திருவுந்தியார் - திருவாசகம் - வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
Автор: Bhairava Yugam
Загружено: 2025-06-26
Просмотров: 2677
Описание:
#SriThiripuraBhairaviAmbikaSamed #SriBhairaveshwaraSwami
#Thavathirubhairavaswamigal #Sribhairavanilayam #Bhairavartemple #kalabhairavatemple
------------------------------------------------------------------
திருவாசகம் - திருவுந்தியார்
திருச்சிற்றம்பலம்
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற. 296
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழந்தன முப்புரம் உந்தீபற. 297
உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண்
டெய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற. 298
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருந்திர நாதனுக் குந்தீபற. 299
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் று தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 300
வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 301
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயேடி யந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற. 302
புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற. 303
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சிய வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 304
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. 305
உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. 306
நாமகள் நாசி சிரம்மி மன்படச்
சோமன் முகன் நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற. 307
நான்மறை யோனும் அகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற. 308
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 309
தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 310
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 311
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 312
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இறுபதும் இற்றதென் றுந்தீபற. 313
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங்காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. 314
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------
📍
Sri Bhairava Nilayam,
kandhikuppam,
Bargur (Taluk),
krishnagiri (dt),
Tamilnadu.
📲+919445291224
-------------------------------------------------------------------
Connect with us on social media🌐
📸Instagram : / bhairavayugam
💙Facebook : / bhairavayugam
📺Youtube : / @bhairavayugam
🧵Threads : https://www.threads.net/@bhairavayugam
----------------------------------------------------------------
#வளைந்தது_வில்லு_விளைந்தது_பூசல் #திருவாசகம் #திருவுந்தியார் #எட்டாம்_திருமுறை #மாணிக்கவாசகர் #Thirumurai #Thiruvasagam #thiruvunthiyar #ugrakalabhairavar #Bhairavayugam #sprituality #divine #devotional #devotionalchannel #devotionalvideo #kandhikuppam #krishnagiri #Bargur #Bhairavayugam
#kandhikuppam_temple #kandhikuppam_kalabairavar_kovil #kandhikuppam_bhairava_temple #kandhikuppam_bhairava_kovil #kandhikuppam_kalabairavar #kandhikuppam_bairavar_temple
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: