வியாசர்பாடி வீடு ஒதுக்க கோரி சாலை மறியல் ஈடுபட்ட vanilla பெண் மாத்திரையை உட்கொண்டு மயக்கம் அடைந்தார்
Автор: தமிழ் 3 நீயூஸ்
Загружено: 2026-02-27
Просмотров: 153
Описание:
#தமிழ்3நியூஸ்# #வியாசர்பாடி# #சாலைமறியல்# #வெண்ணிலா#
வியாசர்பாடியில் வீடு ஒதுக்க கோரி மக்கள் சாலை மறியல்: பெண் மாத்திரை உட்கொண்டு மயக்கம்! வியாசர்பாடி:
சென்னை பெரம்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் சுடுகாடு எதிரே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான காலியிடத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 190 குடும்பங்கள் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த இடத்தை காலி செய்ய தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. தங்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்க வேண்டும் என
வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை 4 மணி அளவில் வியாசர்பாடி அசோக் பில்லர் புதிய மேம்பாலம் அருகே அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அலுவலகம் அருகே சுமார் 100 க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மறியலின் போது மாற்று இடம் வழங்கப்படாமல் அலைக்கழிக் கப்படுவதாகக் கூறி வெண் ணிலா என்கிற பெண்மணி திடீரென மாத்திரைகள் உட்கொண்டு மயங்கி விழுந் தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்தவர் கள் அவரை ஆட்டோவில் ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்ததையடுத்து, அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: