனது துணைவியார்) அவர்கள் சீர் செய்கிறார். இந்த சீரின் போது மணப்பெண்ணிற்கு சீர்க்காரம்மா தண்ணீர் ஊற்றவேண்டும். மணமகளின் அத்தை மணப்பெண்ணின் தலைக்கு தண்ணீர் வார்க்கவேண்டும். இதன் பின் மாமா மற்றும் அத்தை முறையாகும் உறவினர்களின் குழந்தைகள் சிறுவர், சிறுமியர் தமாசுக்காக பழைய சோறு, சாம்பார், வேப்பம் தழை , பூக்கள் போன்றவற்றை தண்ணீரில் கலக்கி மணப்பெண்ணின் மீது வேடிக்கைக்காக ஊற்றும் காட்சியினையும் பார்க்கலாம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: